Sunday, July 29, 2018

கேடுகெட்டவர்கள்

கோழைகளே உங்கள் மீது கோபம் எல்லாம் இல்லை.. கலைஞரை உங்களையெல்லாம் மறந்து மன்னித்தாரே என்ற ஆதங்கம் தான்.. தியாகு போன்று நிறைய பேரை பார்த்திருக்கிறோம் என்ன.. அவர்களின் சிலர் கலைஞர் தெளிவாக பேசிக்கொண்டிருந்த போது விமர்சித்தார்கள் கலைஞர் அவர்களுக்கு விளக்கம் தந்தார்.. .. தியாகு.. கலைஞர் பேசாமல் இருக்கும் போது குற்றம் சாட்டுகிறார்.. கலைஞர் பதவிக்காக எதையும் செய்வார்.. அவரின் குற்றசாட்டை முழுமையாக தள்ளிவிடலாம் .. பதவி ஒன்றே குறிக்கோளாய் இருந்தால் காமராஜரை சிறையில் வைத்து இந்திராவோடு கைக்கோர்த்து ஜனநாயகத்தை ஆழ புதைத்திருக்கலாம் .. முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லையென காமராஜர் கைது செய்ய மறுத்ததோடு ஜார்ஸ் பெர்னாட்டஸ் போன்றோருக்கு அடைக்கலமும் தந்தார்.. நெருக்கடிகாலத்தில் இந்திராவை எதிர்த்த கலைஞர் ஏன் திரும்பவும் சேர்ந்தீர் என்கிறார்.. ஜனதாவால் நிலையான ஆட்சியை தரமுடியாமல் போனதும்.. நாட்டின் நலன் கருதி நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என்றார்.. இதில் என்ன தவறு .. அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நகர்வைதானே விரும்பும் ..இலங்கை பிரச்சனையில் திமுகவின் இழப்புகளை யாருமே கருத்தில் கொள்வதில்லை.. திமுக வெற்றிபெற வேண்டிய தேர்தலில் .. பிரச்சாரத்திற்கு வந்த இந்த பிரதமராக இருந்தவரை கொலை செய்து அதன் பலியை திமுக மீது விழுந்ததும் .. காரணம் யார்..? அன்றைக்கு ஜெயலலிதாதானே பலன்பெற்றார் அதனால் தொடர்ந்து தமிழகம் சந்தித்த சந்தித்துக்கொண்டிருக்கிற துயரங்கள் இவ்வளவையும் மீறி ராஜீவ் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்தது இன்றைக்கு விமர்சிப்போரல்ல. .. ராஜமன்னார் குழு பரிந்துரையான தமிழை தேசிய மொழிக்கா என்ன நடவடிக்கையெடுத்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது திமுக தான் தமிழை மட்டுமல்ல பிற மொழிகளையும் தேசிய மொழிக்காக தனி தீர்மானம் கொண்டுவந்ததும் திமுக தான் .. இன்றைக்கு பாராளுமன்றத்தில் அனைத்துமொழிகளிலும் பேசலாமென்ற உரிமையை பெற்று தந்ததும் திமுகதான்.. எல்லாவற்றையும் சில கால ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டுவரவோ செய்துகாட்டவோ முடியாது .. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலைஞர் தன்னால் இயன்றதை போராடி பெற்று தந்திருக்கிறார் .. தமிழக தலைவர்களில் யாருமே செய்திடாத சாதனைகளை செய்திருக்கிறார்.. .. தமிழ்தேசிய பேசுவோரை சிறையில் அடைத்தாரென குற்றசாட்டை ஏற்க முடியாது தமிழ்தேசியம் என்ற பெயரில் அராஜகம் செய்வோரை போதைமருத்து கடத்த பயன்படுத்துவோரை ..துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபடுவோரை கொஞ்சிக்கொண்டிருக்கமுடியாது.. இவ்வளவு பேசும் தமிழ் தேசி தியாகு.. யாராவது ஒரு ஈழ அகதிக்கு எதாவது செய்திருக்கிறாரா.. அகதிகளாய் வந்திறங்கிய சொந்தங்களை வாரி அணைத்தவர்கள் திமுகவினர்கள் தான்.. திமுக ஆட்சியில் தான் மருத்துவ பொறியியல் இடங்களை ஒதுக்கியும் ..இலவச கல்வியை வழங்கியும் ஈழ சொந்தங்களை அரவணைத்தது திரும்ப வந்த ஜெயலலிதா அதையெல்லாம் சத்தமில்லாமல் ரத்து செய்தார்.. ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களில் சென்னையில் வைத்து பத்மநாபாவை கொன்று திமுக ஆட்சிக்கு தீராத கலங்கத்தையும் பெரும் நெருக்கடியையும் தந்தவர்களை அப்போதே தீவிரவாதிகள்/பயங்கரவாதிகளென ஜெயலலிதா போல் கூறியிருந்தால் ஒருவேளை கலைஞரை புகழ்ந்திருப்பீர்கள். .. இன்றைக்கு தியாகு நடமாடுகிறாரென்றால் அது கலைஞர் இட்ட பிச்சை.. தூக்குகயிற்றிலிருந்து கருணையோடு காப்பாற்றி .. ஆயுளாக்கி அதையும் குறைத்து விடுத்ததால் இந்த நவீன தமிழ் தேசி கலைஞரை பதவிக்காக எதையும் செய்பவரென்கிறார்.. கலைஞரை விமர்சிக்களவிற்கு தகுதியில்லாதவர் .. #கேடுகெட்டவர்கள் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment