Friday, May 24, 2019

திராவிடம் எங்கள் வாழ்வியல் அரசியல்

நடந்து முடிந்த தேர்தலின் வெற்றியை சில முற்போக்கு பேசும் பழசுகள்... என்ன செய்யபோகிறார்கள் என்கிறார்கள் .. சிலரோ கம்யூனிஸிட் திருமா வின் வெற்றியை புகழுவதாக எண்ணி திமுகவின் எழுச்சிமிகு வெற்றியை மடைமாற்ற பார்க்கிறார்கள் .. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் .. திருமாவை "தலித் " தலைவராக காட்ட ஜெய்பீம்கள் முயற்சிப்பதை பார்க்கும் போது அரசியலின் அரிச்சுவடியை கூட இன்னமும் அறிந்திருக்கவில்லையென புரிகிறது .. அதிகாரத்திற்கு வரவேண்டுமென விரும்பினால் .. அதிகாரம் மட்டுமே எம் சமூகமக்களின் துயர் துடைக்கும் என நம்பினால் சாதிய அல்லது குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்.. இனம் மொழி கலாச்சாரத்தின் நிழலில் நின்று கதைக்கவேண்டும் .. தலித்திய பார்வை என்பது தேர்தல் அரசியலில் பெரிய தாக்கத்தை தந்துவிடாதென்கிற யதார்த்த்தை உணரவேண்டும்,.. சமூக மக்களின் உயர்வென்பதை கருத்தில் கொண்டு செயல்படும் போது பிற சமூக மக்களின் பெரும் துணை வேண்டுமென்பது கட்டாயம் .. சில ஜெய்பீம்கள் .. தலித் என்பதால் திருமாவின் வெற்றி சிரமத்தை தருவதாக சொல்கிறார்கள் .. தலித் வாக்குகள் மட்டுமே வெற்றியை தீர்மானித்திடவில்லையென்ற உண்மையை,.. திருமாவை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து தமிழக பெருமக்கள் பார்க்கவில்லையென்ற நிலை உணராமல் அவரை வட்டத்திற்குள் அடைப்பது தலித் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்,.. சாதிய தலைவர்களாக வலம்வந்த ராமதாஸ் அன்புமணியின் நிலமை உணர்த்துவது இதுதான் .. .. நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள் படுதோல்வியை சந்தித்த போதும் தமிழகத்தில் வென்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி .. உயர்ஜாதியினரின் பிடியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி மீட்கப்படவேண்டிய காலகட்டத்தை நமக்கு உணர்த்துகிறது இந்த தேர்தல் விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் பொலிட் பீரோவில் ஒரு தலித் வர முடியவில்லை என்கிற யதார்த்தம் புரிந்தால் பார்பனீயத்தின் கை எந்தளவு ஊடுறுவியிருப்பது புரியும் .. வங்கத்தில் கம்யூ. தோல்விக்கு பிறகான பாஜகவின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு அபரிதமானது .. இந்தியாவிற்கு இன்றைய தேவை திராவிட கொள்கைகளே தவிர மார்க்ஸியம் அல்ல.. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவேண்டுமெனில் .."இந்த மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்பது திராவிடம் " தான் .. தென்னகம் எப்போதும் போல மதவாத /சாதிய கட்சிகளை புறந்தள்ளியிருக்கிறது இங்கு சமூகநீதி.. அனைவருக்கும் உரிமை சாதி மத பேதமற்ற சமுதாயம் என உயர்நோக்கோடு எப்போதும் செயல்படும் இடையிடையே சில சறுக்கல்கள் வந்தபோதும் தன்நிலைப்பாட்டை உறுதியோடு திரும்ப பெற்றிருக்கிறது .. வடமாநிலத்தைபோல கல்வியாளரை வேண்டாமென வைத்து தீவிரவாத போக்குடையவரை தேர்வு செய்யும் மடமையை எப்போதும் செய்ததில்லை தலித்களின் பாதுகாப்பு வடமாநிலங்களை போலல்லாமல் இங்கே உரிமையோடு கதைக்க செயல்பட திராவிட இயக்கங்களின் அளப்பரிய தொண்டே காரணம் என்பதை உணரவேண்டும்,.. .. இந்த தேர்தல் பலவகையான நல்லவைகளை செய்திருக்கிறது .. சாதிவெறியர்களை சாய்த்திருக்கிறது மதவெறியர்களுக்கு இங்கே இடமில்லை இனம் மொழியென பிரித்தாளும் சூழ்ச்சி இங்கே பலனளிக்காது சாந்து பூசி வந்தாலும் இனி மயக்கமில்லை.. விலைபேசும் கயவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டியிருக்கிறது .. அதோடு மிக சிறந்தவர்களை நாடாளுமன்றம் அனுப்புகிறது .. ஆ.ராசா.. டி.ஆர்.பாலு ,தயாநிதி,பழநிமாணிக்கம்,ஜெகத்ரட்சகன், போன்ற அனுபவமுள்ளவர்களோடு இலக்கிய ஆளுமைகள் கனிமொழி தமிழச்சி ஜோதிமணி வெங்கடேசன் ரவிக்குமார் போன்றவர்கள் .. உண்மையான பொதுவுடைமைவாதிகள், சமூகநீதிக்காக போராடும் திருமா .. இவர்களோடு திராவிட அடலேறுகளாய், ராமலிங்கம், செந்தில்குமார், சிகாமணி, கலாநிதி என திராவிட பெரும்படை நாடாளுமன்றத்தை அதிரவைக்க போகிறது .. தமிழகத்தின் நலன்களை புறக்கணித்தால் "தீ" யென சுட்டெரிப்பார்கள் .. .. "தேனென இனிக்கும் செய்தியென்பர் சிலருக்கு தேள்கடிபோல் உணர்வர்" என்றார் பேராசான் #அண்ணா .. திராவிடத்தை வீழ்த்தலாம் என்போருக்கு பேராசானின் பொன்மொழியிலேயே பதில் தருவோம் "திராவிட பெருங்குடியினருக்கு பெருமையோடு சொல்லிக்கொள்வேன் நாம் போட்டுயிருக்கிற அடித்தளம் சாமானியமானதல்ல.,காலத்தால் கிள்ளியெறியபட கூடியதல்ல, காதகர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கிள்ளியெறிய முடியாது அந்தளவிற்கு அடித்தளம் போட்டாகிவிட்டது ".. .. ஆம் திராவிடம் எங்கள் வாழ்வியல் அரசியல்

No comments:

Post a Comment