Friday, May 10, 2019

பிரித்தாளும் பிரதமர்

இந்திய மக்களை பிரித்தாள்வதில் பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்..... TIME இதழ்.. நாட்டில் நடக்கும் பசுவின் பெயரால் படுகொலைகள் 2017 ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் போன்ற மதவாத சாமியார்களை முதல்வராக அறிவித்தது குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பிரக்யா தாகூரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது .. என மூன்று விடயங்களை சுட்டிக்காட்டுகிறது டைம் .. இந்தியாவின் முகம் இன்று கருத்துப்போனது அகிம்சை பூமியாக அறியபட்ட இந்தியாவில் ஒரு பிரதமரே பிரித்தாள்பவர் என்ற சொல் பெரும் அதிர்வை தந்திருக்கிறது உண்மையில் பிரதமர் வெறும் அம்பு இதன் பின்னில் ஆர்எஸ்எஸ் எனும் விஷமேறிய பாசிச பார்பனீய சித்தாந்தம் இருப்பதை மறைக்க நினைக்கிறோம் .. துறவிகளை அதிகாரத்தில் அமர்த்தி ஒரு சார்பு நிலைப்பாட்டை வெளிப்படையாக செய்கிற சூழலை உருவாக்கி ஹிந்துத்துவா என்ற பெயரில் பார்பனீய மேலடுக்கு அதிகார மையத்தை உருவாக்குவதே அதன் பிரதான நோக்கம் .. சிறுபான்மையினர் மீதான வன்ம போக்கை உக்கிரமாக வளர்த்தெடுத்ததில் .. குறிப்பாக இடைசாதிக்காரனை தூண்டி மதவெறியை தலைக்கேற்றி ஒருவித பயத்தோடு வடமாநிலங்களில் வைத்திருப்பதே சாட்சி.. மத கலவரங்களை வேறுவடிவில் தூண்டிட பிறமதத்தின் மீதான தாக்குதலை வேறுவடிவத்திற்கு கொண்டு சென்றதே மாட்டை காரணம் காட்டி .. எளிய மனிதர்களை கொல்வதை கண்டுக்கொள்ளாமல் கள்ளமௌனம் காத்தது மோடியின் மீதான கடும் விமர்சனத்திற்கு காரணம் .. பச்சிளங்குழந்தைகளுக்கு பிராணவாயு தர காசில்லை என கைவிரித்து மாட்டிற்கு பிராணவாயுவை தர முடிகிற அடிமடையர்களின் கையில் நாடு போனால் இப்படிதான் சர்வதேச அளவில் அசிங்கபடவேண்டிவரும் .. .. தீவிரவாதத்தை ஒழிப்பதாக சொல்லும் அதற்காக மதத்தை குறிவைத்து இஸ்லாமியர்கள் தான் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணமென்று நம்பவைத்து .. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளைப்போல பிற சமூக மக்களிடையே கொண்டு சேர்த்ததில் சங்பரிவார்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் பெரும்பங்குண்டு அதே செயலை இந்துத்துவா என்ற பெயரில் சாதுகள் செய்தால் தேசம் மீட்க வந்த ரட்சகரைப் போல உருவகபடுத்தியலும் ஊடக பங்கு அளப்பரியது .. தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டவரை வேட்பாளராக நிறுத்தி பாஜக தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்ன போதும் யாருமே எதிர்க்கவில்லை கூடவே கொண்டாடாத குறையாக பேசதொடங்கியது கூட மோடியின் மீதான பயம் காரணமாக இருக்கலாம் .. இந்த ஐந்தாண்டில் நாடு .. எல்லா நிலைகளிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது .. மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்குமென எச்சரித்தும் தான்தோன்றித்தனமான செயல்பாட்டால் படுகுழியில் தள்ளியிருக்கிறது மோடியின் அரசு .. .. மதம் என்ற பெயரிலும் சாதிவெறியை இந்து சமூகத்திடையே வெறியோடு வளர்த்து தலித் மக்களின் மீதான தொடர் தாக்குதலை செய்து நிர்வாணமாக விரட்டிய போதும் பிரதமர் மௌனமாய் கடந்து சென்றதும் .. இந்தநாடு பிராமனீய கோட்பாட்டில் மட்டுமே ஆட்சி நடத்தபடுமென அதற்கான ஆயத்தப்பணிகளை தான் மோடி அரசு செய்ததே தவிர பிற சமூக மத மக்களுக்கான அரசாய் செயல்படவில்லை .. மோடி இந்திய சமூதத்தை பன்முகதன்மையை பிரித்தாள்வதில் தான் கவனம் செலுத்தினாரே தவிர இந்தியா பல்வேறு இனத்தின் ஒருமைபாட்டில் எழுப்பட்டிருப்பதை மறந்துப்போனார் இந்திய ஒருமைப்பாட்டை பல்வேறு கலாச்சார பண்பாட்டு மற்றும் மத நம்பிக்கைகளை வெறுக்கிற/தடைசெய்கிற ஒற்றை கலாச்சாரமென்ற பெயரில் பார்பன மேலாதிக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கிற செயலைதான் செய்தார்.. மோடி இந்திய மக்களுக்கான பிரதமராக செயல்படவில்லை .. ஒரு சாராரின் நலனுக்காக பாடுபடுகிற பிரதமர் .. #பிரித்தாளும்_பிரதமர் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment