Saturday, May 18, 2019
மோடி எனும் மாயை
மோடி என்ற "கருத்தை" எங்களால் முடிந்தளவு கலைத்துப் போட்டுவிட்டோம் ..
“எதிர்க்கட்சியாக சிறப்பாகவே செயலாற்றியுள்ளோம். வெற்றிகரமாக பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சென்றோம்.. ராகுல்
..
2014 ல் மோடி வருகையை கொண்டாடி தீர்த்த ஊடகங்கள் நேற்றைய தினம் கிழித்து எறிந்துவிட்டது
மேடைப் பேச்சில் வல்லவராய் தன்னை காட்டியவர் அதிகபட்ச மௌனமாய் ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்து கொண்டது அவரின் சரக்கு அவ்வளவுதான் .. மிடுக்கெல்லாம் பொய்யில் தான் நேர்மையான விவாதமோ பேட்டியோ வந்தால் "கைப்புள்ள" தான் என்பதை நிரூபித்திருக்கிறார்..
The Telegraph ஏடு .. மோடிக்காக முன்பக்கத்தில் அரைபக்கம் ஒதுக்கி வைத்திருந்தோம் .. கடைசி வரை மௌனமெனும் ஆயுதத்தால் காத்துக்கொண்டதால்
silence please என போட்டு தன் ஜனநாயக கடமையை நேர்மையோடு செய்திருக்கிறது .. மோடியின் பிம்பம் தூள் தூளாக்கபட்ட நாள் ..
..
இதுவரை எந்த பிரதமரும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்ததில்லை பிரபலமான பத்திரிக்கைகள் நையாண்டி செய்து கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருக்கின்றன .. பிரதமர் இந்திராவை மிசா காலத்தில் கடுமையான சாடிய பத்திரிக்கைகள் மிக அதிகமாக கேலிச் சித்திரங்களை லட்சுமணனை கொண்டு வரைய வைத்திருக்கிறது .. ஆனால் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்ததில்லை
டாக்டர் மன் மோகன் சிங் .. 2014 மிக இக்கட்டான 2ஜி வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட
சலைக்காமல் பதிலை தந்தார் தணிக்கை அறிக்கையை கொண்டு கட்டிசமைத்த பூதாகரமான மாய எண்ணைக்கொண்டு ஊடகங்கள்
ராசாவை ரணகளமாக்கிய போதும் .. வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் தைரியமாக மடியில் கனமில்லை எனவே பயமில்லையென செய்தியாளர்களை சந்தித்தார் உயர்திரு.மன்மோகன் சிங் அவர்கள் .. அவரை சோனியாவின் பினாமி என்றெல்லாம் பேசிய ஏசிய ஊடகங்களை அவர் புறக்கணிக்கவில்லை ..
..
இதுவரை ஆட்சி செய்தவர்களில் மோடி மட்டுமே தான் என்னென்ன திட்டங்களை செய்தேன் அது எந்தளவிற்கு மக்களுக்கு பலனளித்தது என பேசாமலேயே தேர்தலை சந்தித்தவர் .. மறைந்த நேருவையும் இந்திராவையும் ராஜீவ்காந்தியையும் பேசியே காலத்தை ஓட்டியவர்
தூய்மை இந்தியா என்றார் கங்கையை புனித படுத்துவதாக சொன்னார் புதிய இந்தியா பிறந்ததென்றார் ஏதாவது நிகழ்ந்ததா .. இந்தியா சுத்தமானதா கங்கை சுத்தபடுத்துவதாக சொல்லி கோடிகளை கொட்டி கடைசியில் சிலர் கொழுத்தது தான் மிச்சம்.. கருப்புபணத்தை மீட்பேன் எனச் சொல்லி கொழுத்த பண முதலைகளின் கருப்பை வெள்ளையாக்கி கமிஷன் பெற்றது தான் மிச்சம் .. அமிர்ஷா தலைமையிலான கூட்டுறவு வங்கியில் கோடிகளில் பணபரிமாற்றம் நடந்தது பற்றி ஏதேனும் வாய் திறந்தாரா ஊழலை ஒழிப்பேனென சொல்லி பிரதமரானவர் .. 400 ரூபாயை தொட்ட எரிவாயுக்கே வீதியில் நின்று போராடியவரின் ஆட்சியில் ₹1000 த்தை தொட்டிருக்கிறதே பதிலில்லை .. என் பிணத்தின் மீதுதான் GST என்றவரின் ஆட்சியில் 28% வரி GST ..
நூறுநாட்களுக்குள் கருப்புபணத்தை ஒழித்து புதிய இந்தியாவை மிளிர செய்வேன் என பணமதிப்பு இழப்பில் பேசி இல்லையென்றால் என்னை கொளுத்துங்களென சவால் விட்டவர் .. மண்ணெண்ணை கேனோடு மக்கள் நிற்கிறான் என்ன மண்ணெண்ணைக்கு பதில் வாக்கு சீட்டோடு மொத்தமாக எரிக்க ..
மக்களின் வயிற்றெரிச்சல் அதிகம் சூட்டை உண்டாக்கியதோ என்னவோ.. தியானம் இருக்க மலைக்குகையில் நிற்கிறார் புகைப்படகாரனோடு ..
..
இனி மோடியை போன்ற ஒருவரை மக்கள் ஏற்க தயாரில்லை பொய்யும், புரட்டும், தான்தோன்றித்தனமும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு மத கோட்பாட்டை ஓரே கலாச்சாரத்தை
நடைமுறைப் படுத்த நினைக்கும் செயலும் இந்த நாட்டிற்கு தேவையில்லை
bye..bye..Modi
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment