Sunday, May 19, 2019
மோடி
குகை ..
வரலாற்று நெடுக பெரும் கதாபாத்திரமாய் இருந்திருக்கிறது .. குகைவாசிகள் .. குகைக்குள் தஞ்சம் குகைக்குள் தியானமென வரலாறு நமக்கு சில சேதிகளை சொல்லியிருக்கிறது .. குகை இந்த உலகிற்கு நிறைய சேதிகளை சொல்லும்.. அரசு அதிகாரம் வேண்டாமென்று நிம்மதி வேண்டி குகைக்குள் தியானத்ததாய் எல்லாம் நாம் செவிவழி செய்தியாய் கேட்டதுண்டு ..மதங்களில் குகை எனும் சொல் புனிதமாக்கபட்டிருக்கிறது .. சில அற்புதங்களை நிகழ்த்தியதாயெல்லாம் வேதங்களும் .. அதை பின்பற்றுவோரும் நம்புவதுண்டு .. சில வரலாற்று ஆய்வுகள் சிலவற்றை நம்பதகுந்ததாய் சொல்கிறது ..
எப்படியோ குகை மீண்டும் பேசு பொருளாக மாறியிருக்கிறது ..
..
வடக்கிருத்தல் ..(சல்லே கனை)
வடக்கிருத்தல் என்பது சமண சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர்விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமயநூல்
"இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை"
அஃதாவது, பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுவதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறுகிறது
..
மோடி வடக்கிருத்தலை மேற்கொண்டு நாடே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் .. குகைக்குள் தியானம் பொறுக்க முடியாத வேதனையில் நிம்மதி தேடி துறவி வேடமணிந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.. குகைக்குள் அதிநவீன வசதிகள் .. பஞ்சுமெத்தை போன்ற விரிப்பு அவசரத்திற்கு செல்ல நவீன கழிப்பறை .. கடுங்குளிரை கட்டுபடுத்த மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர் .. சொகுசான தியான பயிற்சி .. பாரத பிரதமரின் தியானம் கேலிப்பொருளாக்கியிருக்கிறது .. இவர்கள் மதத்தை கடவுளை கேலிசெய்வதாக ராகுல் சொல்லில் உண்மையில்லாமல் இல்லை .. துறவமென்பது இப்போதெல்லாம் காசு சம்பாதிக்கும் குறுகிய வழியாகிப்போனதால் கார்ப்பரேட் சாமியார்கள் வியாபாரமாக்கி .. "சிவராத்திரி" கூட தரம் பிரித்து
காசுக்கு தகுந்தாற்போல் தரிசனம் தந்து பிழைத்துக்கொண்டிருக்கிற நாட்டில் .. நாட்டின் முதன்மை அமைச்சர் கொஞ்சம் தியானம் செய்தால் தப்பா என்ன..?
..
மோடி என்ற தனி மனிதரின் தெய்வ பக்தியை யாரும் குறைகூறவில்லை.. அதை விளம்பர படுத்தி திரும்பும் திசையெல்லாம் காமிராக்களோடு பேசி .. ஒவ்வொரு அசைவையும் தானே ரசித்து மகிழ்ந்து .. அரிதாரம் பூசும் கலைஞர்கள் கூட வாழ்நாளில் ஏற்றிராத அலங்காரத்தோடு வலம் வருவதை சகிக்க முடியவில்லை.. மோடியின் தியானம் செய்வதை நாட்டிற்கு காட்டவேண்டிய அவசியம் என்ன .. இதனால் நாட்டு மக்களுக்கு அவர் சொல்லும் சேதி என்ன..
அவரின் பக்தி ஏன் அரசியலாக்கபடவேண்டும் ..
அவரின் தனிபட்ட பக்தி தியானம் ஏன் இவ்வளவு விளம்பர படுத்தபடவேண்டும் .. எல்லாம் பொய் என்ற யதார்த்தம் அறியாமல் இல்லை ..
..
எதற்காக இந்த தியான நாடகம் .. exit ஐ போல .. ஒரு சமாதானம் அவ்வளவுதான் .. அல்லல்பட்ட மக்களின்
கோபம் அடங்காத பெருந்தீ.. சுட்டெறித்தே தீரும்.
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment