Tuesday, May 14, 2019

தமிழிசை இம்சை

வகிக்கும் பதவிக்கு தகுந்தாற்ப்போல் பேச்சில்லை தகுதி மறந்து வாய்க்குவந்ததை பேசி கடைசியில் மானங்கெட்டு நிற்பதே பழகிப்போனது .. தமிழிசை பாஜகவில் தலைமையிலிருந்து கடைசி தொண்டன் வரை பொய்களை கூசாமல் பேசுவது சாதாரணம். அரசியலில் அடிப்படை நேர்மை கூட இவர்களுக்கு இருந்ததில்லை வாக்குறுதி பொய் ஆட்சியில் செய்ததாக சொன்ன திட்டங்கள் பொய் எதிர்கட்சிகள் மீது சுமத்தும் குற்றசாட்டுகள் பொய் .. ஒருவரின் தனிப்பட்ட விடயங்களில் அளவிற்குமீறி நுழைந்து மூக்கறுபடுவதும் .. சிலநேரம் மன்னிப்பு கேட்பதும் பாஜகவினருக்கு மட்டுமே உரித்தானது .. .. திமுக பாஜகவோடு பேசி வருவதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சொன்னதும் சில ஊடகங்கள் உடனே அதை பரபரப்பாக்கின .. எப்போதாவது உண்மையை பேசியிருந்தாலாவது பரபரப்பாக செய்தி சொல்லலாம் எப்போதும் பொய் பேசிதிரியும் கூமுட்டைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை .. ஏற்கனவே தெளிவாக இனி எந்த காலத்திலும் எந்த சூழலிலும் பாசிச பாஜகவோடு கூட்டணி இல்லையென தெளிவாக சொல்லிவிட்ட பிறகு நப்பாசையில் சிலதுகள் பாஜகவோடு இணைத்து பேசி திமுகவிற்கு அழுத்தத்தை தர முயற்சிக்கின்றன .. திமுக மிக தெளிவாக இந்த நாட்டிற்கு பாஜக பெரும் கேடு என்பதை உறுதியாக மக்களிடம் எடுத்துச்சொல்லி பாஜக அரசை வீழ்த்திட வேண்டுமென திட்டமிட்டு செயல்படுகிறது .. சந்திரசேகர ராவ் வந்து சந்தித்த போது கூட காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்களென அழைப்பு விடுத்ததும் .. பதறிப்போய் எங்கே கூட இருக்கும் கட்சிகளும் காலைவாரி விடுமோ என அஞ்சி திமுக பாஜகவோடு பேசுவதாக நம்பவைக்க முயற்சிக்கின்றன ..பாஜகவின் கூட்டணிகட்சிகள் ஒவ்வொன்றாக கழட்டிவிட முயற்சிக்கின்றன .. அதன் எதிரொலி தான் திமுக பாஜகவோடு பேசவதாக சொல்லி திரிவது .. கூடவே தமிழக அமைச்சர் "ரோட்டான்டவா" புகழ் ஜெயகுமார் பாஜகவிடம் ஐந்து அமைச்சர் பதவி கேட்டதாக சொல்லி .. அதிமுக படுதோல்வி அடையும் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் .. இவை எல்லாவற்றிருக்கும் திமுக தலைவர் தளபதி.ஸ்டாலின் .. மிக தெளிவாக மண்டையில் கொட்டியதைப்போல பதில் தந்திருக்கிறார் .. நான் பாஜகவோடு பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் .. இல்லையெனில் மோடி, தமிழிசை விலக தயாரா .. இதைவிட வேறெப்படி சொல்வது .. இதெல்லாம் மோடிக்கோ தமிழிசைக்கோ உரைக்காது .. .. மக்கள் விரோதபோக்கை, தானென்ற அகந்தையை, அதிகாரம் இருக்கிறதென்பதற்காக எதைவேண்டுமானாலும் சொல்லலாம் கதைக்கலாமென்ற திமிரை தாங்கள் மட்டுமே தேசத்தை நேசிக்கிறவர்கள் .. பாஜகவை அதன் பாசிசத்தை எதிர்க்கிறவர்களெல்லாம் தேசவிரோதிகளாக எண்ணுகிற செயலை கொஞ்சமும் கூச்சமின்றி சொல்லி திரிகிற தமிழிசை எச்.ராசா போன்றவர்களை புறக்கணிக்கவேண்டும் அதீத முக்கியத்துவம் தருவது பேராபத்து .. சமீபகாலமாக நாகரீகமற்ற சொல்லாடல்கள் சர்வசாதாரணமாக பிரயோகபடுத்துகிறார்கள் .. கொஞ்சமும் உண்மையில்லை என்று தெரிந்தும் திரும்ப திரும்ப சொன்னால் பொய் உண்மையாகிவிடுமென பரப்புகிறார்கள் .. அரசியலில் கருத்தியல் ரீதியாக மோதுவதை தவிர்த்து தனிப்பட்ட குரோதத்தை கையிலெடுக்கிறார்கள் இவையெல்லாம் அதிமுக அடிமைகள் கையில் ஆட்சி வந்ததற்கு பிறகே காணமுடிகிறது .. அமைச்சரே நாவை அறுக்கவேண்டுமென்று பேசுகிற துணிவு ‍.. பேசிவிட்டு அமைச்சராக தொடரமுடிகிற நிலை ..காரணம் பாஜகவின் சொல்படி தலையாட்டுகிறவர்களை எதை சொன்னாலும் கேட்பார்கள் இந்த மடையர்களென .. இவர்களை வைத்து சாதித்துக்கொள்ள வேண்டும் எந்தகாலதிதிலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் .. இந்த ஆட்சியை .. மடையர்களை ஆட்சி கட்டிலில் வைத்திருக்கிறார்கள்.. ஆடுங்கள் 23 வரை . மக்கள் அதிகாரத்தின் மூலம் தூக்கியெறிபடுவீர்கள் குப்பைமேட்டில் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment