Tuesday, April 30, 2019
ஆட்சிமாற்றம் வேண்டும்
ஆட்சியை கவிழ்ப்போம் என நம்பிக்கை உள்ளதால்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறோம் .. ஆர்.எஸ் பாரதி ..
சபாநாயகரென்பவர் கட்சி அடையாளமின்றி நடுநிலையோடு செயல்படவேண்டும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் கூட சபாநாயகர்கள் நடுநிலையோடுதான் செயல்பட்டார்கள் .. ஆனால் ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு சபாநாயகரை தன் விருப்பத்திற்கேற்ப செயல்பட பணித்ததும் தொடர்ந்து சபாநாயகர் என்றாலே அவர் அரசுக்கு சாதகமான நிலைபாட்டை எடுக்க பயன்படும் கருவியாக இருக்கிறார் ..
..
அரசுக்கெதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டார்களென சொல்லி 18 பேரை தகுதி நீ்க்கம் செய்தவர் தான் .. அதே எடப்பாடிக்கெதிராக வாக்களித்த தர்மயுத்த கும்பல் மீது நடவடிக்கை இல்லை .. ஆனால் எடப்பாடியை மாற்றவேண்டுமென்றும் வேறொருவரை கொண்டுவரலாமென்றவர்கள் மீது நடவடிக்கையை கட்சிரீதியாக எடுக்காமல் அவர்கள் நீக்கம் செய்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்றதும் அதே போல இடைத்தேர்தலில் படுதோல்வி வருமென்பதால் மேலும் மூவரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்கலாமென செயல்படுகிற ஆட்சியை தொடர விட கூடாதென முடிவெடுத்து திமுக .. முதலில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறது ..
எதிர்க்கட்சி தலைவரே இதை கொண்டுவருவது சிறப்பு .. இந்த ஆட்சி தொடர கூடாதென முடிவெடுத்த பிறகு அதற்கான ஆயத்தம் தான் இந்த சபா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ..
..
மக்களின் தலைவனாக தளபதி மிளிர தொடங்கியிருக்கிறார் .. மக்கள் ஆர்வத்தோடு தளபதியை சந்தித்து முறையிடுகின்றனர் .. நம்பிக்கையான எதிர்காலம் தளபதிதான் என மூத்த குடிமக்கள் இளைஞர்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் இந்த ஆட்சி எதை செய்தாவது தூக்கியெறிய வேண்டுமென மக்கள் வெளிப்படையாகவே பேச தொடங்கியிருக்கிறார் .. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களின் வளத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யகூடிய மகாபாதகர்களென அறிந்து அதிர்ந்துபோய் இருக்கிறார்கள் ஏன் இதுவரை விட்டுவைத்தீர்களென தளபதியை கடிந்துக்கொள்கிறார்கள் .. மக்களின் அதிகாரத்தின் மூலம் திமுக ஆட்சியை பிடிக்க மாபெரும் வெற்றியை தர தயாராகியிருக்கிறது தமிழகம் இனியும் பொறுப்பதற்கில்லை.. இந்த மூடர்களிடம் சிக்கி தமிழகம் பட்டதுன்பங்கள் போதும் ..
இங்கே அனிதாக்களுக்கு கல்வி வேண்டும் நந்தினிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் சாமானியனுக்கும் சமமான உரிமை வேண்டும் மதவெறியை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கவேண்டும் சாதிவெறியை இளைஞர்களிடத்தில் விதைத்து பகையோடு பலியாக்கும் கொடுமைக்கு முடிவுகட்டவேண்டும்
பாசிசத்தின் அடிமையாய் கட்சியை அடமானம் வைத்து காவிதரித்து கயவராய் போன அடிமாடுகள் விரட்டிட வேண்டும் .. மாநில நலன்கள் ஒவ்வொன்றாய் பலிகொடுத்து தங்களை காப்பாற்ற்க்கொள்ளும் கொள்ளைக்கார கும்பலை கொலைகார பாவிகளை விரட்டிட வேண்டும் ..
மொத்தத்தில் இந்த அடிமைகளை அதிகாரத்திலிருந்து கீழிறக்கவேண்டும் அதன் முதல் படியாய் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் .. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லும் மூன்றை தூக்கினால் மூன்று ப்ளஸ் பத்தை (3+10) தூக்குவோம் இனி
தளபதியின் ஆட்டம் ஆரம்பம்
வெல்வோம் இனி..
தளபதி படை தரணி ஆளும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment