Wednesday, July 4, 2018
அஞ்சுவதில்லை எவர்க்கும்..
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் தோற்குமென மத்திய அரசின்
உள்துறை தெளிவான அறிக்கையை மத்திய அரசிடம் கைசாத்தியிருக்கிறது.. இதனால் பாஜக எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதை தடுக்க குறிப்பாக காங்கிரஸோடு இணைந்து போட்டியிடுவதை தடுக்க முயல்கிறது
தமிழகத்தில் திமுக காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டால் சில தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும் என்பதால் அது பாஜகவிற்கு பின்னடைவை தரும்.. இதுகுறித்து திமுக செயல்தலைவரிடம் பாஜக மேலிடம் பேசுவதாகவும்..காங்கிரஸை தவிர்க்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதாக செய்திகள் வருகின்றன.. எங்களோடு கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டாலும் பரவாயில்லை காங்கிரஸோடு கூட்டணி அமைக்க கூடாது ..ஏனெனில் காங்கிரஸ் சிலதொகுதிகளை தமிழகத்தில் வெல்லும் என்ற உள்துறை தகவலால் பாஜக பதறுகிறது.., தளபதி.ஸடாலின் பிடிகொடுக்கவில்லையென்றும் தெரிகிறது..
கவர்னரை வைத்து நெருக்கடியை தர முயற்சிப்பாக செய்தி கசிகிறது..
சில மாநில எதிர்கட்சிகளை மிரட்டவும்..சிபிஐ ரெய்டு ஆய்வென காய்நகர்த்த திட்டமிட்டு செயல்படுவதாக பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் சொன்னார்..
..
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிர்ப்பு பலமாகி இறுக பிடி விழும் என்ற நிலையில் எதிர்கட்சிகளை ஒரு குடையின் கீழ் வராதவாறு பார்த்துக்கொண்டால் அதன் பலன் பாஜகவிற்கு வருமென அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் அது உண்மையும் கூட .. அதிகார அமைப்பு ஏறக்குறைய பாசிச சிந்தனையுடையவர்களிடம் கொடுக்கபட்டுவிட்டது தனி அதிகாரம் என்ற போர்வைக்குள் இவர்கள் புகுந்து.. பலகால திட்டமிட்டு செயல்படுகிறார்கள் .. தேர்தல் ஆணைய அமைப்பு நம்பிக்கைதன்மையை இழந்து நிற்கிறது.. இந்தியா ஜனநாயகத்தில் மாபெரும் கருப்பு நாட்களாக பாஜக ஆட்சி அமைந்தது .. மக்கள் நேரடியாகவே பாதிப்பிற்குள்ளாகினர்.. மறைமுகமாக அவர்கள் மீது ஏற்றபட்ட பெரும்சுமையை தாங்கமுடியாது தவிக்கின்றனர் அவர்களின் உரிமைகள் பறிக்கபடுகிறது.. அதைகூட அறிவிப்பின்றி அதிகாரம் தமக்கிருக்கிறதென்ற திமிரில் செய்கிறார்கள் .. இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவில் சிறுதொழில்கள் நசுக்கபட்டு வாழ்வாதாரம் பாதித்தவர்கள்.. செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்...
இந்திய மக்களின் வாழ்வுரிமை சர்வாதிகாரதிதில் நிழலில் ஒருவித பதட்டத்தோடு.. அவசரநிலையை விட மிக மோசமான காலசூழல்..
இந்நிலையில் தான் பாஜக தன் தந்திரத்தால் வெல்லலாமென சூழ்ச்சி செய்கிறது..
..
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை ஆசைகாட்டி இழுக்க முயற்சிக்கிறார்கள்... ஏறக்குறைய காங்கிரஸ் ஆளாத எல்லா மாநிலங்களிலும் பாஜகவை யாருமே வேண்டாமென ஒதுக்கியதால் வாக்கை பிரிக்கும் தந்திரம் .. தமிழகத்தை பொறுத்தவரை தனித்து நின்றாலும் திமுக பெருவாரியாக இடங்களை கைப்பற்றும் இதை சொல்லி கூட்டணிகளை பிரித்து ..ஒருசில இடமேனும் அதிமுக பெறுவதற்கு திட்டமிடுகிறார்கள்.. அதிமுக ஒரு இடம் வெற்றிபெற்றால் கூட அது பாஜகவிற்கு ஆதரவாக அமையும் அதனால்தான் செயல்தலைவரோடு சிலரை தூது அனுப்பி காங்கிரஸை கூட்டணியில் சேர்க்ககூடாதென்ற கோரிக்கை வைக்கிறார்கள்..
..
திராவிடத்தின் பிரதான எதிரி ஆரியம் தான் ..அது எந்தவடிவில் வந்தாலும் அதை ஏற்பது அல்லது துணைநிற்பது கூட்டணி அமைப்பதென்பது அடிப்படை கொள்கை கோட்பாட்டையே வெடிவைத்து தகர்ப்பதைப்போல.. பாஜகவோடு கூட்டு அல்லது புரிந்துணர்வென்பது தீண்டதகாத செயல்.. வரலாற்றுப் பிழையாகி போகும்..
நமது சித்தாந்தத்தை தகர்க்க வேண்டுமென கங்கணம் கட்டி செயல்படும் எதிராளி.. சமூகநீதிக்கெதிரான கொடுவாளை நீட்டும் பாசிசத்தை அரவணைப்பதென்பது நமக்குநாமே தீ வைத்துக் கொள்வதைப்போல.. நாசமாக்கிவிடும் ஏற்கனவே மாறனின் பேச்சை கேட்டு செய்த பிழையால் இயக்கம் மீண்டுவர அதிகம் விலைகொடுக்க/இழக்க வேண்டியிருந்தது.. இனி எக்காலத்தில் பாஜகவோடு கூட்டு இல்லை என்ற சொல்லில் உரத்து நிற்கவேண்டும்.. அதுவே இயக்கத்திற்கு..தமிழகத்திற்கு தமிழர்நலனுக்கு நல்லது..
அஞ்சுவதில்லை எவர்க்கும்..
அறம் வெல்லும் எப்போதும்..
நம்பிக்கையோடு களம் காண்போம்..
ஆரியத்தை வேரோடு சாய்போம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment