Monday, May 20, 2019
கருத்து திணிப்பு
கருத்துக்கணிப்புகளுடன் சில நாட்கள் பகல் கனவில் மிதப்போர் மிதக்கட்டும்... 23 ஆம் தேதி அவர்கள் கனவை மக்கள் பொய்யாக்குவார்கள் என்பதை நம்புங்கள்... 23 ஆம் தேதியிலிருந்து நமக்கு கொண்டாட்டம்தான்... காந்தி இதைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்தார் பிரகாஷ்ராஜ்..
..
கருத்துகணிப்பென்ற பெயரில் சூதாட்டம் நடக்கிறது
மும்பையில் மிகப்பெரியளவில் யார் வெல்வார்களென்று சட்டா பஜாரில் பாஜக வெல்லுமென பந்தயம் கட்டி நேற்று காசு பார்த்துவிட்டார்கள் மிகப்பெரிய மோசடி அதில் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன..
திருமதி சோனியா காந்தி exit poll க்கு பிறகும் மிக நம்பிக்கையோடு இருப்பதாக செய்திகள் சொல்கின்றன .. பாரபட்சமற்ற முறையில் தனியார் ஏஜென்ஸி எடுத்த சர்வேவும் .. மத்திய உளவுத்துறை கசியவிட்ட ரிப்போர்ட்டும் காங்கிரஸிக்கு சாதகமாக இருப்பதாக சொல்கிறது .. இந்த கருத்து திணிப்புகள் பொய் என்பதற்கு தென்னிந்தியாவில் 10 இடங்கள் தான் பாஜக வருமென்று சொல்கிறவர்கள் எப்படி 300-340 என விலையிறுத்த முடியும் தென்னிந்தியாவில் மாநில கட்சிகள் 100-110 இடங்களில் வெற்றிபெறுமென அவர்களே சொல்லும் போது எப்படி அவர்களின் கணிப்பு சாத்தியமாகும் .. நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சம் பேரிடம் கேட்டதாகவும் .. இரண்டு பேர் விடுத்து மூன்றாவது நபரிடம் கருத்துக் கேட்கபட்டதாகவும் சொல்வது இதுவரை இப்படியொரு முறை sample கடைப்பிடிக்கபட்டதில்லை ..
..
தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார் .. உண்மையில் சில வாக்கு சாவடிகளில் அதிகாரியே அழைத்து சென்று ஓரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்ததும்.. சில ஊர்களில் பணத்தை கொடுத்துவிட்டு கைவிரலில் மை வைத்துவிட்டு அவர்களே வாக்களித்ததாகவும் செய்திகள் வருகின்றன ..மிக பெரியளவில் மோசடியை அரசின் துணைக்கொண்டு செய்திருக்கிறார்கள் .. தேர்தல் ஆணையர் ஒருவரே தலைமை ஆணையருக்கு நேர்மையாக தேர்தல் நடத்தபடவில்லையென சிலருக்காக விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை சுட்டிகாட்டி கடிதம் எழுதியது இதுவரை நடந்திராத கூத்து .. இதையெல்லாம் மீறி மக்களின் தன்னெழுச்சி ..இந்த பாசிச அரசின் மீது கொண்ட வெறுப்பை ஆங்காங்கே காண முடிந்தது .. இதுவரை காணாத எதிர்ப்பு கருத்து கணிப்பின் மீது வந்தது இதுதான் முதல் முறை ..
..
2004,2009, என கருத்து கணிப்புகள் பொய்த்திருக்கின்றன இன்றைய தின ஏடுகள் சில கருத்துகணிப்பு நம்பதன்மையை குறைகூறி மெதுவாக முலாம் பூசுகிறது ..
ThNeta-NewsX predicts 242 seats for NDA, 164 for UPA
''''"'""""""""""""'''''""""""""""""""""""""""""""""""""""""""""""""
This has been a very close fight. With no one party expected to form the government this time, we are back to the era of coalitions. As per our data, the expected post-poll alliances show that both the NDA and the UPA have an opportunity to form the government though the NDA is much closer to the 272 mark. It would be very interesting to watch the post-poll alliances that the Congress and the BJP are able to form after the election results are out,"
எந்த கட்சியும் தனித்து வெல்ல முடியாது என்பதும் NDA பெரும்பான்மைக்கு அருகில் வரும் அவ்வளவுதான்
ஆனால் ஊடகங்கள்
Journalist must think about their role in the normalisation of extremist behaviour rather than focusing on exist polls...// THE HINDU...
மிகைபடுத்தபட்ட கருத்து திணிப்பு ..
திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல அறுவடைக்காலத்தில் அதிகம் கவனம் தேவை .. ஏனெனில் தேர்தல் ஆணையம் நம்பிக்கையை இழந்து நிற்கிறது .. எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடுக்கலாமென மம்தா சொல்வதை கவனிக்கவேண்டும் .. ஆர்எஸ்எஸ் பாசிச சித்தாந்திகள் கையில் சுயசார்பு நிறுவனங்கள் செல்வது ஆபத்தானதென்பதை உணர தொடங்கியிருக்கிறோம் ..
..
மே23 .. விடியும்
..
ஆலஞ்சியார்
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment