Thursday, September 13, 2018
கோ.சி.மணி
கோ.சி.மணி..
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலர் திராவிட முன்னேற்ற கழக சோழமண்டல தளகர்தகர்களில் ஒருவர்.. கட்சியின் தொண்டன் எப்படி செயலாற்ற வேண்டுமென்பதற்கு ..மாவட்ட செயலாளர்கள் எப்படி சுழன்று பணியாற்ற வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்..
..
கட்சியின் இக்கட்டான நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர் பொதுக்குழுவில் தலைமைக்கெதிராக சிலர் பேசுவார்கள் இவர் கூட பேசுவார் அது சரியான நடைமுறையில்லையென்று பேசுவார் .. ஒருகட்டத்தில் நிலைமையை சரிச்செய்ய வேண்டுமெனில் கலைஞரின் கண்கள் மணியை தான் தேடும் .. கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மணியை கலைஞர் பார்ப்பார்.. புரிந்துக்கொண்டு மேலே வந்து கலைஞர் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது நமது கருத்துகளை சொல்லிவிட்டோம்,.. தலைவரின் முடிவே இறுதியானதென்று முடித்துவிடுவார்..
..
வைகோ திமுகவிலிருந்து விலகிய நேரம் .. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரும் ஒன்பது மாவட்ட செயலாளர்களும் அவர் பின்னே போய்விட்ட பிறகு கட்சியின் உரிமையை கோருகிறார்கள் ..பொதுக்குழுவை கூட்டி பலத்தை காட்டவேண்டிய கட்டாயம் எங்கே நடத்துவதென பேராசியர் கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல் தஞ்சையிலே கூட்டலாம் அதுதான் பாதுகாப்பானது மணி பார்த்துக்கொள்வான் என்றார் தலைவர் கலைஞர்.. அந்தளவிற்கு நம்பிக்கையை பெற்றிருந்தார் .. அவர் மந்திரியாக இருந்த போதுதான் அழுக்கு நகரம் என்ற அவப்பெயரை மாற்றி கும்பகோணத்திற்கு புதிய முகம் தந்தார்
கும்பேஸ்வரன் கோவிலைச் சுற்றி சாக்கடைகள் மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும் யானைக்கால் நோயால் கும்பகோணத்தை சுற்றி உள்ளவர்கள் அதிகம் பாதிக்கபட்டார்கள் .. பாதாள சாக்கடையை கொண்டுவந்து கும்பகோணத்தையே சிங்காரித்தவர் .. கலைஞர் கூட சிங்காரித்து வைத்திருக்கிறார் என்றார் ..
..
தளபதி ஸ்டாலின் உள்ளாச்சித்துறை அமைச்சர் அப்போதுதான் கோ.சி.மணி அவர்களின் துணைவியார் மரணமடைந்தார்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தளபதி அவர்கள் வந்தார்கள் அவரை அழைத்து கும்பகோணத்தில தேரோட்டம் வருது சாலைகள் வழிதடங்களில் விளக்குகளையெல்லாம் சரிபார்க்க சொல்லு அது உன் டிபார்ட்மெண்ட்ல தான் வருது சீக்கிரம் முடிக்க சொல்லு என்றார் ..மனைவி மரணத்திற்கு வந்தவரிடத்தில் தொகுதி நலன் குறித்து பேச முடிகிறது பாருங்கள் அதுதான் மணி அண்ணன் .. எப்படி செயல்படவேண்டும் என்பதை உணர்த்தியவர் பொதுவாழ்விற்கு வந்தபிறகு எல்லாவற்றையும் மறந்து பொதுப்பணி என்ற சிந்தனையில் இருக்கவேண்டும் என உணர்த்தியவர்..
..
விவசாயிகள் பிரச்சனைப்பற்றி துள்ளியமாய் அறிந்தவர் பேரறிஞர் அண்ணா கூட காவிரி கடைமடை பிரச்சனையென்றால் மணியை கூப்பிடு அவனுக்குதான் எல்லாம் தெரியும் என்பார் கலைஞரும் காவிரி பிரச்சனையில் மணியிடம் தான் கேட்பார்..கட்சி விடயத்தில் விட்டுகொடுப்பதென்பதே இவரிடமில்லை..
ஒவ்வொரு கிளைச் செயலாளர் பெயரை அறிந்து வைத்திருந்தார்.. அவர்களோடு கட்சிப்பணியில் இரண்டற கலந்திருந்தார்
ஓயாத உழைப்பாளி.. கட்சிக்கெதிராக யார் வந்தாலும் முகம் பார்க்க மாட்டார்..
"மேக்கிரி மங்கலத்து போக்கிரி" என அண்ணாவே அழைத்தார்..
மணி அண்ணன் மரணித்த போது கலைஞர் இரங்கலில் இப்படிதான் சொன்னார்.மணி இல்லாத தஞ்சையை நினைத்து பார்க்க என் குலைநடுங்குகிறதே என்றார் ..
உடல்நலியுற்றிருந்த நிலையிலும் தன் தலைவரின் பிறந்தாளுக்கு காண வரிசையில் வருகிறார் .. அவரது கையைப் பற்றிபிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் கலைஞர் இருந்தார் அது பல விடயங்களை சொன்னது.. தொண்டனுக்கும் தலைவனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை சொன்னது..
..
மணி அண்ணன் போன்றோர்களால் தான் திராவிடம் இயக்கம் இன்றைக்கும் அசைக்கமுடியாததாக .. வலுவோடு இருக்கிறது இந்த பிறந்தநாளின் வீரவணக்கத்தை செலுத்துவோம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment