Friday, September 21, 2018
திமுக..
கேவலமான செயலை மிக லாவகமாக சொல்கிறார் கருணாஸ்.. கூவத்தூர் ஒன்றிருப்பதே யாருக்கும் தெரியாது மூன்றுபக்கமும் கடல் சூழ்ந்த ஒரேயொரு வழிபாதை தான் யாரும் தப்பிக்கமுடியாது என்று நான் தான் சொன்னேன் .. அதோடு அவர்களுக்கு நான் தான் தண்ணீ சப்ளை செய்தேன் என்கிறார் திருவாடானை மக்களுக்கு மிக்க நன்றி!..
இவரைப் போன்றவர்களை தேர்ந்தெடுத்தனுப்பி இவர்கள் எப்படிபட்டவர்கள் என்ற உண்மையை உணர்த்தியமைக்கு!..
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கலைக்கபட்டிருக்க வேண்டிய அரசை தங்களின் சுயலாபத்திற்காக தங்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போனதை .. சமூகநீதி என்ற பெயரில் பார்பனர்களின் வாழ்வின் ஒளிமயத்தை பறித்ததை இனி எத்தனை ஆண்டுகளானாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாதென்பதை அறிந்து சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளையை போல இந்த கோமாளிகளை வைத்து நிழல் அரசு நடத்தலாமென்ற ஒற்றை திட்டத்தோடு மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இல்லையென்ற நிலையிலும் காத்து நிற்கிறது ..
..
கூவத்தூர் தமிழக அரசியல் வரலாற்றில் அசிங்கம் பிடித்த பக்கம் அங்கு நடந்ததும் அதை ஊடகங்களும் ஊகங்களும் சொன்னதும் மது மாதுவென அவர்களை ஒருவித மயக்கத்திலேயே வைத்திருந்து இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியாக்கி .. சசிகலாவை முதல்வராக்க கூடாதென்று அதுவரை கிடப்பில் போடபட்டிருந்த ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கி .. நாடகங்களை நிறைவேற்றி ஒரு பொம்மை அரசை நிறுவியதின் உண்மை இப்போது தன் கோர முகத்தை மக்களுக்கு காட்டுகிறது .. கேவலமான செயல்களாலும் ஒரு அரசை நிலைநிறுத்த முடியுமென்ற கசப்பான உண்மைகள் வெளிவருகிறது ..
..
இவை அனைத்தும் திமுக அதிகாரத்திற்கு வருவதை காலதாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கை தவிர வேறில்லை .. தொடர்ந்து எல்லா அமைச்சர்களும் தங்களின் சௌகரியம் போல் கொள்ளையடிக்கிறார்கள் யாரும் முதல்வருக்கு கட்டுபடுவதில்லை கேட்டால் நீ யோக்கியமா என்னை கைது செய்தால் உண்மையை வெளியே சொல்லவேண்டிவருமென பகிரங்கமாக மிரட்டுகிறார்கள்.. ஒவ்வொரு அமைச்சரும் நாளுக்கொரு பொன்மொழியை..? உதிர்க்கிறார்கள் அவை அனைத்தும் எந்தளவிற்கு அறிவிலத்தனமானவர்களாக விவரகேடுகளாக இருந்திருக்கிறார்களென்பதை எடுத்துகாட்டுகிறது .. இவர்களின் ஒட்டுமொத்த ஊழலை பட்டியலிட்டு போராட்டம் நடத்தினால் பதிலுக்கு திமுகவை எதிர்த்து போராட்டமாம் அது ஈழப்போரின் திமுகவின் நிலைபாட்டை சுட்டிகாட்டி ..பாவம் இலங்கையின் தற்போதைய சூழலும் அவர்களின் ஜனநாயக அரசியல்பாதைக்கு வந்ததும் தெரியாமல் கூத்தடிக்கிறார்கள் .. கூத்தாடிகளின் நிழலில் வளர்ந்த அறிவிலிகளிடத்தில் வேறெதை எதிர்பார்பது .. இவர்கள் முகம் மக்கள் முன் தோலுரிக்கபடவேண்டும்
..
திமுக தலைவர் தளபதி. ஸ்டாலின்
”அ.தி.மு.க அரசின்
"Collection - Commission - Corruption"
விவரங்களை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்ல தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நகராட்சிகளிலும் ,
அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில்
தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்..
..
மக்கள் தெளிவான சிந்தையோடு நல்லதொரு மாற்றத்தை அது திமுகவால் மட்டுமே,தரமுடியுமென நம்பி காத்திருக்கிறார்கள் ..
..
#கதிரவனின்_வரவிற்கு_காத்திருக்கிறது_தமிழகம்…
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment