Sunday, September 16, 2018

ஓடியொளிகிறான்

குரல் என்னுடையதல்ல .. எப்போதுமே திரைமறைவில் நின்றுக்கொண்டே கலவரபடுத்தும் பார்பனீயம் யாரோடு யாரை மோதவிட்டால் பலன் நமக்கென்று திட்டம் தீட்டி சூத்திரனையும் தலித்தையும் மோதவிட்டு அது சரியாக போனியாகாததால் மத கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவாளுக்கு நன்மை கிடைக்குமா என்றே எதிர்பார்க்கும் .. புறமிருந்தே ஏவி பழக்கபட்டவர்கள் யார் எய்ததென்று அறிந்தும் மௌனமாய் கடந்தே நமக்கு பழக்கமாகி விட்டது .. ஆனால் பாருங்கள் நேரடியாகவே இப்போது தூண்டி விடும் செயலை ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திட எண்ணி களமிறங்கி செயலாற்றி .. இந்துக்களின் தூதுவன் ..வாய்தவறியல்ல கோபம் தலைக்கேறி உளறிவைத்துவிட்டார் .. களம் பதட்டத்தில் தான் யார் .. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தேசிய செயலர் என்பதெல்லாம் மறந்து நிஜ முகம் வெளிப்பட்டது .. மசிராவது மண்ணாகட்டியாவது .. .. வேண்டுமென்றே கலவரத்தை தூண்டிவிட அவர் உபயோகித்த வார்த்தைதான் அது உடனடிபலனை தராதவாறு தமிழகம் அமைதி காத்து ..பாஜவை திருப்பி அடிக்கிறது.. இந்துக்களே வீதிக்கு வாருங்களென்ற அழைத்தபோது ..ஏற்கனவே பாஜகவிற்கு வாக்களித்து வீதியில் நிற்கிறோம் .. எங்களே வேண்டுமானால் கருவறைக்குள் அழைத்து செல்லமுடியுமா என கேட்க விழிபிதுங்கி நின்றனர் .. எத்தனையோ இந்து மத பண்டிகைகள் உற்சாகத்தோடு மக்கள் பெருங்கூட்டமாய் கலந்துக்கொள்கிறார்கள் ..அப்போதெல்லாம் கலவரம் வருவதில்லை .. ஆனால் விநாயகருக்கு மட்டும் ஏன் வருகிறது ..அதெல்லாம் இந்துக்களாலும் விநாயகர் சதூர்த்தி மட்டும் காவிகளாலும் நடத்தபடுவதே காரணம்.. விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள் கலந்துக்கொள்வதில்லை என்பதை கவனித்தால் உண்மை புரியும்.. .. ராசா தான் பேசவில்லை என்கிறார் ..கைதுக்கு பயந்து அவர் பொய் சொல்வது தெரிகிறது.. நிர்மலா கூட நான் பேசவில்லையென்று சொல்லவில்லை ஆனாலும் குரல் சோதனையில் மாற்றி பேசி கடைசியில் உண்மையான குரல் வெளியானது.. அதைப்போல இந்த பார்பன வெறியனை கைதுசெய்து சிறையில் அடைத்து பிறகு குரல் சோதனை செய்யவேண்டும்..இவர் போன்றவர்கள் வெளியில் நடமாடுவது பொது அமைதிக்கு இடையூறாகும்,..அமைதி கெட்டுபோகும் குஜராத்தைப்போல மிகப்பெரிய கலவரத்திற்குவித்திட்டார்கள்...எதிர்தரப்பு மிகவும் அமைதியாக இதை கையாண்டது ..மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து நன்றி தெரிவிக்கிறார்..கலவரத்தில் 10 வயது சிறுவர்கள் கூட கலந்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது .. கைது நீதிமன்றம் என அவர்களின் வாழ்க்கை பாதிக்கும்.. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது கூட அவர்களின் எதிர்காலத்தில் ரௌடியாக வர வழிவகுக்கும் .. இப்படி சிறுவர்களை தூண்டிவிட்டவர்கள் குண்டாஸில் கைது செய்யபடவேண்டும் .. நீதிபதி கர்ணன் நீதிமன்றத்தை விமர்சித்ததை ஏற்க மறுத்து .. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ..உயர்நீதிமன்ற நீதிபதி என்றும் பாராமல் கைது செய்த போது ஆஹா என புகழ்ந்தவர்கள் இன்று எச்.ராசாவை கைது செய்வார்களா ஒடுக்கபட்டவனுக்கு இவனுக்கு உள்ள வித்தியாசம் புரிந்தால்போதும்.. எது வீரம் நேர்மை தெரியுமா .. ஆம் நான் மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது பாசிச பாஜக ஒழிக என்று உரக்க சொன்னது வீரம்.. .. ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு முடிந்துவிடவில்லை தமிழ் மண்ணில் குரோதத்தை விதைக்க நினைக்கும் மூடனை சிறையில் அடைக்க வேண்டும்,.. சூத்திரன் உயிர் பார்பன் மயிருக்கு சமமென்று எண்ணுகிற.. திறக்கப்படாத கதவுகளுக்குள் அரசியல் செய்கிற ஈனர்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம்,.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment