Tuesday, September 11, 2018

மன்மோகன் சிங்

மத்திய பாஜக அரசு தனது எல்லைகளை கடந்து சென்று கொண்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரமாகும். தேசத்திற்கு விரோதமான பல்வேறு காரியங்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. டாக்டர் மன்மோகன் சிங் .. .. மிகவும் எளிமையாக பேசகூடியவர் நாகரீகமாக கோபம் கொள்ளாத சொல்லாடலை பயன்படுத்தும் திரு.மன்மோகன் சிங் போன்றவர்கள் கூட கவலைகொள்ளும் நிலையில் நாடு இருப்பதை கண்டு பதறுகிறார்கள் எல்லாதுறையிலும் செயல்பாட்டிலும் தோல்வியை தழுவிய அரசாய் மோடியின் அரசு இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவதாக சொல்லி ..கடும் வீழ்ச்சியை தந்திருக்கிறது .. மக்கள் மீது சுமத்தபடும் வரிசுமைகள் தாங்கமுடியாதவாறு இருப்பதும் நடுத்தர மக்கள் சிரமபடுவதும் ..வெளியில் சொல்லமுடியாமல் தவிப்பதும் இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துகாட்டுகிறது.. .. அத்தியாவசியப் பொருட்களின் விலை சாமானியனின் குரல்வலையை நெரிக்கிறது உலகில் பெட்ரோல்விலை பாரத தேசத்தில் தான் அதிகம் .. எரிவாயு விலை நானுறை தொட்டபோது வானத்திற்கும் பூமிக்கும் ர்கள் இப்போது எதுவும் எங்கள் கையில் என்கிறது பாஜக அரசு .. .. முற்போக்காளர்கள் நாட்டின் நலன் நாடுவோர் .. கல்வியலாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்பதோடு காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை கொண்டுவந்தமைக்கு ஒருவித குற்றவுணர்வை பதிகிறார்கள்.. மதவெறியை தவிர .. வேறொன்றும் சாதித்தாக தெரியவில்லை ஒட்டுமொத்தமாக அறிவிலிகளும் பொய்யர்களும் பித்தலாட்டகாரர்களும் என பாஜகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன பொய்களால் கட்டியெழுப்பட்ட ஆட்சி ஆட்டம் காண தொடங்கியிருக்கிறது .. விரைவில் வீழும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment