Saturday, September 15, 2018
எம் அண்ணா
எம் அண்ணா..
திராவிடத்தை அறியணையேற்றிய அணையா விளக்கு .. ஆரியமே உன் சூதை இங்கே காட்டாதே என்ற பெருமகன் .. ஆரியத்தை எழவே முடியாமல் ஆழப்புதைத்தவர்
“நமஸ்காரத்தை வணக்கமென்று மாற்றியவர்
விவாகத்தை மணவிழா என்றும்,
காரியாலயம் அலுவலகம் என்றும் ..சத்யமேவ ஜெயதே வாய்மையே வெல்லும் என்று மாற்றிகாட்டியவர்.. வடமொழி கலப்பை வீழ்த்தி இன்பதமிழில் பெயரிட்டு அழைத்தவர்..
..
சமூகமேநம்பாட்டிற்காக உழைத்தால் போதும்
ஆட்சி அதிகாரமெல்லாம் வேண்டாம் என்றிருந்த நிலையை மாற்றி அதிகாரத்திற்கு வந்தால் தான் நாம் செய்ய நினைப்பதை செய்ய முடியும் தவிர்க்க எண்ணுவதை தவிர்க்க இயலுமென அறிந்திருந்த அறிஞர் ..
சுயமரியாதை திருமணத்தை உச்சநீதிமன்றம் தகாத உறவென்று தீர்ப்பு தந்த போதுதான் அதிகாரம் வேண்டும் என்று தோன்றியது .. சட்டம் இயற்றுகிற இடத்தில் அருமை புரிந்தது தேர்தல் அரசியல் தேவையென்று உணர்ந்து தி.மு.கழகத்தை தோற்றுவித்தார்.. மக்கள் பேராதரவோடு வென்றார்
ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதை திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்தது..
..
அண்ணா மிக சிறந்த ராஜதந்திரி..
67 ல் ராஜாஜியோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார் .. பெரியார் மிக கடுமையாக எதிர்த்த போதும் களத்தில் ராஜாஜியோடுதான் இருந்தார்.. வெற்றி செய்தி மெல்ல வரதொடங்கியது .. ராஜாஜி அண்ணாவை சந்தித்து Mr. அண்ணாதுரை யார் முதல்வரென்பதை முடிவு செய்துவிடுவோமா என்ற போது அருகில் இருந்த கலைஞர் திமுக அறுதிப்பெரும்பான்மை பெறும் அண்ணாதான் முதல்வர் என்கிறார் அமைதியாக இருந்த ராஜகோபாலச்சாரி உங்களுக்கு அனுபவம் இல்லை கோப்புகளை என் பார்வைக்கு அனுப்புங்கள் நான் பார்த்துவிட்டு சொல்கிறேன் அப்புறம் கையெழுத்திடலாம் என்றார் ..அண்ணா சொன்னார் உங்களுக்கு தெரியாததா ரகசியகாப்பை உறுதிமொழியை மீற முடியாது என்று சொன்னார்..வெற்றி பெற்றவுடனேயே நேராக பெரியாரை சந்தித்து இந்த வெற்றியை காணிக்கையாக்கிறேன் என்றார்.. அப்போது ராஜாஜி என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்றபோது காலங்காலமாய் எங்கள் இனத்தையே ஏமாற்றிவருகிறீர்களே நான் சில தினங்கள் ஏமாற்ற கூடாதா என்றார் ..
தேன்நிலவு முடிந்துவிட்டதென்றதற்கு இனி இல்லறம் இனிதே தொடங்கும் என்றார்
..
அண்ணாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கும் அறுவைசிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார் ..டாக்டரிடம் அறுவை சிகிச்சையை இரண்டுதினங்கள் தள்ளிவைக்க முடியுமா என்கிறார் அண்ணா .. ஏன் நல்ல நாள் பார்க்கிறீர்களா என்றபோது .. ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன் இரண்டுநாளில் முடித்துவிடுவேன் அதற்கு எப்போதுவேண்டுமானாலும் அறுவைசிகிச்சையை வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்... அந்தளவு புத்தங்களோடு நெருக்கமாக இருந்தார்.. எங்கள் அறிஞர் பெருமகன்
..
சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்டேன் .. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று மாற்றிவிட்டேன் இனி தமிழகத்தை யாராண்டால் என்ன இந்த அண்ணாதுரை ஆள்வதாகதான் அர்த்தம் ..
..
கலைஞரின் கவிதை..
“ஏறுகின்றார் அண்ணா
மேடை என்றால்
அது மகுடி நாதம்.
எழுதுகிறார் ஏட்டில் என்றால்
அது தமிழர் வேதம்.
எதிரிகளின் தலையெல்லாம்
முற்றிய கதிர்போல சாய்வதற்கு
எம் அண்ணன் கற்றிருந்தார்
முத்தமிழை ஆள்வதற்கு!
பொங்கு கடல் நடையும்
பூவையரின் மென்நடையும்-தன்
புதுத்தமிழ் நடையில் காட்டியவர்.
பாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும்
அவர் வாய் சிவக்கும்
தாக்குதற்குத் தமிழைப்
பிறமொழி பெருகி வந்தால்
அவர் கண் சிவக்கும்.”
..
கடமை கண்ணியம் கட்டுப்பாடு...
Duty Dignity Discipline...
வாழ்க.. அண்ணா
வாழ்க!.. அண்ணாவின் புகழ்...
#அண்ணா110
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment