Tuesday, September 4, 2018

தமிழிசை...

சோபியா.. கருத்துசுதந்திரம் எதுவென்பதை நாம் உணரவேண்டும் ஆளும் பாஜக எதிராக பேசுவது மட்டும் அல்ல எதிர்வினையை களமறிந்தாற்ற வேண்டும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்பதில் எந்தவித சமரசமும் இல்லை ஆனால் அது தனிநபரின் மீதான தாக்குதலாக இருக்க கூடாது ..ஒருவரின் தனிப்பட்ட நிகழ்வில் நாம் சென்று ஒருவித கலவரத்தை செய்வதும் தவறு .. .. ஒட்டுமொத்த இந்தியாவும் பாசிச பாஜகஆட்சி ஒழிகவென்று சொல்ல வைத்ததில் திமுக வெற்றி கண்டிருக்கிறது ..திமுக தலைவர் தளபதியின் விரைந்து செயலாற்றியதும் அதை தொடர்ந்து அது உலகம் முழுவதுமான செய்தியாய் போனது .. திமுக சரியாக பயணிக்கிறதென்று நினைக்கிறேன் .. உடனுக்குடன் பதிலடி தருவதென்பது அவசியமாகிறது .,. பாவம் தமிழிசை எந்தவொரு விடயத்தையும் எப்படி கையாள்வதென்று தெரியாமல் ஊதி பெருசாக்கிவிட்டார் .. தமிழசை தன்னை ஆரிய சித்தாந்தி என எண்ணிக்கொள்கிறார் பாவம் அவர் உணரவில்லை அவருக்கு சேர்த்துதான் திராவிட இயக்கம் உழைத்துக்கொண்டிருக்கிறது .. சோபியாவின் பின்னால் மட்டுமல்ல .. தமிழிசை போன்றோருக்கும் நாளை துணை நிற்கும்,.. .. அதிகாரத்தில் இருக்கிறோமென்ற திமிர் அவரை அப்படி நடந்துக்கொள்ள வைத்திருக்கிறது சமீபகாலமாக தமிழக பாஜவினரின் உடல்மொழியில் ஒருவித தெனாவட்டை காணலாம் அது அறிவின் செருக்கிலோ அல்லது சரியான செயல்பாட்டிலோ உண்மையின் மீது நின்று கதைப்பதாலோ வந்ததில்லை மாறாக தமிழகத்தில் தலையாட்டும் "சர்க்கார்" .. ஊழலில் திளைத்து சுருட்டியதை பாதுகாக்க எதைச் சொன்னாலும் கிளைப்பிள்ளையைப்போல் சொல்லும் அடிமைகள் அரசு இருப்பதால் இவர்களின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது..ஆனால் தமிழகம் ஒவ்வொரு முறையும் காரி உமிழ்கிறது .. துடைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையை செய்கிறார்கள் தமிழிசை பொன்னர் வகையறாக்கள்.. .. கருத்து சுதந்திரம் .. எதிர்ப்பை காட்டுதல் என்பது தன்மானமுள்ளவர்கள் செயல் .. திமுக மீது எத்தனை விமர்சனங்கள் அவையெல்லாம் பொருட்படுத்தாமல் அதேவேளை எமது பணியை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம்.. இன்னும் சொல்லப்போனால் தனிநபர் தாக்குதல் கூட அதிகம் சந்தித்தவர் கலைஞர் பெருமகன் .. எல்லை மீறும் போது மட்டும் பதிலடி தருவார் .. திரு.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் தாக்கினாரே என்று தமிழிசை கேட்கிறார் .. அங்கு நடந்தது வேறு பெண்கள் மீது இடித்து நின்று கொண்டிருந்து இடைஞ்சல் தந்தவரை தள்ளிவிட்டார் .. எதைஎதோடு ஒப்பிட வேண்டுமென்று கூட தெரியவில்லை.. தமிழிசை முன்னே பாஜகவினர் சோபியாவை தரம்தாழ்ந்த சொற்களை பயன்படுத்தியதாக அவரது தந்தையே எழுத்துபூர்வமாக புகார் அளித்திருக்கிறாரே அதற்கு தமிழிசையின் பதில் என்ன.. தமிழிசையின் சமீபத்திய செயல்கள் சகிக்கவில்லை சகவாசத்தால் வந்தது .. மோடி ஆட்சியை விமர்சிக்கலாமென்கிறார் இவர்களோ ஆடுகிறார்கள் .. .. சமூகஅநீதிக்கு எதிராக பொங்கி எழுந்தால் அது எப்படி தவறாகும்.. மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு சிலநேரம் காட்டாற்று வெள்ளம் போல உடைத்துகொண்டு போகும் என்பதை பாசிசபாஜகவின் தமிழிசை உணரவேண்டும்.. .. #பாசிசபாஜகஆட்சிஒழிக .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment