Monday, September 10, 2018

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.. .. பெரியார் இந்த சமூகத்தை புரையோடி போயிருந்த மூடத்தை துடைத்தெறிய வந்தவர் எதையும் தொலைநோக்கோடு பார்த்தவர் சாதி மதத்திற்கெதிரே ஆணியடித்தவர் பிற்போக்குத்தனத்தை பெண்ணடிமையை தகர்த்தவர் எதையும் ஆழ்ந்தறிந்து கவனத்தோடு இந்த மனித குலத்திற்கு பொருந்துமா என பார்த்தவர் ..அவரை ஒரு கட்டுக்குள்,அடைத்துவிட முடியாது .. .. யாரிந்த பெரியார் .. மதத்திற்கு எதிரானவரா.. சாதிய கட்டுபாட்டை தகர்க்க வந்தவரா ஏன் கடவுள் நம்பிக்கையை மட்டும் சாடினார் .. அவரே சொல்கிறார் .. கடவுள்கள் மீது எனக்கென்ன கோபமா.. மக்களை பிரித்து ஏற்றதாழ்வை கொண்டுவந்த சாதிய கட்டமைப்பை கலைய வேண்டுமென்றேன் அது வேதம் சொன்னதென்றார் அப்படியெனில் வேதத்தை கொளுத்துவோமென்றேன் வேதம் கடவுள் அருளியதென்றார் அந்த கடவுளையே மறுத்தேன் என்கிறார்.. பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது .. .. பெரியார் அதிகம் பேசியது பெண்களுக்காக என்றே எண்ணுகிறேன்.. பெண் கல்வி விடயத்தில் மிக அதிகம் கவலைபட்டவரும் அவர்தான் .. பெண்கள் கையில் உள்ள கரண்டியை பிடிங்கிக்கொண்டு புத்தகத்தை கொடுங்கள் என்றவர் .. இன்னும் சற்று அதிகமாகவே.. உங்கள் ஆண் குழந்தைகளை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தை படிக்கவையுங்கள் என்றார் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்றாவது படிக்க வையுங்கள் .. கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்களென்றார் .. பெண்கள் கல்வி அறிவு ஒன்றே இந்த சமூக மாற்றத்திற்கு வழிவகுக்குமென்று நம்பினார் பெண்கள் கல்வி அறிவு தன்னம்பிக்கையை தருமென்றார் .. ஒரு தலைமுறையையே அறிவின் பாதையின் செலுத்துமென்று நம்பினார்.. ஆண்கள் பெண்களை புகழ்வதெல்லாம் அவர்களை அடிமைபடுத்தவே என்றார்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையை தரவேண்டுமென்று பேசியவர் .. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது அது இந்து குடும்ப அமைப்பையே சிதறடித்துவிடுமென்று ஆச்சாரியார்கள் கடும் எதிர்ப்பை தந்தனர்.. ஆனால் அதை இந்தியாவிற்கு வழிகாட்டுதலாய் தமிழகத்தில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்தினார் பெரியாரின் பெருஞ்சீடர் கலைஞர் பெருமகன்.. .. பெரியார் எதையும் தொலைநோக்கோடு அணுகினார் எந்தவொரு விடயத்தை அவரிடத்தில் கொண்டு சென்றாலும் சரியான தீர்வையே தந்தார்.. குலக்கல்விக்கெதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்தவர் அக்ரஹாரத்தையே கொளுத்த நேரிடும் என எச்சரித்தார் ஆதிக்கசாதியினரிடமிருந்து அதிகாரத்தை பிடிங்கினால் தான் தீர்வு வருமென எண்ணி காங்கிரஸில் பார்பனரல்லாத தலைவரை கொண்டு வர காரணமானார் அப்படிதான் காமராஜர் முதல்வரானதும்.. ஆதிதிராவிடரான பரமேஸ்வரன் அறநிலையத்துறை அமைச்சரானதும் .. அன்று தொடங்கிய திராவிடர்கள் அதிகாரம் இன்றும் தொடர்கிறது பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் மாறுபட்டு முன்னேற்றத்தை பெற்று இருக்கிறதெனில் அது பெரியாரெனும் பேரறிவால் பெற்றது.. .. பெரியார் சமூக விஞ்ஞானி ..மனிதனை தொட்டால் தீட்டென்றவனை சாதீய வர்ணம் கொண்டு பிரித்து ஏற்றதாழ்வென்றவனை சம்மட்டி அடிகொடுத்தவர் ..இன்றைக்கும் பிற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து ..விழிப்புணர்வு பெறுகிறதே அதற்கு காரணம் பெரியார் ஆற்றிய பெருந்தொண்டு .. இங்கே ஒடுக்கபட்ட விளிம்புநிலை மக்கள் சுயமரியாதையோடு நடத்தபடுகிறார்களே அதற்கு இந்த பெருங்கிழவன் ஊட்டிய சுயமரியாதைதான் காரணம் .. வடமாநிலங்களில் தலித்துகள் பொது குளத்தில் தண்ணீர் அள்ளி குடித்தற்கே அம்மணமாக்கி அடித்து கொல்கிற சூழல் விஞ்ஞான வளர்ச்சியிலும் முற்போக்கு பேசி திரியும் காலத்திலும் இது போன்ற கொடுமைகள் நிகழதான் செய்கிறது .. .. பெரியார் ஏன் தனித்துவமாக தெரிகிறார் மறைந்து 45 ஆண்டுகளாகியும் இன்னமும் பேசபடுகிறாரே.. இன்னமும் தேவைபடுகிறாரே.. பாசிச வர்க்கத்தினர் இவர் பெயரை கேட்டாலே அஞ்சுகிறார்களே.. இவரை பேசாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாமல் இருக்கிறதே..இவரை சுற்றியே இந்திய அரசியல்தன்மை செயல்பட துவங்கியிருக்கிறதே ..ஏன் .. பெரியார் மட்டுமே யதாரித்தத்தை நமக்கு உணர்த்தினார் மனம் சொல்வதை விடுத்து அறிவு கொண்டு பார்க்க சொன்னார் எதையும் தீர்க்கமான பார்வையோடு பார்த்தார் ..மூடநம்பிக்கைகள் மனிதனை அடிமைபடுத்துமென்றார் .. சாதி மத கட்டமைப்பு மனிதகுல விரோதமென்றார்.. .. இறுதியாய்.. இ்ந்த மண்ணில் நிறைய அறிஞர்கள் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் தத்துவஞானிகள் மாபெரும் தலைவர்கள் சான்றோர்கள் ஆன்றோர்கள் ..மதம் பேசியோர் மார்க்கம் பேசியோர்.. வேதம் சொன்னவர்கள் ..வந்தார்கள் ..நல்லதையும் சொன்னார்கள் காலபோக்கில் சிலவை நல்லதாகவும் ..மானிட சமூகத்திற்கு கேட்டையும் கூட விளைவித்தது.. ஆனால் எல்லோருமே ஒன்றில் ஒற்றுமையாக இருந்தார்கள் தாங்கள் சொல்வது சரி என்றார்கள் .. ஆனால் பேராசான் தந்தை பெரியார் மட்டும் தான் ..நான் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டுமென்பதில்லை உன் அறிவேற்றால் மட்டும் ஏற்றுக்கொள் என்றார் .. ஆம் .. யார் சொன்னாலும் எதைப் பற்றி சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றார் .. எதையும்,உள்வாங்க சொன்னார் உன் அறிவோடு கதைக்க சொன்னார் சிந்தித்து தெளிவு பெறு என்றார்..கடவுள் மதம் சாதி வர்ணாசிரம கோட்பாடு ஏற்றதாழ்வு தொட்டால் தீட்டு என்பதெல்லாம் ஆரியர்கள் ஏற்படுத்தியது வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் அவர்களின் பிழைப்பிற்காக ஏற்படுத்தபட்டவை என்றார்.. எந்த மதத்திற்காகவோ அல்லது இனத்திற்காகவோ அவர் உழைக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த மானிட சமூக மேம்பாடு அதை நோக்கிய நகர்வே அவரது வாழ்வாக இருந்தது .. பெண்களின் முன்னேற்றமே சமூக சீர்த்திருத்திற்கு அடிகோலாக அமையுமென்பதில் உறுதியாக இருந்தார் இந்த ஆணாதிக்க சமூக சூழலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிரித்தார் .. பெண்கள் தங்கள் சொந்தகாலில் நிற்க வேண்டுமென்று விரும்பினார் பெண்கள் ஆண்களை போல எல்லாதுறைகளிலும் பணியாற்ற வேண்டும் அதற்கு மதங்களும் சாதிய கட்டமைப்பும் தடையாக இருக்கிறதென்றார்.. காலம் கடந்தும் பெரியார் தேவைபடுகிறாரெனில் இந்த சமூக சூழல் எந்தளவிற்கு அவரின் தேவையை உணர்த்துகிறதென்பதை அறியலாம் .. பெரியார் இந்த நூற்றாண்டில் மிக சிறந்த மனிதர் .. மனிதனை மானமுள்ள சுயமரியாதைகாரனாக .. யாருக்கும் எவரும் குறைந்தவரில்லையென்ற நிலைபாட்டை கடைசிவரை வலியுறுத்தியவர் .. ஆம் மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு மானிடம் கண்ட மகத்தான தலைவர் ..

No comments:

Post a Comment