Tuesday, May 21, 2019

வியப்பூட்டும் தலைவர்

நான் கண்ட வியப்பூட்டும் தலைவர் .. பேரருளாளன் கலைஞர் .. தலைவர்கள் நன்னெறியோடும் தியாக சிந்தனையோடும் பல்வேறு கடமைகளையாற்றி மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள் அவர்களை காலம் கடந்தும் போற்றியிருக்கிறது .. ஆனால் அவர்கள் தன் கொள்கையாளர்களால் தன்னை பின்பற்றிய தொண்டர்களால் தான் உருவாக்கிய கட்சி/இயக்கத்தால் நினைவுகூறபட்டிருக்கிறார்கள் .. அவரை விரும்புகிற நேசிக்கிற மக்களும் அவர்களை கொண்டாடியிருக்கிறார்கள் .. .. கலைஞர் .. வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர்கள் கூட அவரின் ஓய்விடத்தில் வந்து கண்ணீர் சிந்துகிறார்கள் .. அறியாமையில் தவறான வழிகாட்டலில், தவறான புரிதலில் ஒப்பற்ற ஒரு தலைவனை வேண்டாமென வைத்தோமே என நொஞ்சுருகுகிறார்கள்.. அவரின் சிந்தனையில் முப்பதாண்டுகளுக்கு முன்பு உதித்ததுதான் இன்றைய Digital India செய்கிறது பின்பற்றுகிறதென்பதை அறிந்து வியந்துநிற்கிறார்கள் பார்பன ஊடகங்கள் கட்டிசமைத்தவைகள் .. தீயசக்தியென பேசி திரிந்தவையெல்லாம் பொய்யென்று அறிந்த போது கண்கலங்கி நிற்கிறார்கள் .. .. ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் எப்படி இயங்கவேண்டுமென பாடமாக இருக்கிறார் கலைஞர் .. போற்றுபவரையும் தூற்றுபவரையும் கண்டு கவலைக்கொள்ளாமல் மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கோடு .. வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் மிக நேர்த்தியாய் செய்து முடித்தவர் .. விமர்சனங்கள் வரும் பழி கூட வரும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் விளிம்புநிலை மக்களின் ஏற்றம் ஒன்றே தன் வாழ்நாள் கொள்கையாய் கொண்டு செயல்பட்டவர் .. கல்வி மட்டுமே என் சமூதாயத்தை மேம்படுத்தும் என எண்ணி.. ஊர்தோறும் பாடசாலைகளை நிறுவியவர் .. 5 கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி 7 கி.மீ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளியென வட்டம் தோறும் கல்லூரிகள் மாவட்டத்தோறும் மருத்துவக்கல்லூரி என கல்விப்புரட்சியை அமைதியாய் செய்து முடித்தவர் .. ஏழைகளுக்கு இலவச நிலம் .. வீடில்லாதோருக்கு வீடு .. விவசாயகளுக்கு இலவச மின்சாரம் என அமைதிபுரட்சியை செய்துவிட்டு பெருமைபட்டுக்கொள்ளாமல் அதை தன் கடமையாக கருதியவர் .. முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி என்பதும் அவனுக்கு முன்னுரிமை என்பதெல்லாம் புதிய சிந்தனையும் வடிவம்.. இந்தியாவில் முதன்முதலில் நடப்பாக்கியவர் .. எட்டாவதுவரை படித்தால் திருமண உதவியென சொல்லி பெண்குழந்தைகளை கல்வி கற்க வைத்தவர் அரசியலில் இவரைப் போல ஒரு ஆளுமையை இந்தியா இதுவரை கண்டதில்லை .. முப்பதாண்டுக்கு முன்பே இவர் தீட்டிய திட்டங்கள் தான் நவீன இந்தியாவிற்கு பொருந்துகிறது .. .. ஆளுமை .. பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளை கண்டிருக்கிறோம் .. ஆனால் பன்முக ஆளுமையாய் அதிலும் ஒவ்வொரு துறையிலும் பேராளுமையாய் கலைஞரைப்போல காண்பதறிது.. இலக்கியம் பேச்சாற்றல் நாடகம் சினிமா எழுத்தாற்றல் அரசியல் என தொட்டதெல்லாம் மின்ன செய்தவர் எப்போது எதை எப்படி கையாள வேண்டும் எப்படி பேச வேண்டுமென .. எதை கொண்டு இந்திய அரசியல் நகர்வை திருப்பவேண்டுமென அறிந்து செயல்பட்ட ஒப்பற்ற ஆளுமை கலைஞர் அவர்கள் தான் .. நாவன்மை, சட்டமன்ற செயல்களில் தனித்துவம் .. எதிராளர்களையும் மதிக்கும் பேரன்பு .. கட்சியின் கடைமட்ட தொண்டனோடும் உறவு .. என எல்லா நகர்வுகளையும் ஜனநாயகபடுத்திட்ட பேராற்றல் .. இந்தியாவிலேயே மிகவும் சிறந்த முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் அடிநாதத்தை உயிர்ப்போடு வைத்திருந்த தலைவரை வேறெங்கும் காண இயலாது .. இவ்வளவு வெளிப்படையான தலைவரை வேறெங்கும் காண இயலாது .. இத்தனை துரோகிகளை .. இத்தனை தோல்விகளை வேறாரும் கண்டிருந்தால் இருந்த இடமே தெரியாமல் புதைந்து போயிருப்பார்கள்.. எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றார் அண்ணா ...உண்மையில் எல்லாவற்றையும் தாங்கிய/தாங்கும் இதயம் பெற்றவர் கலைஞர் .. வாழும் போதெல்லாம் இவரை அறியாமல் போன தமிழன் தன் நன்றிகடனை கண்ணீரால் செலுத்துகிறான் .. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தன்னிகரற்ற அரசியல் தலைவர் கலைஞர்.. #பேரருளாளன் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment