Sunday, May 5, 2019

கவனிக்கபடுகிறேன்

#கவனிக்கப்படுகிறேன்.. புரிகிறது.. தடுமாறாமல்.. எழுந்து நிற்க..முயல்கிறேன் .. நான் நானாக.. பெரும் சவால்தான்.. முகமிழந்து நடைப்போட முடியாதென்னால்.. அடுத்தவர் .. முகம் கிழிக்க ஆகாதென்னால்.. செப்புவது சரியென்றால் மாத்திரமே பின் தொடர்க.. செப்புதல் பிழையெனில்.. சொல்லித்தருக.. .. அறிவின்.. சுடரொளியில்.. வரும் எல்லாம் தருவேன்.. ஆகமவிதியென்றாலும்.. ஆண்டவன் சொல்லென்றாலும்.. ஆள்பவன்..சொன்னாலும்.. ஆதிக்க திமிரென்றாலும்.. அறிவுசார்..எனில்.. அதர்மமில்லையெனில்.. தருவேன்.... .. அன்பால் சொன்னாலும்.. அதிகார திமிராய் சொன்னாலும் அடுக்கடுக்காய்.. அழகுதமிழில் சொன்னாலும்.. அறிவிற்கொவ்வாயெனில்.. ஏற்கேன்.. மொழியேன்.. .. என்னை கட்டுப்படுத்த முடியாது காற்றைப்போல நான் தென்றலாய் வருவேன்.. சிலநேரம் சினங்கொண்டு கொடுங்காற்றாய் கூண்டுக்குள் அடைக்கமுடியாது எங்கெனினும் ஏதுவாகினும் .. பிடிக்காததை ஏற்க என்னால் இயலாது சிலரைச் சுற்றி மட்டுமே இயங்க என்னால் இயலாது .. பொருள் பொதிந்து செப்பினால் சொக்கி நிற்பேன்.. பிழையென்றறிந்தால் நகைத்து நிற்பேன்.. .. நான் சொல்வதெல்லாம் அறம்சார்ந்தேயன்றி வேறில்லை.. கொள்கையில் தெளிவும் ஏற்ற கோட்பாட்டில் உறுதியும் எப்போதும் விடுவதில்லை நான்.. .. நானேற்கா எதையும்.. என் சுவற்றில்.. கிறுக்குவதில்லை .. கவனிக்கப்படுகிறேன்.. .. #கவனமாய்.. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment