Thursday, May 9, 2019

முதல்வராக கூட அல்ல அமைச்சராக கூட கனவுகாண தகுதியில்லாதவர் எடப்பாடி .. திடீரென்று வந்த வாய்ப்பில் முதல்வரானவர் .. அவர் தளபதி.ஸ்டாலினை விமர்சிக்க தகுதியில்லாதவர் .. மானமிகு.கனிமொழி.. .. ஸ்டாலினைப் பற்றி சொன்னால் வெளியே நடமாடமுடியாது .. தமிழிசை .. .. வெளியே நடமாட முடியாதென சொல்லி அவரால் நடமாட முடிகிறது பாருங்கள் அது தான் திராவிடம் தந்த பேச்சுரிமை .. எதை உளறினாலும் சொல்ல கூடாததை கருத்தென்ற பெயரில் சொன்னாலும் அரைவேக்காட்டு அரசியல் அறிவோடு கதைத்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை .. உளறல் என்ற பெயரில் மூப்பனார் பிரதமராவதையும் கலாம் ஜனாதிபதி ஆவதையும் தடுத்தவர் கலைஞர் என்கிறார் இந்த அரைகுறை அரசியல்வாதி .. மூப்பனாருக்காக வடமாநில தலைவர்கள் அவர் வீட்டிலேயே சந்தித்து ஆதரவு கேட்டவர் கலைஞர் அவர்கள் அப்போது முலாயம் சிங் நானும் பிரதமர் ரேஸில் இருக்கிறேன் என்று மறுத்தவர் .. அன்று அதை மூப்பனாரே வெளிப்படையாக சொன்னார் கலைஞர் எனக்காக மிகவும் பேசினார் ஆனால் குஜரால் தான் பிரதமராக வரவேண்டுமென பெரும்பாலோனார் விரும்பினர் என்றார் .. ஆனால் கலாம் விடயத்தில் அப்படி இல்லை இரண்டாவது முறையாக நிற்க வேண்டுமென பாஜக விரும்பியபோது அதை முழுமையாக எதிர்த்தோம் காரணம் கலாம் ஏறக்குறைய பாஜகவின் ஊதுகுழலாகவே செயல்பட்டார் .. எதிர்ப்பதென்றால் வெளிப்படையாக தைரியமாக எதிர்ப்போம் .. ஆதரிப்பதென்றால் முழுமூச்சாக வெளிப்படையாக செய்வோம் .. பிரதமர் இந்திராவே எதிர்ப்பததென்றாலும் ஆதரிப்பதென்றாலும் உறுதியோடும் இருப்பவர் கலைஞர் கருணாநிதி என்றதை தமிழிசை தன் தகப்பனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் .. .. சசிகலாவின் சிறை தண்டனை உறுதி செய்யபட்டதால் கிடைத்த அரிய வாய்ப்பு .. கூவத்தூரில் கட்டிகாத்து கடைசியில் கிடைத்தது ஆனால் சசிகலா சிறை சென்றவுடன் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து தலையாட்டி முதல்வராய் .. மத்திய அமைச்சரெல்லாம் விரல்காட்டி மிரட்டுகிற அடிமையாய்.. தலைமைச்செயலரை கூட அதிகாரம் செய்ய முடியாத கையாலாகாத முதல்வராய் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் செயல்பாடுகளை தடங்களிலின்றி செய்ய .. பார்பன சிதிதாந்தத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்க ஒரு ஆட்சி தேவைபடுகிறது மக்கள் ஆதரவோடு இனி எக்காலத்திலும் வென்றெடுக்க முடியாதென்பதால் அடிமைகளை கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ய இந்த ஆட்சியை பயன்படுத்துகிறார்கள் .. பாசிச பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து செயல்படுகிற முதல்வர் .. தளபதி.ஸ்டாலினை பார்த்து கனவு காண்பதாக சொல்வது வேடிக்கை .. .. மக்கள் நேசிக்கிற தலைவராக .. மக்களை நேசிக்கிற தலைவராக நீண்ட அனுபவமும் நிலைத்த புகழும் .. நேர்கொண்ட பார்வையோடு .. அறநெறி அரசியலை கையிலெடுத்து .. எதுவும் மக்கள் தந்ததாக இருத்தல் வேண்டுமென்ற நேர்மையான முறையில் களம்காண்கிற ஒப்பற்ற தலைவராக வலம் வருகிறார் தளபதி.. இவரை விமர்சிப்பதற்கும் தகுதி வேண்டும் .. பார்பன அடிவருடியாய் .. நாளை தேவையில்லையெனில் தூக்கியெறிபடுகிற .. அதன்பிறகு யாரென்றே அடையாளம்கான இயலாத அளவில் இருக்கிறவர்கள் நாவடக்கி பேசுவது நல்லது .. மக்கள் அங்கீகாரம் இல்லாதவர்கள் தங்கள் நிலை உணர்ந்து பேசவேண்டும் .. குப்பைமேடு கோபுரமாகாது .. .. ஆலஞ்சியார்..

No comments:

Post a Comment