Saturday, May 4, 2019

இஸ்லாம்

அப்படி என்ன சொல்லிவிட்டார் ஷா நவாஸ் Sha Navas இஸ்லாமிய இயக்கங்களின் மூளைச்சலவையை இளைஞர் வழிகெட்டு நிற்கும் அவலநிலையை தான் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் .. உடனே சில அடிப்படைவாதிகள் ஏதோ தாங்கள் தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் போலவும் ஒட்டு மொத்த சமூகத்தை வழிநடத்த தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது போலவும் நினைத்துக்கௌண்டு சரமாறியாக வசை பாடுகிறார்கள் .. தெளிவாக உள்ளவர்கள் வெகுமக்கள் ஷாநவாஸ் சொன்னதை சரிதான் கடந்த 25 ஆண்டுகளாக தான் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் அமைதியிழந்த சூழல் நிலவுகிறது இதுவரை இல்லாத மதவெறுப்பு வெளிப்படையாக தெரிகிறது பிற சமூக மக்களிடம் நல்லெண்ணத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்து இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டிருக்கிறதென்ற உண்மையை உணர்ந்து பேசுகிறார்கள் .. .. குறிப்பாக சமீபகாலம் என்பதை வெளிப்படையாக தவ்ஹீத் ஜமாத் வந்ததற்கு பின்னால் என்பதுதான் சரியானதாக இருக்கும் .. கடுங்கோட்பாட்டு நிலைபாடென்பது அறியாமையால் வந்ததல்ல சரியான புரிதல் இல்லாமையால் வந்தது .. இதில் நேரடியாக பாதிக்கபடாதவரை அதை இந்த இளைஞர் சமூகம் உணராதென்றே எண்ணுகிறேன் கோவை குண்டுவெடிப்பு முதல் தொடங்கி திருபுவனம் ராமலிங்க படுகொலை வரை இஸ்லாமிய சமூகத்தின் மீது கைகாட்டுகிற நிலை வர யார் காரணம் .. கோவை பாரூக் படுகொலை அவர் ஏற்றுக்கொண்ட கடவுள் மறுப்பு கொள்கைக்கெதிராக என்றால் எங்கே போகிறது சமூகம் .. இஸ்லாம் போதித்ததை தவறான விளக்கம் தந்து.. குர்ஆன் ஹதீஸ் கருத்துகளுக்கு நேரடியான தர்ஜமா செய்து அதன் காலஅளவு எந்த நேரத்தில் சூழலில் சொல்லபட்டது அது இன்றைய சூழலில் ஏற்புடையதா என்பதையெல்லாம் ஆராயாமல் google translate போல தவறான வடித்ததின் விளைவு இன்று சமூகம் படும் அல்லுக்கெல்லாம் காரணம் .. .. நிறைய முஸ்லிம் ஆளுமைகள் பல்வேறு கருத்து வேறுபாட்டிலும் தாங்கள் சொன்ன கருத்தில் தெளிவாக இந்த மண்ணில் நல்லிணக்கமே பிரதானமாய் கொண்டு செயல்பட்டார்கள் இன்றைக்கு குறிப்பாக இளைஞர்கள் முழுவதுமாக கற்றுணராமல் சிலரின் பேச்சால் அதுதான் சரியான பாதையென செல்வதால் வந்த கெடுதி இது .. மதங்கள் மனித நேயத்தை போதிக்கிறதென்கிற போது அதிலும் இஸ்லாம் நேர்வழியை சொல்கிறதென்றால் அதில் எங்கிருந்து வந்தது வன்முறை ..பழிக்குபழி என்பது தனிநபருக்கானதே தவிர அப்பாவிகளின் மீதான தாக்குதலுக்கல்ல சிலரின் தூண்டுதலால் நடந்தேறுகிற செயல்களுக்கு சமூகம் எப்படி பொறுப்பாகும் என்பதை விடுத்து சமூக பெரியவர்கள் பேச தொடங்குங்கள் .. நல்லதை கெட்டதை அதனால் சமூகம் சந்திக்கிற கொடுமைகளை குறிப்பாக சிறுவர்களிடத்தில் குழந்தைகளிடத்தில் சொல்லுங்கள் வளரும் சமூகம் கல்வியால் மட்டுமே தலை நிமிர முடியுமென எடுத்துக்கூறுங்கள் .. விடுதலை சமயத்தில் ஏறக்குறைய ஒரே விழுக்காடாக இருந்த கிருஸ்துவ சமூகம் இன்று கல்வியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டிருக்கிறது .. நல்ல புரிதலை பெறாத சமூகம் சீரழியும் .. .. முதலில் கோட்பாட்டை சரியாக படித்துணருங்கள் இஸ்லாம் போதிப்பதெல்லாம் தனிமனித ஒழுக்கம் பட்டுமல்ல பிற சமூகத்தின் மீது பற்றும் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பும் தரவேண்டும் என்பதுதான் உணருங்கள் இல்லையென் பொது சமூகம் நம்மை முழுவதுமாக புறக்கணிக்கும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment