Monday, September 17, 2018

பெரியார்

பெரியார்.. இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்.. இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று மகாபெருசுகள் உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே எல்லா மதமும் சொன்னது பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக தெய்வ செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் .. சமைத்து போடுவதற்கும் தங்களின் குல வாரிசை சுமைக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்.. .. பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் ).. பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று ஜகத்குருக்கள் சொன்னார்கள்.. .. பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் .. ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் .. மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண்கள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை.. .. 1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி திராவிட ஆட்சியால் முடிந்தது .. இந்நாளில் திராவிட பெருந்தலைவர் கலைஞரையும் நினைவுகூர்வோம்.. .. பெண்ணடிமைத்தனத்தை வேரறுத்த எம் பெரியாருக்கு #வீரவணக்கம்.. #HBDPeriyar140 .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment