Thursday, May 23, 2019

திராவிடம் வெல்லும்

என் திராவிடத் தலைவா.. நெஞிசமெல்லாம் பூரிப்பு துள்ளியெழ .. உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறேன் .. எத்தனை இன்னல்கள் எத்தனை இழிச்சொற்கள் எத்தனை வஞ்சகம் அத்தனையையும் தாண்டி .. இதே முடிந்ததென கூப்பாடுபோட்டவர்கள் திராவிட இயக்கத்தை வேரோடு சாய்க்கலாமென்றவர்கள் மத்தியில் நடுநிலை என்ற பெயரில் நக்கலடித்தவர்கள் திமுகவை ஒழிப்பதே எனது தலையாயபணி என்று ஓலமிட்டவர்கள் மத்தியில் தனுயொருவனாய் .. ஓயாத உழைத்து திமுக எனும் மக்கள் இயக்கத்தை வெற்றிபெற செய்திருக்கிறீர் .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்த எழுச்சி நாயகரே வாழ்த்துகள் .. பெரியாரின் பேரப்பிள்ளைகள் 38 பேரை அனுப்புகிறோம் 16 வது மக்களவைக்கு.. இதுவரை சில அறிவிலிகளால் நாம் பட்ட துன்பங்களை .. தமிழர்களின் மானத்தை விலைபேசிய மூடர்களை துடைத்தெறிந்து மானமிகு செயல்வீரர்களை அனுப்புகிறோம் .. சென்ற முறை செய்த தவறுக்கு பரிகாரமாய் ஆற்றல்மிகு திராவிட அடலேறுகளை அனுப்புகிறோம் .. கனிமொழி தமிழச்சி,ஜோதிமணியென பெரியாரின் பெயர்த்திகள் செல்வது பேரின்ப மகிழ்ச்சியை தருகிறது .. சு.வெங்கட்சன் ரவிக்குமார் கனிமொழி தமிழச்சி போன்ற இலக்கிய ஆளுமைகளும் நாடாளுமன்றத்திற்கு பெரும் மகிழ்ச்சி.. தமிழகத்தின் நலன்கள் .. தேவைகளை போராடி பெற சிறந்தவர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் .. எதையுமே போராடி பெறுவதில் தான் தன்மான திமிர் இருக்கிறதென்ற சுயமரியாதைகாரர்கள் நாம் .. அதை தான் கலைஞர் நமக்கு கற்று தந்தார் .. .. தன் உயரம் தனக்கு தெரியும் என்பார் கலைஞர் .. மற்ற மாநிலங்களில் எல்லோருமே இழுபறி வரும் அதைவைத்து பிரதமர் கனவில் மிதந்து கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டு கடைசியில் மண்ணை கவ்வி மீண்டும் மோடியை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் தமிழகத்தில் கூட்டணி அமைத்து மிக சாதூர்யமாய் காய் நகர்த்தி .. ஓயாமல் சுழன்று சுழன்று உழைத்து .. "அப்பனின் மகன்" என உணர்த்தியிருக்கிறார்.. இந்த தேர்தல் சில உதரிகளை. ஏதோ தாங்கள் தான் ரட்சகன் போலவும் .. இந்த தமிழ் சமூகமே தங்களால் தான் காப்பாற்ற முடியுமென கதைவிட்டு .. இவர்களுக்கு மட்டும்தான் உணர்விருப்பதைப்போல பேசி திரிந்தவர்களுக்கு "கட்டிவச்ச" காசையும் பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்திருக்கிறார்கள் .. தமிழகத்தின் திமுகவின் தேவையும் இந்த மண் பண்பட்ட சமூகநீதிக்கான களம் என்பதையும் சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி வெறியூட்டி குளிர்காய நினைத்தால் அம்மணமாக்கி விரட்டிவிடுவார்கள் மக்கள் என உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல் .. மதத்தை சொல்லி பிரித்து நாடகமாடி நயவஞ்ச செயலை செய்வோரை விரட்டியடிக்கும் மண் இது .. .. பெருங்கிழவன் செப்பனிட்ட பாதையை எண்ணி.. பூரிக்கிறேன்,.. பேரறிஞரும் பேரருளாளனும் போற்றி காத்த மண் என்று உவகை கொள்கிறேன் .. பெருவெற்றியை பெற்று தந்த தளபதியின் கரம் பிடித்து மகிழ்கிறேன் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment