Saturday, May 11, 2019

பட்டால்தானே புரியும்

பா ஜ க தனி கொள்கை கொண்டது.மோடி, அமீத்ஷாவுக்கானதாக எப்போதும் இல்லை..நிதின்கட்கரி.. குஜராத் கலவரத்தில் மோடி ஆட்சியை கலைக்க வாஜ்பாய் விரும்பினார் .. ஆனால் அத்வானி தான் அதை தடுத்தார் .. சின்ஹா.. .. பாஜக பெரும்பான்மை பெறும் என்பதை யாரும் நம்பவில்லை நடந்துமுடிந்த தேர்தல்களில் பாஜக பலத்த தேசம் அடைந்திருப்பதாக ஊடக கணிப்புகள் காங்கிரஸும் தனித்து பெரும்பான்மை கிடைக்காதென்று இப்போதே சிலர் பிரதமர் கனவோடு வலம் வர தொடங்கியிருக்கிறார்கள் .. பிரதமர் தேர்வில் மம்தா பிரதான பங்கை வகிப்பாரென தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடு கதைக்கிறார்,.. ஒன்று தெளிவாக தெரிகிறது பாஜக மீண்டும் வர வாய்ப்பில்லை என்பதுதான் .. அதனால் தான் ஆர்எஸ்எஸ் தன் விசுவாசியை வைத்து மோடி அமித்ஷா அல்ல பாஜக என சொல்ல வைத்திருக்கிறது .. பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் பிகாரின் நிதிஷ்குமாரை பிரதமராக்கி மூன்றாவது அணியில் முயற்சியை வீழ்த்த நினைப்பதாக செய்திகள் சொல்கின்றன ..அப்படி அமைந்தால் மத்தியளவில் அதிமுகவை போல ஒரு அருமையான அடிமை கிடைத்ததைப்போல ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தும் அது முழுக்க முழுக்க பாசிசத்தின் கரங்களால் இயங்கும் அரசாகவே இருக்கும் அது பேராபத்து .. ஆர்எஸ்எஸ் மோடியை கைகழுவ தயாராகிவிட்டதாக தெரிகிறது தொடர்ந்து விமர்சனங்களை மோடி மீது விதைத்து அவரால் தான் கெட்டது என்ற குற்றசாட்டோடு ஆர்எஸ்எஸ் தன்னை புனிதப்படுத்திக்கொள்ள முயலும் அதன் தொடக்கமாக தான் நிதின்கட்கரியின் பேச்சு அமைந்திருக்கிறது .. .. மோடியின் ஆட்சியை கலைக்க வாஜ்பாய் நினைத்தார் அதை அத்வானி தடுத்தாரென சின்ஹாவின் கூற்றை கடந்து போக முடியாது .. திட்டமிட்ட படுகொலை வன்முறை என்பதும் அதை அரசு வேடிக்கை பார்த்ததென்பதும் .. மத்திய அரசு அதை கண்டுக்கொள்ளாமல் இன ஒழிப்பை அரங்கேற்றியதும் சத்ருகன் சின்ஹாவின் பேச்சு உணர்த்துகிறது .. மிக மோசமான ஒருவரைதான் ஆர்எஸ்எஸ் வளர்த்தெடுத்து பிரதமராக்கியிருப்பது இதிலிருந்து தெரிகிறது "அரச தர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்களென மோடியை பார்த்து வாஜ்பாய் கூறியது அப்போது விவாதமானாலும் பிரதமராக நேர்மையோடு அவர் நடந்திடவில்லை என்பதும் பாஜக இந்த நாட்டிற்கு கேடு என்பதும் நமக்கு புரியும் .. மதவெறி அரசியலை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் பிஞ்சு குழந்தைகளிடம் கூட முஸ்லிமான்களை பற்றி வன்மத்தை விதைப்பதும் பிஞ்சுகளின் கையில் ஆயுதங்களை திணித்து மனதில் குரோதத்தை வளர்த்தெடுப்பதும் தேசபக்தி என்ற பெயரில் அதை நியாயபடுத்துவதும் சாதிமத வெறியை வளர்த்து மக்களிடையே பிரிவினையோ உண்டாக்கி ..குறிப்பிட்ட ஒருசாரார் மட்டுமே எல்லா பதவிகளையும் அதிகாரத்தையும் அடைய வழிவகை காண்பதுவே ஆர்எஸ்எஸின் லட்சியம் கொள்கை .. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார்கள் .. இப்போது இது மோடியின் தோல்வியாக கருதபடும்.. உண்மையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் தோல்வி இது .. இந்த மண்ணுக்கேற்ற சித்தாந்ததமாய் அது இல்லை.. ஒரே மதம் ஒரே கொள்கை ஒரே கலாச்சாரமென்பது இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது மட்டுமல்ல பெரும் அழிவினை பின்னடைவை தருமென்பதற்கு மோடியின் பாசிச அரசு சாட்சி வகிக்கிறது .. பட்டால்தானே புரியும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment