Monday, September 3, 2018

திமுகவிற்கு எச்சரிக்கையாம்..

மகா உத்தமர் வெளியில் வந்து நானுமிருக்கிறேன் என்று சொல்லிபார்த்து.. நான் யோக்கியனப்பா என கெஞ்சிபார்த்து யாருமே கண்டுக்கொள்ளாமல் போக .. தன் நிலைநிறுப்பை காட்ட யாராவது கவனிக்கமாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளபட்டு.. கடைசியில் திமுகவை சொறிகிறார் திமுகவிற்கு எச்சரிக்கையாம் .. ஒருவரின் தனிபட்ட விடயங்களை நாம் பேசுவதில்லை அது அவரும் அவரோடு சம்பந்தபட்டவரின் குடும்பம் சார்ந்தது அவர் முஸ்லிம்களிடம் மரியாதை இழந்து நிற்கிறார் .. இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பகுதிவரை ஆதிக்க செலுத்தி மூளைச்சலவை செய்து .. தன்னை உத்தமனாய் காட்டிக்கொண்டு.. தான் பேசுவது மட்டுமே உண்மை .. தனக்கு மட்டுமே இஸ்லாம் தெரியும் .. தான் சொல்லும் வழி தான் இஸ்லாம் இனிய மார்க்கமென்று அரைகுறை அறிவோடையோரை .. தனிமையில் ஒருவித மன வெறுமையில் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை .. வழிகெடுத்து உற்றார் உறவினர் சேர்ந்துவாழ்ந்த சமூகத்தில் .. எல்லாதளத்திலும் வேறுபாட்டை கொண்டுவந்து பிரித்து ஒற்றுமையை சிதைத்து இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் செலுத்தி.. வருடக்கணக்கில் சிறைகளில் வாழ வைத்ததை தவிர வேறென்ன சாதித்தார்.. .. திமுக இதை செய்யவில்லை திமுக ஆட்சியில்தான் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு பாய்ந்தது எனச் சொல்லி தாங்கள் செய்த தவறை நியாயபடுத்த நினைத்து.. பழியை தொடர்ந்து திமுக மீது சுமத்தி காழிபுணர்ச்சியை வளர்த்ததை தவிர வேறென்ன சாதித்தார்.. சிறையில் வாடும் குடும்பங்களுக்கு நிதிவசூல் செய்து அதிலும் கமிஷன் பார்த்து சொகுசாக வாழ்கிறார்கள் .. யோசிக்க மறந்தவன் ..சிறையில் சிறுநீரகம் செயலிழந்து வாழ்வை தொலைத்து வாடுகிறான்.. பாவம் அவன் குடும்பம் மகன் வளர்ந்து நம் குடும்பத்தை காப்பான் என்ற கனவு சிதைந்து அவனை வெளியே எடுக்க சொத்தையெல்லாம் இழந்து நிற்கிறார்கள்.. சொந்த சமூகத்திற்கு இளைஞர்களை வழிகெடுத்தவர் .. யோக்கியத்தைப்பற்றி பேசுவது ஏமாற்றுவேலை.. .. திமுக மீதான விமர்சனங்களை எப்போதுமே எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அது உண்மையானதாக சரியானதாக இருந்தால் அதற்கு விளக்கம் தர தயாராக இருக்கிறோம் ஆனால் தங்களின் நிலைநிறுப்பிற்காக திமுகவை சாடுவதென்பதைஏற்க முடியாது .. திமுக இஸ்லாமிய சமூகத்திற்காக செய்தவைகள்.ஏராளம் . கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியதை கருத்தில் கொண்டு பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது..சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக.. திமுகவை குறைகூறுவதை விடுத்து வேறுவேலையை செய்யலாம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment