Wednesday, September 12, 2018
ஆளுரார்
ஆளூர் ஷாநவாஸ்..
வி.சி.க துணைப்பொதுசெயலர் ஆளுராருக்கெதிராக சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் ஆர்பார்ட்டம் என வரிசை கட்டுகிறார்கள்..
அப்படி என்ன பேசிவிட்டார் இஸ்லாமிய பெண் ஒருவர் மதம்மாறி மாற்றுமதத்தவரை திருமணம் செய்தார் அவரை விமர்சிப்பதாக
"விபச்சாரம்" என்கிற சொற்சொடரை பயன்படுத்தி கீழ்தரமாக கருத்திட்டதை கண்டித்தார் .. அவ்வளவுதான்
கடுமையான வார்த்தைகளால் அறிக்கைகளை தருகிறார்கள் நாளை அவரை இஸ்லாமிய விலக்கு கூட செய்யலாம்..
..
அவரின் கருத்து இதோ..
முஸ்லிம் பெண் ஒருவர் நரகத்தின் எரிப்பொருள் ஆவதை தடுக்கவே ஜமாத் அறிக்கை வெளியிட்டதாக சொன்னதை.. இதே அளவுகோலை ஏன் ஆண்களுக்கு கடைபிடிக்கவில்லை .. நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்காக ஜமாத் கதவுகளை தட்டியபோது ஏன் திறக்கவில்லை என்று சாடியிருக்கிறார்.. சம்பந்தபட்ட பெண்ணின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறாத போது ஏன் பத்வா கொடுக்கவேண்டும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பெண்ணை இஸ்லாமிய சட்டம் கட்டுபடுத்தாதென்று அறிக்கை விட்டது உலமாக்களை சூடாக்கி இருக்கிறது .. குவைத் தமிழ் உலமாக்கள் கண்டன ஆர்பார்ட்டத்தை நாளை நடத்துகிறார்கள்..
..
முதலில் தனி ஒருவரின் திருமண விடயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் திருமண வயதை எட்டிய ஒரு பெண் அரசியல் அமைப்பு அவருக்கு வழங்கிய உரிமையில் அவர் சுயமாக எடுத்த முடிவை ஒட்டுமொத்த சமூதாயத்திற்கே கேட்டை போல சித்தரித்தது அறிவிலித்தனம்
அவரின் குடும்பத்தார் பல முறை எடுத்துச் சொல்லியும் அவரைதான் திருமணம் முடிப்பேன் என்று சென்றுவிட்ட பிறகு அதை பெரிதாக்க ஒன்றுமில்லை ..அதை இஸ்லாமிய அமைப்புகளும் இந்து அமைப்புகளும் கையிலெடுக்க வேண்டியதே இல்லை.. இதில் மதரீதியாக அணுகியதே தவறு .. ஒரு பெண் முஸ்லீமாக மதமாறி திருமணம் செய்தால் அதில் தவறில்லை என்கிற போது இதுவும் தவறில்லை என்றாகிறது இதை தான் ஆளூரார் அவரது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் ..
..
உடனே ஆளூர் ஷாநாவாஸ் எதிராக "பசு தோல்போர்த்திய புலி" என்றெல்லாம் வசனமெழுத தேவையில்லை இஸ்லாமிய இயக்கத்தில் இல்லையென்பதற்காக அவரை சாடுவதும் கொச்சைப்படுத்தி பேசுவதும் தேவையில்லாதது .. சொர்க்கத்தின் டிக்கட் இவர்கள்தான் மொத்தமாக விநியோகம் செய்கிறார்களா என்றும் தெரியவில்லை
ஆளுரார் அறிக்கையில் தவறிருந்தால் அதை விளக்கலாம் அதை விடுத்து ஆர்பாட்டம் கண்டனம் என்பதெல்லாம் சிறுப்பிள்ளைத்தனம்
அதோடு அவரை கல்யாணராமன் போன்ற அரைகுறைகளோடு/மதவெறியர்களோடு ஒப்பிடுவதும் சரியானதல்ல.. அவர் மதம்சார்ந்து இயக்கத்தில் இல்லாமல் விசிக போன்ற சமூகநீதிக்காக போராடுகிற இயக்கத்தில் இருப்பதையும் தொடர்ந்து பல்வேறு விவாதங்களில் காவிக்கெதிராக ஆணியடித்துவருவதை கருத்தில் கொள்ளவேண்டும் இப்போது அவர் கூறிய கருத்தில் கூட எந்தவித தவறுமிருப்பதாக தெரியவில்லை வேண்டாம் என்று உதறிதள்ளிவிட்டு போன பெண்ணை ஏன் விமர்சனம் செய்கிறீர் என்கிறார்..அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எரிச்சலை தந்திருக்கிறது .. தொடர்ந்து சிறுபான்மை சமூகத்திற்காக குரல் கொடுப்பவர் சமூதாயத்தை தாக்க வரும் பகைக்கெதிரே போராடுகிறவர்.. தன் சமூகத்தின் பீடாதிபதிகளை பார்த்து
சகதியில் கால் வைத்துவிட்டீர்கள் "நரகலில்" வைத்த காலை கழுவுங்களென சொன்னது குற்றமா..? என்ன .. ஆளுர் ஷாநவாஸின் கருத்தின் தவறிருப்பதாக தெரியவில்லை.. மதமேறி கிடப்பவர்களுக்கு அது புரியாது
எக்காரணம் கொண்டும் ஆளுர் ஷாநவாஸை விட்டுகொடுக்க முடியாது..
..
#Isupportaloorshanavas
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment