Sunday, September 23, 2018
கருணாஸ்
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒருசட்டம்; கருணாஸ்க்கு ஒரு சட்டமா?
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் கேள்வி..
கருணாஸின் கைதும் அது சொல்லும் பாடமும் புரிந்தால் திராவிடத்தை ஏன் தூக்கிப்பிடிக்கவேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தும்..
..
கருணாஸின் பேச்சு அப்பட்டமான ஜாதிவெறி என்றாலும் அதில் மறைந்துள்ள உண்மையை மறுக்க ஆட்சியாளர்களால் முடியாது .. கவுண்டர் ஜாதியை சேர்ந்தவரை எங்கள் சின்னம்மா தான் முதல்வராக்கினார் என்ற கருத்தை மறுக்கமுடியுமா.. இன்று மார்தட்டும் கவுண்டர் .. அன்று நாயைப்போல தவழ்ந்து சசிகலா காலை தொட்டு எழுந்ததை நாடு பார்க்கவில்லையா..
அன்றைக்கு கௌரவமெல்லாம் எங்கே போனது .. பதவி வேண்டுமென்பதற்காக யார் காலையும் பிடிக்கலாமென்ற நிலையை அதிமுகவில் எல்லா ஜாதி மதத்தை சேர்ந்தவரும்
எடுத்திருக்கிறார்கள் பதவி வந்தவுடன் முதுகில் குத்திய வரலாறு.. மகோரா காலத்திலிருந்தே உண்டு .. முதல்வரைப் பற்றி தவறாக பேசினார் என்று கருணாஸை கைது செய்த காவல்துறை..
impotent ஆண்மையற்ற என்ற குருமூர்த்தியை ஏன் கைது செய்யவில்லை வழக்கு கூட பதிவு செய்யவில்லையே ஏன்..
..
கருணாஸை விட மிக மோசமாக பேசிய எச்.ராசாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் அவர்கள் தயவில் ஆட்சி நடக்கிறது அதைவிட அவாள்கள் பேசவே இல்லையென்று மறுப்பார்கள் கடைசியில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிடுவார்கள்
அது சாவர்க்கர் கோல்வார்கர் போன்ற ஆர்எஸ்எஸ் முன்னோடிகள் கற்றுதந்தது மன்னிப்பு கடிதம் கொடுத்து தேசத்தை காட்டிக்கொடுக்கிற பின்னணி அவர்களுடையது ..ஆனால் கருணாஸ் நான் தான் பேசினேன் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதென்று சொல்கிற திமிர் இது தமிழனுக்கே உரியது ..
..
எச்.ராசாவால் ராமதாஸ் கருவறைக்குள் நுழையமுடியுமா கருவறுத்துவிடுவோமென பேசிவிட்டு நடமாட முடிகிறதென்றால் அதுவும் காவலர்கள் பாதுகாப்பில் வலம்வர முடிகிறதென்றால் புரிந்துக்கொள்ளுங்கள் இந்த கேடுகெட்ட ஆட்சியின் லட்சணம் ..
கருணாஸை அவசரமாக கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி மீது உஃபா சட்டம் வரை பதிவு செய்யப்பட்டது.மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பொதுமக்கள் பலர் இன்று வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஒழிக என்று கூறியதற்காக சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைதுசெய்யப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் , திவ்யா , வளர்மதி போன்றவர்கள் ஆட்சிக்கெதிராக போராடினார்கள் என்பதற்காக கைது நடவடிக்கை எடுக்கபட்டது ..
ஆனால் ஹெச்.ராஜா வும் , எஸ் வி சேகரும் தனிமனித தாக்குதல் , இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை கட்டிக்காக்கும் நீதிமன்றத்தை மிகவும் இழிவான முறையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் எந்த விதத்திலும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் மிகவும் பாதுகாப்பான முறையில் வலம் வருகிறார்கள் ..
இதை தான் எதிர்க்கட்சி தலைவர் தளபதி.ஸ்டாலின் கேட்கிறார்
பார்பனனுக்கு ஒரு நீதி..
சூத்திரனுக்கு ஒரு நீதியா
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment