Tuesday, May 7, 2019

தமிழகம்..?

அடிமைத்தனமும்,அறிவிலித்தனமும் எங்கிருந்து வந்தது அறிவுடைச்சமூகமாய் இனங்காணப்பட்ட தமிழினம் இன்று கிறுக்கர்களின் கையில் சிக்கி தவிக்கிறதா .. எதையும் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட தமிழன் .. இன்று சிலரின் வீராவேச சொல்லிற்கு அடிமைபட்டானா.. எதையும் தெளிவோடு சிந்தித்ததவன் இன்று அறிவிலிகளின் கூப்பாட்டில் செய்வதறியாது நிற்கிறானா .. கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழாரையும் .. மாடல்ல பொருளறியா மடைமையோடும் கழிக்கவேண்டியிருக்கிறது.. அதெல்லாம் கொடுமையில்லை இதையும் கேட்டு ஒரு இளம் சமூகம் கைதட்டுகிறதே அதுதான் கவலைபட வேண்டிய விடயம் .. எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்களென்ற நினைப்பும் தமக்கே எல்லாம் தெரியும் நானே வழிநடத்த அருகதை உள்ளவன் என சொல்லிதிரிவது கூட மடைமைதான்.. .. தமிழக அரசியலில் கொள்கைகளை கடந்து மிகச்சிறந்த அறிவுடையோராய் பல்துறையில் விற்பன்னர்களாய் பேராற்றலுடையாராய் பெருமக்கள் நிறைய இருந்தார்கள் .. மூதறிஞர் ராஜாஜி, சி.எஸ், ஒமந்தூரார் ,பக்தவச்சலம், காமராஜர்.. திராவிட இயக்கத்திலிருந்து பேராசான், பேரறிஞர்,திராவிட பெருவுடையாரென .. சொல்லிக்கொண்டே போகலாம் .. நாவலர், சம்பத், இரா.செழியன் வைகோ, மாறன், ப.சிதம்பரம் ,என அடுக்கிகொண்டே போகலாம் .. அரசியலில் கருத்துவேறுபாடு இருந்த போதிலும் மிகச்சிறந்த ஆளுமைகளாய் அறிவால் திறமையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்கள் .. எதிரெதிராய் நின்ற போதும் சொல்வன்மையால் பிரகாசித்தார்கள் "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்." என்றான் வள்ளுவன் கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்." ஆனால் இன்றோ வாய்க்குவந்ததை பேசி கேனசிரிப்போடு வலம் வந்தால் நல்லவனாகலாம் என எண்ணுகிறார்கள் எதையும் அறிந்து பேசவேண்டுமே தவிர ஏதோ கைத்தட்டல் கிடைக்கிறதென்பதற்காக உளறிவைக்ககூடாது பொய்யாமை நன்று .. .. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதற்குரிய மரியாதையோடு இருக்கவேண்டும் தன் தகுதிக்கு மீறிய பதவி நல்வாய்ப்பில் கிட்டியதால் அதை தக்கவைக்க அடிமையாய் .. பாசிசத்தின் ஏவல்காரனாய், மத்தியில் ஆட்சி செய்வோருக்கு பயந்து நடுங்கி தன்மானமிழந்து .. அடிமையாய் வாழ்வதால் ஒட்டிமொத்த தமிழகமும் தலைகுனிந்து நிற்கிறது .. .. நல்லதொரு தலைமையை வேண்டாமென வைத்ததன் விளைவு .. சில்லரை காசுக்கு ஆசைப்பட்டு முகமிழந்து அஞ்சி ,கேவலபட்டுநிற்கிறோம் .. தன்மானமிழந்து தமிழகமே தலைகுனிவை சந்தித்திருக்கிறது இந்த அடிமைகளால் .. மக்கள் தங்கள் அதிகாரத்தின் மூலம் இந்த கோமாளிகளை அறிவிலிகளை அடிமைகளை விரட்டும் நாளே நன்னாள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment