Thursday, May 2, 2019

சௌகிதார்.. பயத்தில்

கொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... பிரதமர் மோடி.. பிரதமரின் பேச்சு அவருக்கு தோல்வி பயத்தை காட்டியிருக்கிறது தரம் தாழ்ந்து பேச தொடங்கியிருக்கிறார் பிற்படுத்தபட்டவன் என்பதால் ராகுல் என்னை விமர்சிக்கிறார் என்றார் திரிணாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தாவ தயாராக இருப்பதாக சொன்னார் கடைசியில் என்னை கொல்ல பார்க்கிறது காங்கிரஸ் என்ற நிலைக்கு இறங்கி வந்துவிட்டார் .. .. வடக்கிலிருந்து வரும் செய்திகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிற நிலையில் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த முடியுமா என பார்க்கிறார் .. பாகிஸ்தான் .. ராணுவ நடவடிக்கை காஷ்மீர் பள்ளதாக்கில் ராணுவ வீரர்கள் கொல்லபட்ட விடயமென அரசியலாக்க எண்ணி கடைசியில் முகம் கருத்து போனது பாஜகவிற்கு .. இனி தனிநபர் தாக்குதல் எல்லாம் எடுபடாமல் போக .. அதை செய்வேன் இதை செய்வேன் என உளறியதெல்லாம் மக்கள் ஏற்க தயாரில்லை என்றவுடன் .. பரிதாபகரமான வேசம் கட்ட பார்க்கிறார் .. ராகுலை கேலியாக நாடாளுமன்றத்தில் விமர்சித்து சிரித்து மகிழ்ந்த போதும் அமைதியான மௌனத்தால் திருப்பியடித்ததும் ..என்னை பப்பு என்று சொல்லிவிட்டு போங்கள் ..ஆனால் ரஃபேல் திருடன் இல்லையென்று நிரூபிக்க முடியுமா என கேட்டு கதிகலங்க வைத்துவிட்டார் .. சமானியனுக்கான ஆட்சியல்ல இது பெரும் பண முதலாளிக்கான ஆட்சியென போட்டுடைத்துவிட்டார் .. இதுவரை பிரதமராக இருந்தவரிலேயே எங்கு படித்தார் என்ன படித்தாரென நாட்டுக்கு மக்கள் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாதவராக இருந்தவர் மோடி மட்டும்தான் .. 2014 ல் பட்டபடிப்பு படித்தாக தேர்தல் ஆவணத்தில் சொன்ன ஸ்மிருதி ராணி 2019 ல் +12 பாஸ் என்கிறாரென்றால் இவர் மத்திய மனிதவள மேம்பாடு(மத்திய கல்வி அமைச்சர்) எவ்வளவு தில்லுமுல்லு .. இந்த ஆட்சியில் எல்லாமே பொய் பிரதமரே தவறான தகவலை தருகிறாரென்றால் .. பேசுவதெல்லாம் பொய் என்றால் செய்ததெல்லாம் அவசர கதியில் அரைகுறையில் என்றால் மக்கள் கோப படதான் செய்வார்கள் .. .. ஒரு இரவில் நாட்டுமக்களை கதிகலங்க வைத்து வைத்திருந்த காசெல்லாம் செல்லாது என சொல்லி புதிய இந்தியா பிறந்ததென குதூகலித்தவர்.. கருப்பு பணத்தை மீட்கிறேன் எனச் சொல்லி அமிர்ஷா வகையறாக்கள் கருப்பை வெள்ளையாக்கியது தான் நடந்தது .. ஏழைபாழைகள் சிறுகசிறுக சேர்த்ததையெல்லாம் செல்லாதாக்கி அழுது புலம்பவிட்டு கதறியே மூச்சிழந்தவர்கள் பலர் .. வங்கியில் குறைந்தபட்ச பணம் இருப்புவேண்டுமென சொல்லி ஏழைகளிடம் கொள்ளையடித்த பணம் ஆயிரம் கோடிகள் .. ஏழைகளின் கல்விகனவை சிதைத்து .. விவசாய நிலங்களை கார்ப்ரேட்களுக்கு தாரைவார்த்து .. மாட்டிற்காக மனிதனை கொன்று.. தாழ்த்தபட்டவர்களை நிர்வாணமாக அடித்து துன்புறுத்தி மதவெறியை தூண்டி சாதிமோதலை ஊக்கபடுத்தி என பாஜகவினரின் செயல்களை கண்டும் காணாததுப்போல இருந்துவிட்டு இன்னும் சொல்லபோனால் கடைகண் கரிசனத்தோடு இருந்துவிட்டு இப்போது .. கொல்லபார்க்கிறார்கள் .. சாதி பார்க்கிறார்கள் தாவ பார்க்கிறார்களென புலம்புவதால் பயனொன்றுமில்லை .. .. இந்த பாசிச அரசை வீழ்துவதொன்றுதான் நாட்டிற்கும் நமக்கும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லதென மக்கள் முடிவுசெய்ததிருப்பதன் விளைவு தான் வடமாநிலங்களில் பெரும்பின்னடைவு .. தெற்கு எப்போதும் ஏற்காது இவர்களின் சித்தாந்தத்தை என்பதால் வடக்காவது வாழ்வு தராதா எனறிந்தவரின் எண்ணத்தில் இடியை இறக்குகிறார்கள் மக்கள் அதனால் வந்த புலம்பல் இது .. .. சௌகிதார் ஷோர் ஹை .. என மக்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. பொய் வீழ்ந்தே தீரும் வாய்மையே வெல்லும் அறம் வெல்லும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment