Monday, September 10, 2018
பிழைக்க ஒர் மார்க்கம்
புதிய ஜமாத் தோற்றம்..
நாளுக்கொரு ஆளுக்கொரு ஜமாத் துவக்கபடுவது அவரவர் இருப்பை பலமாக்கிக்கொள்ளவே தவிர இந்த சிறுபான்மை சமூதாயத்திற்கு நலன்பயக்க அல்ல.. இப்போது இது நல்ல வியாபாரமாகிவிட்டது கொஞ்சம் மார்க்கஅறிவு ,பேசும்திறன் ..பொய்யை யாருமறியாமல் சேர்க்கும் கலை .. கட்டாயம் தாடி நெற்றியில் தளும்பு .. கூடவே சில அரைகுறை கிறுக்கர்கள் பயணம் எளிதாகும்..
..
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்.. உங்களுரில் ஒரு மாநாடு நடத்த திட்டமிடுங்கள் உடனே தலைமை உங்க ஊரில் உள்ள வங்கியில் கணக்கை திறக்க சொல்வார்கள் .. மாநாட்டிற்கு எவ்வளவு செலவாகுமென கேட்பார்கள்.. சொன்னவுடன் .. சமுக சொந்தங்களே..மார்க்கத்தை சத்தியத்தை..? எடுத்துவைத்து சமூதாய மக்களிடையே புறையோடிபோயிருக்கிற மூடத்தை விரட்டி ..சம்பூர்ண மார்க்கத்தைப் பற்றிய அறிவை பெற அனைவரும் வாருங்கள்.. உங்களால் முடிந்த உதவியை நேரடியாக வங்கி கணக்கிற்கே அனுப்புங்களென பிரச்சாரம் செய்வார்கள்.. அல்லாவின் பாதையில் செலவு செய்யுங்கள் ஒவ்வொரு காசுக்கும் அல்லாவிடத்தில் நன்மை பெறுங்கள்.. நீங்கள் அனுப்பும் நிதி வங்கி மூலம் வருவதால் கணக்குவழக்குகளை நேர்மையாக இருக்கும் என்பார்கள் ..வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பணம் கொட்டும்
செலவு போக மீதி தலைமைக்கு அனுப்படும் .. இதில் தணிக்கை எல்லாம் கிடையாது .. 20 விழுக்காடு வரை சாப்பிட சட்டம் அனுமதிக்கிறது
முதலே இல்லாமல் கொள்ளை லாபம் அடிக்கலாம் ..
..
குறிப்பாக பிற்போக்குத்தனமான ..அல்லது சட்டென்று உணர்ச்சிவயபடுகிற எதையும் ஆய்ந்தறியாமல் நம்பிவிடுகிற மூளைச்சலவை செய்யப்பட்ட கழுதைகளைப்போல பொதி சுமப்பவர்கள் இருக்கும் வரை மத வியாபாரிகளின் வாழ்வு வளப்படும் .. என் சிற்றறிவுக்குபட்டவரை தமிழகத்தில் தான் அதிகளவில் இஸ்லாமிய ஜமாத் /கட்சிகள்அமைப்புகள் இருப்பதாக நினைக்கிறேன் .. வளம்கொழிக்க நல்வாய்ப்பாய் சமுதாயம் தந்த பாதை புதிய பாதையிது .. உண்மையில் இஸ்லாமிய அடிப்படை சித்தாந்தத்தை /கருத்தியலை அறியாதவர்கள் இவர்கள்
ஒற்றுமையை வளர்க்கிற போதிக்கிற பிற சமூகத்தின் உரிமையில் கூட தலையிட கூடாதென்கிற உபதேசத்தை தருகிற தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்று எச்சரிக்கிற மத/மார்க்கத்தில் இருந்துக்கொண்டே இஸ்லாமியர்களிடையே பிரிவினையை உணடாக்கி பகையை வளர்த்து ..
ஒருவித மதபோதையோடு அலையவிடுகிற செயல் மிக கொடுமையானது.. குடும்ப உறவுகளில் கூட அல்லாவின் பெயரைச்சொல்லி மனகசப்பை பெற்றவர்களிடம் கூட காட்டுகிற கயமைத்தனம்
ஒன்றுபட்டு கிடத்த ஜமாத்துகளை பிரித்து அடக்குமிடம் வரை அடித்துக்கொள்கிற கேடுகெட்ட நிலைக்கு காரணியாக விளங்குவது
இந்த தவ்ஹீத் ஜமாத்கள்..
..
புதிய உதயம்
முந்துவோருக்கு சிறப்பு சலுகைகள் வசூலாகும் பணத்தில் அதிக விழுக்காடு ஒதுக்கபடும் .. வளமான வாழ்விற்கு உத்தரவாதம் .. சத்தியமார்க்கத்தில் இணையுங்கள்..
பெண்களை மோகபொருளாக பார்க்கும் அயோக்கியர்களுக்கு வரபிரசாதமாக அமையும்.. சிறப்பு வகுப்புகள் என இளைஞர்களை சிறுவர்களை மூளைச்சலவை செய்து ஒருவித வெறுப்புணர்ச்சியை விதைத்து .. சொந்தங்களுக்கு முன்பே பகைமை பேசி எல்லாம் அறிந்தவர்கள் போல செயல்பட தூன்டுவார்கள்.. ஒற்றுமையை சிதைப்பதொன்றே இவர்களால் நடந்தேறியதே தவிர.. சமுதாயம் அடைந்த பலன் எதுவுமில்லை.. சிறுவர்கள் விளங்காதவர்கள் சிறைச்சென்றதை தவிர..
ஆனால் தலைவர்கள் சொகுசாக உடல் வளையாமல் தின்று கொழுத்திருக்கிறார்கள்
நல்ல வியாபாராம்.. களைகட்டுகிறது..
புதியதோர் உதயம்
(த.மு.த.ஜ)
தமிழ்நாடு முற்போக்கு தவ்ஹீத் ஜமாத்.
..
பிழைக்க ஒரு மார்க்கம்
இனிய மார்க்கம் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment