Sunday, September 2, 2018

கலைஞர்

மெரினாவிற்கு போய்விட்டு வந்தால் குளிச்சிட்டு பூணூலை மாத்திக்கணும் என்ற ஆரியர்களின் கிண்டலுக்கெதிராக .. பிறந்த குழந்தைகளை கூட கலைஞரின் காலடியில் வைத்து மிகப்பெரிய ஆரியத்திற்கெதிரான கலகத்தை மக்கள் மௌனமாய் செய்கிறார்கள். .. குடியரசு இதழில் #தீட்டாயிடுத்து என்று கட்டுரை தீட்டியவர் ஓய்வெடுக்க சென்ற பிறகும் மிகப்பெரிய புரட்சியை அமைதியாய் செய்துக்கொண்டிருக்கிறார்.. .. வணங்குதல் அல்ல வழிபாடு முறையல்ல மாறாக நன்றி நவிழ்தல் தன் இன மேம்பாட்டிற்காக உழைத்தவரை.. இந்த மனிதசமூகத்தின் .. மூட புரட்டுகளுக்கெதிராக ஆணியடித்தவரை .. வாழும் வரை ஒரு போராளியாய் இந்த சமூகத்தின் புரையோடி போயிருந்த நாற்றமடித்த சாதி மத வேற்றுமையை கலைந்து சமத்துவபுரம் கண்ட புரட்சியாளரை.. ஏழைகளுக்கு எட்டாத உயர்கல்வியை .. முதல் தலைமுறை பட்டதாரிக்கு இலவசமாய் அரசு செலவில் உயர்கல்வி தந்த கல்விகண் தந்த கோமானை .. வரும் புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் செயலாய் பிறந்த குழந்தைக்கு தாய்பாலைப்போல தமிழுக்கு தொண்டு செய்ய முத்தமிழின் மடியில் கிடத்துகிறார்கள்.. .. இதுவரை எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் வாழ்ந்தார்கள் ..நாட்டிற்கு உழைத்தார்கள் மறைந்தார்கள்.. ஆனால் கலைஞரை இந்த சமூகம் நன்றியோடு காலமெல்லாம் நினைவு கூறும் ..மிக கடுமையான விடயமென நாம் எண்ணிக்கொண்டிருந்தவைகளை ஒன்றுமே இல்லாமல் உடைத்துபோட்டு போய்விட்டார்.. வரலாற்றில் எந்தபக்கம் திருப்பினாலும் .. அரைநூற்றாண்டில் கலைஞர் செய்ததின் வினை ... இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆற்றிக்கொண்டே இருக்கும்... .. ஆம் கலைஞரைப்பற்றி நீ அறிய முற்படுகிறபோதுதான் உன்னையே நீ யாரென்று உணர முடியும் எந்தளவிற்கு உன்னை உயர்த்தி பிடித்திருக்கிறாரென்று தெரியும்,.. கலைஞரின் வாழ்வியல் தெளிவான திறந்த புத்தகம் அவர் ஆற்றிய அளவிலா நன்மைகள் வரும் தலைமுறைக்கும் நல்லதையே செய்து கொண்டிருக்கும்.. பகுத்தறிவு பகலவனின் சொல்லில் அண்ணா தந்த பாதையில் அவர் நடத்திய ராஜபார்ட்டை .. எவராலும் ஈடுசெய்ய முடியாது ... கலைஞர் தனி மனிதரல்ல .. சமூகநீதியின் முகம் சமூகநீதி தத்துவம் .. கலைஞர் தமிழரின் தவம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment