Monday, May 6, 2019

மன்மோகன் பார்வை

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் வேதனைக்குள்ளானது; பேரழிவானது: மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் .. சிங் போன்ற ஆளுமைகளை மறுத்து குஜராத் கலவர புகழை மட்டுமே நம்பி அதுவே ஆள தகுதியென நம்பியதன் விளைவு .. மத மோதலை உருவாக்கி ஹிந்து ராஷ்ட்ரீயமென புளுகி கடைசியில் அது பார்பன நலனுக்கானதாக முடிந்ததே தவிர .. ஏனையோரின் நலனுக்கானதில்லை.. தனிநபரால் தீர்மானிக்கபடுவதோ அல்லது தனியொரு சித்தாந்ததமோ பன்முகம் கொண்ட கலாச்சார ஒருங்கிணைப்பில் தோல்வியைதான் சந்திக்கும் .. பிற மத இனத்தவரின் உணர்வுகள் மீதான தாக்குதல்கள் காலப்போக்கில் திருப்பி தாக்குமென்பதை நிறைய வரலாறுகள் நமக்குணர்த்தியிருக்கிறது .. அரேபிய வரலாற்றில் மிக கூர்ந்து கவனிக்கபட்ட உபைதியா உடன்படிக்கை மிகப்பெரிய தோல்வி.. ஒரு சாராரின் நலன் மட்டுமே கொண்ட எந்தவொரு கொள்கை முடிவும் சட்டமும் மிகப்பெரிய பின்னடைவையே தரும் .. இந்திய அரசியலமைப்பின் அடித்தளம் மிக சரியாக கட்டமைக்கபட்டிருப்பதால் ஷோசலிச ஜனநாயக மதசார்ப்பற்ற குடியரசு என தெளிவாக வரையறுக்கபட்டிருப்பதால் .. மதவெறியை முன்னிறுத்தும் .. இன பாகுபாட்டை மைய்யமாக கொண்டு செயல்படுவோர்களை காலம் காணாமல் போகவே செய்யும் .. .. திரு.மன்மோகன் சிங் அவர்கள் பல்வேறு மக்களைக் கொண்டிருக்கும் நமது தேசத்தில், மக்களின் அபிலாஷைகளுக்கும், நம்பிக்கைக்கும் ஒரு மனிதரின் கொள்கைகளாலும், விருப்பத்தாலும் எந்தவிதமான நீதியையும் வழங்கிவிட முடியாது. இந்தியாவில் பிரதிநித்துவம் என்பது மிகவும் முக்கியமானது. 130 கோடி மக்களின் விருப்பங்களையும் ஒரு தனிமனிதர் பிரதிபலிக்க முடியாது. அவர்கள் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியாது. அதிபர் முறை போன்ற தேர்தல் முறை இந்தியாவில் ஒருபோதும் சரிவராது. ஒரு மனிதர்தான் அனைத்து ஞானத்தின் அதிபதி என்ற கொள்கை இந்தியாவுக்குப் பொருந்தாது''. என்கிறார் .. மிகச்சரி .. எவ்வளவு தெளிவான பார்வை அதிபர் முறை ஜனநாயகம் இந்தியாவிற்கு பொருந்ததாது பன்முகதன்மையை அது வெகுவாக பாதிக்கும் பல்வேறு மாநில நலன்களை அது புறக்கணிக்கவே செய்யும் இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கலாச்சாரத்தின் ஓருங்கிணைப்பே தவிர தனி இனமோ கலாச்சாரமோ அதிகாரம் செலுத்துவதையோ ஆதிக்கம் செலுத்துவதையோ ஏற்கஇயலாது .. .. பண மதிப்பிழப்பை மிகப்பெரிய மோசடி என்கிறார் மன்மோகன் .. பணமதிப்பிழப்பு மிகப்பெரிய பொருளாதார சரிவை தருமென்று நாடாளுமன்றத்திற்கு வந்து தவறிழைத்துவிட்டீர்கள் என எச்சரித்தார் கேமேரா முன்னால் நடித்துக்கொண்டிருக்கும் பிரதமர் செவிசாய்க்கவில்லை எல்லாம் எனக்கு தெரியுமென எகத்தாளமாக செயல்பட்டதால் கருப்பு வெள்ளையானதும் பொருளாதார வீழ்ச்சியையுமே நாடு கண்டது .. .. "புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பின், மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டங்களில் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஜிம் கார்பெர்ட் தேசியப் பூங்காவில் திரைப்பட படப்பிடிப்புகளில் மோடி இருந்தது என்னை ஆழ்ந்த துயரத்துக்குள்ளாக்கியது "என கவலைக்கொள்கிறார் மன்மோகன் .... அதெல்லாம் மோடிக்கு தெரியாது நடிக்க, பொய் சொல்லதான் தெரியும் .. .. நாடு மிக கடுமையான சூழலிலிருந்து மீள வேண்டுமென மக்கள் விரும்புவது வெளிப்படையாக தெரிகிறது .. அதனால்தான் பிரதமர் அலுவலக தொலைபேசியை கூட மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன .. லாயக்கற்ற பிரதமரை காலாவதியான பிரதமரென விமர்சிக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது .. இந்தியா ஜனநாயத்தின் நம்பகதன்மை ஒளிவிட தொடங்கியிருக்கிறது .. பனி விலக்கும் கதிரவனைப்போல ஜனநாயக ஒளிக்கீற்று மெல்ல வெளிச்சம் தரும் .. ஜனநாயகம் வெல்லும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment