Wednesday, September 5, 2018
அழகிரி..
தன் பலம் அறிதல் வேண்டும் அதினும் பெரிது எதிராளியைப்பற்றி அறிந்திருத்தல் வேண்டும்..
..
கலைஞரின் விதையொன்று சொத்தையாய் போனதில் வருத்தமுண்டு.. யாரை எதிர்க்கவேண்டுமென்று தெரியாமல் அரசியலின் நாடிதுடிப்பை உணராமல் .. தன்நிலையறியாது கூட இருந்தவர்களின் கூச்சலில் முகம் தொலைந்து நிற்பது பரிதாபகரமாக இருக்கிறது .. எதை பேசவேண்டும் எப்போது பேசவேண்டுமென்று என்ற அறியாதுபோனார் ..
இந்த நேரத்தில் தலைவர் தளபதியை பாராட்டவேண்டும் .. கண்டுக்கொள்ளாமல் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் எதிரியை நிலைகுலைய செய்யும் கலைஞரின் வித்தையை கையிலெடுத்தார்.. கட்சிக்கொடியை பயன்படுத்த கூடாதென்று வழக்கு தொடர்ந்தால் கூட போதும் .. அதையே பிடித்துக்கொண்டு மேலேறி வந்துவிடுவார்கள்.. ஆம் கலைஞர்
"இருவர்" படத்தின் போது எம்ஜிஆர் கலைஞர் கதையை எடுத்திருப்பதால் தடைசெய்ய சொல்லலாமென்று கூட இருந்தவர் சொன்னபோது .. பிடித்தால் பாருங்கள் இல்லையென்றால் விடுங்களென்றார் .. படம் மிகப்பெரிய ப்ளாப்..
மணிரத்னம் கலைஞரை நேரில் சந்தித்து படத்தை பார்க்க வரவேண்டுமென்று கேட்ட போது புன்னகையோடு மறுத்தார்.. இந்த நேரத்தில் மற்றொன்றையும் பதிவு செய்யவேண்டும் .. ரோஜா படம் முதல் வாரம் கொட்டகை காலியாகதான் இருந்தது பிற்போக்குத்தனமான இஸ்லாமிய அமைப்புகள்
எதிர்க்க .. படம் சூடுபிடித்து பெரிய வெற்றியை தந்தது .. திமுக தலைவர் தளபதி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அழகிரியின் முகத்தை ஊரறிய செய்துவிட்டார்
காலமறிந்து தவிர்த்ததால் எதிராளி மிகவும் பலவீனமடைந்ததை ஊரறிந்தது..
..
எனது ஒற்றை கோரிக்கை என்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் கட்சியில் சேர்ந்தால் மு க ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வேன்.ஏனெனில் அவர் தான் தலைவர். எனக்கும் மு க ஸ்டாலினுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்கள் தான் அவ்வாறு பெரிதுப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறது. எங்க குடும்பத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் தான் உள்ளோம்.அரசியலில் தான் எனக்கும் ஸ்டாலினுக்கும் போட்டியே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை..மு. க.அழகிரி ( ஆங்கில செய்தி பத்திரிக்கை ஒன்றுக்கு சற்று முன் அளித்த பேட்டி )..
நிற்க.. அவரின் பேட்டியிலேயே அவரது இயலாமை தெரிகிறது.. அவரை ஏன் சேர்க்ககூடாதென்று சிலர் வினவலாம் .. கலைஞர் இருக்கும் போதே கலகம் செய்தவர் நாளை நிச்சயம் பிரச்சனையாக உருவெடுப்பாரே வரும் முன் காப்பதே நல்லது..
நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் உதிர்ந்த ரோமமாய் நின்ற போது கலைஞருக்கு தூது அனுப்பி நான் திமுகவில் சேர்ந்துக்கொள்கிறேன் என்றார் .. கலைஞர் அவரை சேர்த்தால் அவருக்குரிய மரியாதை தர இயலாது ..இரண்டாவது இடம் அன்பகழனுக்குரியது அதில் பிரச்சனை வரும் சிலர் நாவலருக்கு தரலாம் அண்ணாவோடு இருந்தவர் என்றெல்லாம் பேசுவார்கள் என அவரை சேர்க்கவில்லை கடைசியில் சுயமிழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) இழந்து நின்றார் ஏனோ நாவலர் நினைப்பு வந்தது.. மூடிவைக்கிறவரைதான் மதிப்பு இது புரியாமல் போனது..
..
மூடிய கைகளை திறந்ததால் ஊருக்கு தெரிந்தது
இவர்களின் இருப்பு..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment