Monday, May 27, 2019
ஸ்டாலின்...
இடதுசாரிகள் செய்ய வேண்டியதை
ஸ்டாலின் துணிச்சலாக செய்கிறார் ..
-தா பாண்டியன்..
அதைதான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம்
கம்யூனிஸிட்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ளாதவரை இதே நிலைதான் தொடரும்
கம்யூ.கட்சி பார்பனர்கள் கையிலிருந்து அதிகாரம் பிடுங்கப்பட்டாலொழிய அது மறைமுகமாக சனாதனவாதிகளுக்கு ஆதரவான நிலையைதான் செய்யும்.. பொலிட் பீரோவில் இத்தனை ஆண்டுகளாயும் பார்பன மேலாதிக்க எண்ணமே இருந்தது இருக்கிறதென்பதை உணரமுடியும்,..
..
காங்கிரஸையும் பாசிசத்தை எதிர்பபதாக சொல்லி
காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்கள் தலையாய பணி.. அதைவிட பாஜகவின் வெற்றிக்கு முடிந்தளவு மறைமுகமாக உதவுவது .. இதை 1984 லிருந்தே செய்துவருகிறது .. ராஜீவ் எதிராக வி.பி.சிங் களமிறக்கபட்டபோது அப்போது இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜகவை .. புரிந்துணர்வு என்ற புதிய உக்தியை சொல்லி சில இடங்களில் எதிர்த்து வேட்பாளரை நிறுத்த கூடாதென ஒப்பந்தம் செய்ததன் விளைவு அப்போது 82 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றது .. அன்று தொடங்கி இன்று வரை மார்க்.கம்யூனிஸ்ட் கட்சி அந்த பணியை தான் காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி பாஜக வெற்றிக்கு வழிவகுக்கிறது .. இந்த தேர்தல் கூட மம்தாவை வீழ்த்த வேண்டும் அல்லது வங்கத்திலிருந்து விரட்டவேண்டுமென்று பாஜகவிற்கு வாக்களிக்க வலியுறுத்துயதாக வரும் செய்தி மிகவும் கவலைக்குரியது
..
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சனாதனவாதிகளின் கையில் நாடு சிக்குண்டு வருவதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு பொதுவுடமைவாதிகளுக்கு இருக்கவேண்டும்
அனைத்து கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி முக்கிய எதிரியாக பாஜகவை வீழித்த வியூகம் வகுத்திருக்கவேண்டும் .. விட்டுகொடுத்து
அனைவரையும் .. பாசிச எதிர்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டிருக்கவேண்டும் ..
திமுக.தலைவர்.ஸ்டாலின் அதை மிக கச்சிதமாக செய்தார் .. தமிழகத்தின் கம்யுனிஸ்ட்களின் பலமறிந்தும் 2 தொகுதிகளை ஒதுக்கினார் சில அரசியல் ஆய்வாளர்கள்/விமர்சகர்கள் கூட அதிகம் என
சொன்னார்கள் காங்கிரஸூக்கு ஏன் இத்தனை இடங்களை தரவேண்டுமென கேள்வி எழுந்தது ஆனால் திமுக தலைவரின் நோக்கம் பாஜகவை வீழ்த்தவேண்டும் .. அதேபோல் யார் பிரதமர் என்பதை முதலிலேயே அறிவித்து களமிறங்குவது நல்ல பலனை தரும் ..வடமாநில கட்சிகள் ராகுலை முன்னிறுத்த தயங்கியதும் ..எல்லோருக்கும் பிரதமர் பதவியின் மீது ஆசையும் கடைசியில் வழிகேட்டில் நிறுத்திய நிலையாகியது ..
..
கலைஞர் சொல்வார் என் உயரம் எனக்கு தெரியும்
அதனால் தான் பிரதமரை உருவாக்குகிற இடத்தில் இருந்தார் பிரதமராக ஆசைபடவில்லை .. கலைஞரைப்போல தளபதியும் மிக நேர்த்தியாக
கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற்று இன்று இந்தியாவே வியக்கிற தலைவராக உயர்ந்து நிற்கிறார்
50 ஆண்டுகளாக அனுபவமும் கலைஞரிடம் நேரடி பயிற்சியும் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கும், சரியான திட்டமிடலும் கடும் உழைப்பும் .. மக்களை நேரடியாக சந்தித்து உரையாடுவதும் .. மக்களுக்கும் தலைவனுக்குமான இடைவெளியை குறைத்ததும் .. தொண்டர்களை சரியாக வழிநடத்தியதும் இந்த பெரிய வெற்றிக்கு காரணிகளாகும் ..
..
தளபதி உயர்ந்து நிற்கிறார்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment