Wednesday, May 22, 2019

நாளைய நம்பிக்கை

எல்லோருக்கும் ஆசைதான் .. மந்திரிசபையில் இடம்பெறுவது குறித்து தேர்தல் முடிவிற்கு பிறகு யோசிப்போம் தேமுதிக.. அதிமுக மந்திரிசபையில் இடம் பெறுமா என்பதை முடிவிற்கு பிறகு சொல்வோம் பன்னீர் .. .. மூணுகுளம் வெட்டினேன் இரண்டுல தண்ணியே இல்ல ஒண்ணு பாழ்.. என்ற கதைதான் நியாபகம் வந்தது ஆசைபட யாருக்கும் அவகாசம் உண்டு கள நிலவரம் அறியாமல் சிலர் கதைக்கிறார்கள் .. அமித்ஷா அளித்த விருந்தில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் சரத்குமாரெல்லாம் கலந்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைகளை அரசியலில் தந்திருக்கிறது .. இனி தான் என் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் என கைப்புள்ள சீமான் சொன்னதைப்போல .. .. வெற்றி தோல்வி நாளை தெரிந்துவிடும் ஆனாலும் இவர்களின் பேராசைதான் சிரிப்பை தருகிறது பல்வேறு கருத்து திணிப்புகளுக்கு நாளை சம்மட்டி அடி விழலாம் .. வடஇந்தியாவில் ஆட்டோவிலும் லாரியிலும் மளிகைகடைகளிலும் ஹோட்டல் அறைகளிலும் வாக்குபதிவு இயந்திரங்கள் உலா வருவதால் எதுவும் நிகழலாம் மக்களின் உணர்வுகளின் மீது அவர்களின் உரிமைகள் மீது நடத்தபடுகிற யுத்தமாகவே இதை கருதவேண்டியிருக்கிறது ஜனநாயகத்தில் மிகப்பெரிய விரிசல் விழுந்திருக்கிறது மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும் நாங்கள் முடிவு செய்வோம் யார் ஆள வேண்டுமென என்பதை போல ஆளும் அரசிற்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது தேர்தல் ஆணையம் .. இதுவரை இப்படியொரு விமர்சனத்தை இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கையின்மையை இப்போதுதான் தேர்தல் ஆணையம் பெறுகிறது .. 20 லட்சம் வாக்கு பதிவு இயந்திரம் இருக்குமிடம் தெரியவில்லை /காணவில்லையென தகவல் உரிமையில் கேட்டு பெறப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .. சுயமாக செயல்படவேண்டிய ஆணையம் விவி பாட் பரிசோதனைக்கு பிறகே வாக்கெண்ணல் வேண்டுமென்ற ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது .. வெளிப்படைத்தன்மை இல்லாத ஆணையம் ஜனநாயகத்திற்கு கேட்டை தரும் ..சர்வாதிகார போக்கும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதென்ற குற்றசாட்டை நிரூபிக்கிற வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கிறது .. .. நாளை சூரியன் உதிக்கும் நல்லதொரு பொழுதாய் விடியுமென மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் .. எத்தனை இடைஞ்சல்கள்/இடையூறுகள் வந்தாலும் வெற்றி தோல்வி எதுவாகினும் மக்கள்பணி செய்து கிடப்பதே எமது தலையாய கடமையென செயலாற்றுவோம் .. மக்கள் நம் மீது கொண்ட நம்பிக்கைக்கேற்ப செயலாற்றுவோம்.. கலைஞர் பெருமகன் கற்றுதந்த வழியில் அவர் செதுக்கிய பாதையில் களைப்பின்றி பயணம் தொடர்வோம் .. சமூகநீதி காத்திட இனம் மொழி கலாச்சாரம் காத்திட பகுத்தறிவு துணைக்கொண்டு பயணிப்போம் .. ஆற்றல்மிகு அடலேறுகளை கொண்ட மாபெரும் இயக்கம் திமுக .. அது கட்சியல்ல மாபெரும் இயக்கம் ..தன் கடமையிலிருந்து மாறாது .. தமிழகத்தில் புதியதொரு நல்லாட்சியை சமைத்திட உறுதிஏற்போம் .மக்கள் நலனே பிரதானமாய் கொண்டு செயல்படுவோம்,.. தளபதியோடு கரம் சேர்ப்போம்.. நாளைய நம்பிக்கை நாட்டின் ..நாட்டுமக்களின் நம்பிக்கை தளபதி.. .. நாளை நமதே.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment