Sunday, September 9, 2018
ஊழல் அரசுகளை.. விரட்டுவோம்
குட்கா ..
எடப்பாடி அரசிற்கு தலைவலியாக குட்கா விவகாரம் தலையெடுத்திருக்கிறது விஜயபாஸ்கர் மத்திய புலனாய்வின் வட்டத்திற்குள் கொண்டுவரபடலாம் .. ஆனால் முதல்வர் எடப்பாடி பழநிசாமி பதவி விலக சொல்லியும் மறுத்திருக்கிறார் என செய்திகள் வருகின்றன..
அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்து ஒன்றுமில்லாதாக்கும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாக அறியமுடிகிறது .. ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஊழலில் திளைத்து செழுமையாக இருக்கிறார்கள்..
..
இந்தியாவிலேயே முதல்வராக இருக்கும் போதே கொள்ளையடித்தற்காக .. திருடியென முத்திரை குத்தி சிறைவைக்கப்பட்ட சரித்திர பின்னணி கொண்ட தலைவியின் வழிநடப்போரிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் .. முதல்வரே தன் சம்பந்திக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை ஒற்றைசாளர முறையில் ஒதுக்குவதும் .. அது சட்டவிரோதமென்று திமுக தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியும் .. ஏன் நீதிமன்றத்தில் திமுக வழக்கை பதிவு செய்தும் .. ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறவில்லை.. மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காததால்..
முன்பு கொள்ளையடித்த ஜெயலலிதாவை தியாகியாக்கி .. அரசே புகழ்மாலை செலுத்துவதால் .. அரசுபணத்தை கொள்ளையடிப்பதும்.. ஊழல் செய்வதும் சட்டப்படி தவறில்லையோ என அதிமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் கருதிவிட்டார்கள் போலும்.
..
ஊழலுக்கெதிராக செயல்படுவதாக சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு விநோதமான முறையில் கொள்ளையடிப்பதும் பாஜகவை சேர்ந்தவர்கள் மீதே குற்றசாட்டுகள் வருவதும் பிரதமர் மீதே உச்சநீதிமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குற்றசாட்டு பதிய வழக்குகள் வருவதும் விடுதலை இந்தியாவின் புதிய பரிணாமம் .. இவர்கள் தான் ஊழலை ஒழிக்கவந்தவர்களென நம்ப வேண்டுமாம்.. தமிழகத்தின் முதல்வர் மீதே,குற்றம் நிரூபிக்கபட்ட பிறகு அதிகாரம் மிக்க மத்திய அமைச்சர்.. தலைமை திருடியை சந்தித்து வழக்கை நீர்த்துபோக செய்தது அதன் தொடர்ச்சிதான் குற்றவாளிக்கு நினைவு மண்டபம் வரை வந்து நிற்கிறது .. இதே ஜெயலலிதாவின் விழுதுகள் ஊழலில் கரைகண்டவர்கள் .. ஏனடா திருடினாய் என கேட்டால் ஆசியாவின் பணக்காரன் என்றெல்லாம் திசை திருப்புவார்கள் ..முடிந்தால் நிரூபி என்றால் ஒருவரையும் காணோம் .. அதிமுகவினரை ஊழல்வாதிகளை நாடறிந்த கொள்ளையர்களை
மத்திய பாசிசபாஜக அரசே ஊக்குவிக்குகிறது..
..
அறுபதாண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடு சந்திக்காத துயரங்களை அறுபது மாத பாசிச பாஜகவின் ஆட்சி மோடி ஆட்சி நமக்கு தந்திருக்கிறது .. கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் வளத்திற்காக இயற்கை வளங்கள் சுரண்டபடுவதும்,.. மக்களைப்பற்றி கவலைக் கொள்ளாமல் விலையேற்றத்தை தடுத்த நிறுத்த தவறியதும் .. பெட்ரோல் விலை உலகிலேயே இந்தியாவில் அதிகமாக வரிவிதித்து விற்கபடுவதும் .. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ந்து உலகளவில் இந்திய முகம் கேலியாக பார்க்கபடுவதுமே மோடியின் சாதனை.. ஊழலை இவர்கள் ஆட்சியில் புதிய காரண பெயரிட்டு அழைக்கும் விநோதம் கருப்புப்பணம் ..முதலீடாகிறது ..கணக்கு தணிக்கை அறிக்கையெல்லாம் இழப்பாகிறது...காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் இதெல்லாமே ஊழல் என்று பெயர் மாற்றம் செய்யபடும்..
..
ஊழலை ஆதரிக்கிற ஊழலோடு கைகோர்க்கிற
இந்த ஆட்சிக்கு எதிரே மக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டும் மத்திய மாநில அரசுகள் செயலிழந்து நிற்கின்றன ஒன்றையொன்று சார்ந்து .. மக்கள் புறக்கணிக்கும் தொடக்கமே..
நாளைய பாரத பந்த்
..
பாஜக அதிமுக அரசுகளை...தூக்கியெறிவோம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment