Sunday, July 22, 2018
தீதும் நன்றும்..
சென்னை சேலம் எட்டுவழிச்சாலை அமைந்தபின் மக்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் அறிவார்ந்த அமைச்சர்பெருந்தகை உதயகுமார்
..
தப்பு அவர் மீதில்லை நாம் தான் தகுதியானவர்களின் கையில் நாட்டை ஆள தராமல் அறிவிலிகளின் நீலிக்கண்ணீரை நம்பி.. நான் பெண் பாவமென்ற பகட்டு வார்த்தைக்கு இளகி .. என்ன செய்கிறோமென தெரியாமல் .. ஐந்தாண்டுகளுக்கு ஆள போகிறவன் அடிப்படை தகுதியை கூட ஆராயாமல் வெற்றியை தந்ததின் பலன் இது..
..
திராவிட அரசியலின் தொடக்கம் அறிவை தட்டியெழுப்பி.. சுயமரியாதை ஊட்டி யாரை தேர்வு செய்ய கூடாதென்ற தெளிவை தந்து .. சுயமாய் எடைபோடும் ஆற்றலை வளர்த்தெடுத்தது.. அந்தந்த தொகுதியில் கட்சிகளை கடந்த நல்லவர்களை நாணயமானவர்களை தேர்வு செய்த தமிழகம்..
ஆரிய சூழ்ச்சி அறியாமல் அரிதார கவர்ச்சியில் மயங்கி மகோராவை (எம்ஜிஆரை) தேர்வு செய்ததலிருந்தே அறிவு சிதைவின் தொடக்கம் வந்தது.. வருமானவரிக்கு பயந்து கட்சியை தொடங்கி.. மிரட்டலுக்கு பயந்து காட்டி கொடுத்து மத்தியில் ஆள்வோருக்கும் அதிகாரம் பெற்றவர்களுக்கும் மயிலை குயிலையும் மயிலையும் தந்து ஆட்சியை காப்பாற்றி.. நியாய தர்மங்கள் மீறபட்டு பொய் புரட்டில் நடத்தி அறிவை மழுங்க செய்யும் கவர்ச்சி அரசியலை முன்னெடுத்து தமிழகத்தின் இன்றைய அடிமைத்தனத்தின் தொடக்கம் அன்றே தொடங்கியதுதான்..
..
அறிவார்ந்த விவாதங்கள் பேச்சின் தெரியும் மேதமை .. அரசியலின் சூட்சமமறிந்த செயலாற்றல் எதிரியும் மயங்கும் சொல்வன்மை .. எதிரியை திணறடிக்கும் அரசியல் ..தெளிவாய் அறிவாய் .. எல்லோரும் வியக்கும் அரசியல் ஆளுமை ..இவையெல்லாம் கண்ட தமிழகம்தான் இன்று கிறுக்குதனத்தை .. மற்றவர்கள் நம்மை கேவலமான பார்க்கும் விதத்தில் பேசிதிரியும் அடிமைகளின் பேச்சை நாடே காரி துப்புகிறது.. எனக்கு தெரிந்து ஒருவர் கூட சரியாக இல்லை எதிலும் தெளிவற்றவர்களாக பெரும் முட்டாள்களாக எதைப்பற்றிய அறிவுமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.. இவர்களை இப்படியே வைத்திருந்திருக்கிறார் ஜெயலலிதா .. யாரையும் சுயமாய் சிந்திக்கவிடாமல் அடிமைத்தனத்தை ஊறிப்போனவர்களாய் .. எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்து கொள் ஆனால் பேச கூடாது .. பேசினால் மானம் போய்விடும் என்றறிந்து செருப்பைவிட கேவலமாக வைத்திருந்தார் இப்போதுதான் அதன் ரகசியம் நமக்கு புரிகிறது..
..
எவ்வளவு திறமையானவர்களை தந்த தமிழகம் .. இன்று இந்தியாவின் முன் தலைகுனிந்து நிற்கிறது அதிமுகவில் ஒருவன் கூட அறிவோடு பேசுவாரா என தேடிபார்த்தாலும் கிடைக்கவில்லை.. காரணம் அங்கே எவரும் கொள்கை ஈர்ப்பாலோ.. அல்லது அரசியல் அறிவுடையோரின் பின்பற்றியதாலோ
சமூகநீதிக்கான களம் இது என்பதாலோ.. நமக்கான உரிமையை பெற இதுவே சரியான கட்சி என்பதாலோ இணையவில்லை மாறாக ஒருவித மாய கவர்ச்சியில் மயங்கி தன்னை இழந்தவனை .. காலம் காசு பார்க்க தகுந்த இடமென நம்பவைத்ததால் அங்கு வந்தான் .. அறிவு சுயமரியாதை மானமெல்லாம் அவனுக்கு தேவைபடவில்லை..
..
தம் மக்களுக்காக போராட திமுக போன்ற இயக்கங்கள் இருக்கிறது அது எதை செய்தாலும் அது சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டதாக இருக்கும்
தொலைநோக்கு திட்டங்கள் .. சமூகநலன் சமூகநீதி மக்கள் நலன் இவையெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே கிடைத்தது அதை வேண்டாமென பொய் பிரச்சாரத்தை நம்பி.. சில பாசிச சக்திகளின் தந்திரத்தில் நம்மை அறியாமலேயே விழுந்ததால் இன்று நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாய் .. மண்ணும்,கலாச்சாரமும் மக்களும் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறார்கள்..
இந்த மடையர்களை தேர்ந்தெடுத்ததின் பலன் நமது உரிமையும் உடைமையும் பறிபோகிறது.. நாமே தேடிகொண்ட வினை..
வெளியில் தலைகாட்ட முடியவில்லை தமிழகத்தை சேர்ந்தவனென்றாலே பூயுட்டிபுல் காஷ்மீர் பாடுகிற லெவலில் தான் நினைக்கிறார்கள் .. திறமையானவர்களை சிலரே நம்மை காத்துநிற்கிறார்கள் ..அவர்களை கவனித்தால் அது திராவிடம் தந்ததவர்களாக இருப்பார்கள் திருச்சி சிவாவைப்போல ஒரு சிலரால் தான் தமிழகம் மானம் காப்பாற்ற படுகிறது.. தமிழகம் இனியேனும் விழித்துக் கொள்ளவேண்டும்.. நமக்கான இயக்கம்,திமுகதான் என்பதை உணரவேண்டும்.. அப்போது விடியும் இழிவு நீங்கும்..
..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment