Thursday, September 6, 2018
தளபதி
சென்னையில் அழகிரி கூட்டிய அமைதிபேரணி அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது.. பொன்.ராதா..
பாவம் அவர் என்ன செய்வார் காலி சேர்களையே பார்த்து பழகிய கண்களுக்கு ஆயிரம்பேரை பார்த்தாலே பிரமிப்பாதான் இருக்கும் .. கண்ணில் ஆனந்தகண்ணீர் வந்திருக்குமே...
..
அழகிரியை விடுங்கள் இந்த பாசிச கூட்டம் எப்படி ஆசைபடுகிறதென்பதை அவர்கள் நடவடிக்கைகள் காட்டி கொடுத்துவிடுகின்றன என்ன செய்தாலும் அதை மக்கள் கேவலபடுத்திவிடுகிறார்கள்.. திமுகவின் இருப்பு இவர்களை பதறவைக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திவிடலாமென்ற கனவில் .. ஜாதிவெறியை தூண்டி.. மக்களை மதத்தின் பெயரில் பிரித்து மொழியென்றும் தமிழ் தேசியமென்றும் உட்பகையை ஊட்டி குளிர்காய நினைத்தார்கள்.. கலைஞர்பெருமகனோடு தீராதபகைகாட்டி ..அவரோடு திராவிடத்தை இல்லாதாக்கிவிடலாம் என்று நினைத்ததெல்லாம் தலைகீழாய் போனது.. பெரும் எழுச்சியோடு குறிப்பாக இளைஞர்களிடையே திராவிடத்தை எத்திவைக்கும் பெரும்பணியை .. திராவிடகட்சிகளால் பயன்பெற்றவர்கள் பெரும்படையோடு களமிறங்கி .. கருத்தரங்கங்கள் விவாதமென பட்டையை கிளப்புகிறார்கள்.. திமுகவை கலைஞரை இப்போதுதான் சரியாக புரிந்து திமுகதான் நமக்கு பாதுகாப்பென தமிழக மக்கள் உணர தொடங்கியிருப்பது.. பாசிசபாஜகவிற்கு பீதியை தந்திருக்கிறது..
அதனால் தான் அரிதாரங்கள் கொண்டுவந்து நிறுத்தி அது எடுபடாதென்று அறிந்து யாரெல்லாம் திமுகவோடு பிணங்கி நிற்கிறார்களோ அவர்களை கொம்புசீவும் வேலையை பாஜக செய்கிறது..
..
கலைஞர் ஓய்விடத்தில் போய் தமிழனத்திற்கு எதிரானவர் இங்கே உறங்குகிறார் என சொன்னால் அது கருத்து சுதந்திரத்தில் வராதா என ஒரு பார்பனன் கேட்கிறான்.. போய் சொல்லிபாரும் மக்களின் reaction எதிர்வினையை அப்போது உணர்வீர்கள்.. கருத்து சுதந்திரம் என்பது தனிநபர் பகையல்ல
கலைஞர் மீது எந்தளவு வன்மம் இருந்தால் இப்படி பேச சொல்லும் .. தமிழிசையை தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்க்கவில்லை மாறாக அவர் சார்ந்த கட்சியின் செயல்பாட்டால் விரக்தியின் எல்லைக்கே சென்றதன் விளைவு பாசிச பாஜக ஒழிக என்ற கோசம் அது இந்த பாசிச அரசிற்கெதிரானது..இதெல்லாம் புரியாமல் இல்லை எங்கே எழமுடியாமல் போய்விடுமோ என்று அதாவது
வாய்க்குவந்ததை பேசி அசிங்கபடுகிறார்கள்..
..
இங்கே பார்பனர் மற்றும் அவர்களுக்கு ஒத்தூதுகிறவனை தவிர மற்றவர்களை ஏதோ தீண்டதகாதவர்களைப்போலவும் .. இவர்கள் மட்டுமே தேசபிமானிகள் போலவும் பேசுவதும் செயல்படுவதும் தொடர்ந்து நடந்தேறுகிறது .. தமிழகத்தில் ஏன் தென்னாட்டில் பாசிசத்தின் கோரப்பற்கள் பிடிங்கெறியபடுவதால் தீராத வன்மத்தோடு அடிமைகள் இனதுரோகிகளை சாதிமதவெறியர்களை வைத்து ஆட்டம்போடுகிறார்கள்..ஆனால்
அவர்கள் எண்ணம் ஈடேறாது.. திராவிட இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெருமகன் தளபதியை செதுக்கி தந்திருக்கிறார்..
#தளபதி_தமிழர்களின்_எதிர்காலம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment