Saturday, September 8, 2018
இந்தி ..
இந்துத்துவா சித்தாந்தத்தின் எதிரான அடையாளம் தான் தந்தை பெரியார். ஆகவே , பெரியாரை ஆதரிக்கும் அனைவரும் அவர்களை பொருத்தவரை தேசத் துரோகிகள் தான். பெரியார் எமது அடையாளம்.
ஹிந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. ஹிந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா என்ன ? அப்படி என்றால் ஹிந்தி பேசுபவர்கள் ஏன் சரவண பவன் ஹோட்டலில் தோசை சுட்டு கொண்டு இருக்க வேண்டும் . ஹிந்தி பேசுபவர்கள் ஏன் தமிழ் நாட்டிற்கு இடம் பெயர்ந்து தொழில் தேட வேண்டும்.
#மானமிகு_கனிமொழி ..
..
நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல இன்னும் சொல்லப்போனால் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல..
பன்முக தேசத்தில் ஒரு மொழியை அதுவும் 1825 பிறகு உருவாக்கப்பட்ட மொழியை தனக்கென்று ஒரு இலக்கணமில்லாத .. உருது மற்றும்,ஹிப்ளு மொழி இலக்கணத்தை தன்னகத்தே கொண்ட கலப்பு மொழியை இந்தியாவின் பன்முக இனத்தின் மீது திணிப்பதை அதையே பிரதமர் மறைமுகமாக செய்ய நினைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்..
"தினமும் உரையாடல் மூலம் ஹிந்தி மொழியை பரப்ப வேண்டும். ஹிந்தி மொழியின் மூலம் நாம் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். ஹிந்தி பேசும் போது சாதாரண வார்த்தைகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். தொழில் நுட்ப வாதத்தைகளை பயன்படுத்தி பேச வேண்டாம் என பாரத பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதை ஏற்க முடியாது இது ஒருவகை சர்வாதிகாரத்தனம்
நேருவின் உறுதிமொழிக்கெதிரானது..
தென்னாட்டின் மீதான கலைச்சார தாக்குதல் இது..
..
பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது அதைவிடுத்து பல்வேறு இனங்களின் மீதான கலாச்சார யுத்தத்தை மௌனமாக செய்வதென்பதை ஏற்கமுடியாது .. எங்கிருந்தோ வந்த மொழியின் வளர்ச்சிக்காக ..120 கோடி பேர் வாழும் நாட்டில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே பேசுகிற ..ஏறக்குறைய செத்த மொழியை சிங்காரிப்பதும்,.. அது பயன்தராதென்ற நிலை வந்ததும் இந்தியை முதன்மைபடுத்த நினைக்கிறது மத்திய பாசிசபாஜக அரசு.. தொன்மையான உலகின் மூத்த மொழியை கொண்ட இனம் வாழும் நாட்டில் .. உலகிற்கே மொழியின் மூலஇலக்கணத்தை கலாச்சாரத்தை தந்த இனம் வாழும் நாட்டில்.. திராவிடர்கள் பேசிய மொழி தமிழென்று ஆய்வுகளும் தரவுகளும் அகழ்வு ஆராய்ச்சிகளும் .. இந்தியாவில் வாழ்ந்த மூத்த குடி திராவிட இனத்தை சேர்ந்ததென்றும் ஆதாரங்கள் கிடைக்க பெறுகிற காலகட்டத்தில் இந்திய துணைகண்டத்தின் மொழி தமிழென்ற உண்மையை மறைக்க அல்லது தடுக்க மிக வேகமாக அவசர அவரசமாக இந்தியை திணிக்க முற்படுகிறார்கள்.
இந்தியர்களின் பூர்வீக மொழியை
புறக்கணிக்கவேண்டுமென்பதற்காகவே இந்தி திணிப்பை செய்ய துடிக்கிறது பாசிபாஜக அரசு
..
எந்தவொரு மொழியும் வளமான இலக்கண கட்டமைப்போடு இல்லையெனில் காலபோக்கில் அழிந்துவிடும் .. தெய்வத்தின் பாஷை என்று
சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும் ..
எந்தவொரு திணிப்பும் மக்களால் சமூகத்தால் புறக்கணிக்கபட்டதாகதான் வரலாறு..
உணர்தல் நலம்
..
மொழிகளின் தாய் எமது தமிழ்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment