Monday, September 24, 2018
தலைவர்
தேர்தலுக்கு பிறகும்,பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம்.. திமுக தலைவர் தளபதி.ஸ்டாலின்..
..
தெளிவான எங்கள் சித்தாந்த எதிரியை இனங்கண்டு .. வீழ்த்தபடவேண்டிய பாசிச கூட்டத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார்.. தீண்டதகாத கட்சியல்ல என்ற துரைமுருகனின் பேச்சிற்கும் சேர்த்தே இந்த பதில் .. ஒட்டகத்தை கழுத்தை நிமிர்த்துவிடலாமென்று எண்ணி ஏமாந்தேன் என்ற திராவிடப் பெருந்தலைவர் கலைஞரின் பதிலை ஒட்டி.. எந்தகாலத்திலும் நிமிர்க்க முடியாதென்ற தெளிவு எம் தலைவரின் பதில்..
..
பாசிச பாஜக
ஆர்எஸ்எஸின் தேர்தல் அரசியலுக்காக பார்பனர்களின் நலன் என்ற ஒற்றை குறிக்கோளோடு .. இந்த மண்ணில் சாதி மத வேற்றுமையை ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காய்கிற குள்ளநரிகூட்டம் அது.. பன்முகம் கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒருமுகமாக அதுவும் பார்பனீய முகமாக மாற்ற நினைக்கும் பாசிச சிந்தனையுடைய கட்சியை.. மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து .. வேற்றுமையில் ஒற்றுமையென்று வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி மக்கள் பலபிரிவுகளையாய் தங்களுக்குள் அடித்துக்கொண்டால் அதன் முழுபலனையும் நாமே அனுபவிக்கலாமென்ற ஒற்றை சிந்தனையோடு நடத்தபடும் கட்சியை இந்திய ஒன்றியத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும்,
..
மக்களை துன்புறுத்தி.. கார்ப்பரேட்டுகளுக்கு வழிவகை செய்து நாட்டையே சுரண்டுகிற கட்சி ..எதிர்க்கட்சிகளின் மீது பழிசுமத்திய போது எதையெல்லாம் குற்றசாட்டாக சொன்னதோ அதெல்லாம் மிக சாதாரணமாக நடக்கிறது பெட்ரோல் விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்கிறார்கள் .. எரிவாயு விலையேற்றத்திற்கு போராட்டம் நடத்தியவர்கள் இன்று வாய்மூடி கிடக்கிறார்கள்.. தலித்கள் அம்மணமாக விரட்டபடும் கொடுமை .. சாதீய தீயை எரித்து அதில் குளிர்காய்கிற கொடூரம்.. மாட்டிற்காக மனிதனை கொல்கிற அநீதி.. மக்களின் கடைசி நம்பிக்கையான
நீதிமன்றங்களில் ஆர்எஸ்எஸ் பிடியில் .. ஜனநாயகத்தின் நம்பிக்கையாய் திகழ்ந்த தேர்தல் ஆணையம் பார்பனீய பாசிச சொற்படி ஆடுகிற கொடுமை ..சமநீதியற்ற .. பார்பனுக்கு வால்பிடிக்கிற காவல்துறை சூத்திரனை துரத்தியடிக்கிறது .. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் கவலைக்கிடமாய்.. இனியும் விட்டுவைத்தால் ஜனநாயகம் படுகுழியில் .. சர்வாதிகார ஆட்சியை மக்களை அடைக்கி ஆள்கிற கொடுமை அரங்கேறும் .. ஏழைகளுக்கு நீதி மறுக்கபடும் ..முதலாளிகள் செழிப்போடும் பாட்டாளிகள் பட்டினியோடும் அலைகிற சூழல் உருவாகும்..
..
இந்த பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த ஓரணியில் திரள்வோம்.. ஊடகங்கள் திரித்து வாய்க்குவந்ததை உளறிவைப்பதை மறுத்து எக்காலத்திற்கும் ஏற்றதல்ல பாஜகவின் செயல்பாடு என்பதை தெளிவுபடுத்தி.. திமுக பாதை மிக தெளிவாக .. திடமான கொள்கையோடு பயணிக்கிறது என்று உறுதியளிப்பதே தலைவரின் தேர்தலுக்கு பிறகும் பாஜகவோடு கூட்டணி இல்லை..
சில விசமிகளின் அவதூறுகளுக்கு பதிலாகவும் அமைகிறது.
தலைவருக்கு நன்றி ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment