Thursday, September 20, 2018
ஸ்டாலின்
ஸ்டாலின் அரசியலில் நிலை பெறவில்லை என்று பாஜக ஆதரவு நிலைபாட்டுடைய ரவீந்திரன் ஊடகவியலாளர் Sa Sufiyan க்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் ..
தமிழக அரசியலை சரியாக ஆய்வுசெய்திருந்தால் இந்த கருத்தை சொல்லியிருக்கமாட்டார் .. மோடியை சந்தித்த பிறகு எப்படியேனும் திமுகவின் வெற்றியை தடுப்பதற்கான முயற்சி செய்கிறார்..
வெளிப்படையாக மக்களின் மனஓட்டத்தில் இன்றைய அரசின் அவலட்சணங்களும் .. ஆள்போர் மீதான அதிருப்தியும் அதற்கான மாற்று திமுகழகம் தான் என்று அடிப்படை அரசியல் அறியாதவர்கள் கூட சொல்வார்கள் ..
மடைமாற்றி வாக்குகளை பிரித்ததனால் ஏற்பட்ட கேவலமான ஆட்சியை மக்கள் உணர்ந்து இனி அந்த தவறை அதாவது வாக்கை பிரிக்க நினைப்போரை கவனித்தில் கொள்வார்கள்..
..
நிறைய முயற்சிகள் அரிதாரம் பூசியவர்களை கொண்டுவந்து நிறுத்த முயன்று ஆற்றில் ஒருகால் சேற்றில் கால் என்ற நிலைபாட்டால் மக்களின் கோபமும் படம் தோல்வியுமாய் நிலைத்துநிற்க முடியாமல் திணறுவதை காண்கிறோம் .. ஜாதீய கட்சிகளை முன்னெடுத்தால் கலவரமும் கொலையுமே வருமென்பென்பதும் ஒருசாராரை திருப்திபடுத்தினால் மற்றவர்கள் வாக்குகள் கிடைக்காமல் போகுமென்றறிந்து அடக்கி வாசிக்கிறார்கள் .. உதிரிகட்சிகளின் நிலைபாடும் ஆளும் கட்சியின் நிலையும் யாருக்கும் பயன்தராதென்று அறிந்து இன்றைக்கு மக்களின் கடைசி நம்பிக்கையாய் திமுக திகழ்கிறது .. மதவாதிக்களுக்கு இங்கு இடமில்லை என்று தெளிவாக பொட்டில் அடித்தாற்ப்போல் ஒவ்வொருமுறை சொல்கிறார்கள் மக்கள் ..
..
தளபதி.ஸ்டாலின்
திமுக தலைவராக பொறுப்பேற்றப்பின் அவரது அணுகுமுறையில் நிறைய மாற்றங்களை செய்கிறார் அவர் தன் பொறுப்பை உணர்ந்து மக்களும் கட்சியும் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கேற்ப செயலாற்றுகிறார் ..நிறைய அழுத்தம் தந்தும் அழகிரி விடயத்தில் அவர்காட்டிய உறுதி.. கடைக்கோடி தொண்டனின் தவறுக்காக வருந்துவது.. மாவட்ட செயலர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரை நான் தவறுசெய்தாலிம் கேட்கலாம் என உறுதி தந்தது என கவனமாக இருக்கிறார் ..
கடும் உழைப்பாளி .. 2ஜி எனும் மாய எண் தந்த படுதோல்வியில் இருந்து கட்சியை மீட்டு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தியதும் கலைஞர் மறைவிற்கு பிறகு புதியதொரு தொடக்கமாய் கட்சியை குறிப்பாக இளைஞர்களின் கையில் கொண்டுபோய் சேர்த்தவிதமும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம் மதவாதத்தை வேரறுப்போம் பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரின் பாதையில் முன்னெடுப்போமென சூளுரைத்து செயல்படுகிறார்..
..
மக்கள் விரும்புகிற தலைவர் .. எதிரிகள் யாரென்று அறிந்து திராவிடத்திற்கெதிரான தமிழர்களுக்கு தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் அடையாளம் காட்டி .. களமறிந்து செயல்படுகிறார் எது தேவை என்பதை அறிந்து அரசியல் செய்யும் ஆற்றலை கலைஞரிடமிருந்து கற்று தேர்ந்தவராய் நிற்கிறார் நாடு விரும்புகிற இனம் அடையாளம் கண்டு தந்த.. காலம் தேர்வு செய்த நல்ல தலைவராய் .. நிமிர்ந்து நிற்கிறார்
அவர் விரல் காட்டும் வெற்றியின் இலக்கு ..
தொடர்வதற்கு தமிழகமே தயார்..
..
நாளை இந்த விரல்கள் இடும் உத்தரவே தமிழகத்தை எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
விரலைசைவே.. தமிழகம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment