Friday, July 13, 2018

தமிழன் கலைகள்

#தெருகூத்து.. .. ஒரு அந்திபொழுதில் பாபநாசம் கீழவீதியில்.. சிலர் நடனமாடிக்கொண்டிருந்தார்கள் சிறிய வேன்..அதில் இரண்டு ஒலிப்பெருக்கிகள்.. ஒருவர் எம்ஜிஆர் போலவும்.மற்றொருவர் சிவாஜி போலவும் அலங்கரித்துக் கொண்டு கூட ஒரு பெண் ..இசைத்தட்டிற்கு ஏற்ப..நடனம் சிலநேரம் நளினமாயும் சிலநேரம் விரசமாயும்.. விரித்து வைத்த துண்டில் தான்..காசு விழுந்தபாடில்லை. நேரம் ஆக ஆக விரசம் கொஞ்சம் தூக்கலாய்.. ஒருபுண்ணியவான் சில்லறைகாசை போட துவங்கியது வசூல்.. எதிர்பார்த்து இல்லையெனினும்.. ஆட்டம் முடிந்த பிறகு அவர்களை அழைத்து.. தேநீர் கொடுத்து நானும் அருந்திக்கொண்டே அவர்களோடு பேச ஆரம்பித்தேன்.. முன்பு போல் இல்லை.. அப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் ரிக்கார்ட் டான்ஸ்(இசைத்தட்டுநடனம்) வைப்பார்கள் இப்போதெல்லாம் அழைப்பதில்லை .. என்றார் நீங்கள் ஆடுவது எந்தவகையில் சேரும் என்றேன்.. #தெருகூத்து..என்றார்.. தெருகூத்து. அழகியகலை.. புராணக்கதைகளை மட்டுமல்ல சமூகம் சார்ந்த.விடயங்களை,மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்பட்டது.. தெருமுனைக்கூத்து.. நல்ல விடயங்கள் விடியவிடிய மக்கள் பார்த்து ரதித்தார்கள் தஞ்சை போன்ற நெல் விளையும் மண்ணில் கோடைக்காலத்தில் காய்ந்த நிலங்களில் கொட்டகையிட்டு கூத்து நடக்கும்.. பிரபலமானவர்கள் முதல் அறியபடாத கலைஞர்கள் வரை நாடகம் வில்லுபாட்டு தெருகூத்து என .. தூள்கிளப்பும்.. மக்கள் வெயில்கால இரவுகளை இப்படி இன்பமாய் கழித்தார்கள் கலையை மதித்தார்கள்.. நற்சிந்தனைகள் பாமரனை சென்றடைய மிகவும் உதவிய ஒரு அற்புதமான கலை.. அதை நீங்கள்.. தெருமுனையில் இசைத்தட்டிற்கேற்ப நடனமாடி..சிதைக்கிறீர்கள் என்றேன். அவர் விழியோரம்..நீர்.. அவரைச்சொல்லி குற்றமில்லை எம்ஜிஆர் வேசம் கட்டினால் தான் மானம்கெட்ட தமிழன் பார்ப்பான் என்கிற நிலையை..தமிழகம் செய்து விட்டது சினிமா மோகம் .. அரிதாரம் வெள்ளித்திரை நடிக்கிறவனை மட்டுமே கலைஞனாய் அங்கீகரித்ததும் அவன் பின்னால் சென்றதும்.. மண்ணின் கலைகள் கலைசார்ந்த நாடகம் இசை இவையெல்லாம் வேண்டாததாயிற்று.. சினிமா மோகம் அந்தளவிற்கு மக்கள் மனதில்..புறையோடிருக்கிறது... இயல் இசை நாடக வாரியம் இதற்காக எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு #கலைமாமணி கிடைத்தால் போதும் .. தமிழர் திருவிழாக்களில் பண்டிகைகளில் அரசே கிராம கலைகளை நடத்த அதற்கான முயற்சியை செய்யலாம்.. கலைஞர் ஆட்சியின் போது சென்னையில் #மானமிகு_கனிமொழி பொங்கல் விழாவை நடத்தினார் ..நிறைய கலைஞர்கள் பங்குபெற்றார்கள்.. திராவிடர் கழகம் தொடர்ந்து கலை இரவுகளை தமிழர் திருநாளில் நடத்துகிறது.. எனினும் இது போதாது .. அரசு விழாக்களில் பார்பன கூத்தாடிகளை பரதம் என்ற பெயரில் ஆடவிட்டு ரசிப்பதை விட தமிழர் கலைகளை ..தமிழ் கலைஞர்களை பயன்படுத்தலாம் .. இன்றைக்கும் தஞ்சை அருகே திட்டை போன்ற கிராமங்களில்..வெயில்காலங்களில்..தெருகூத்தும்..நாடகங்களும்.நடப்பதுண்டு.. இன்னமும் மாலைவேளையில் தெருமுனை பிரச்சாரம் தெருமுனை கூத்து நடப்பதுண்டு ஆனால் மக்கள் தங்கள் கலையை இசையை மறந்து ...சினிமா போன்ற வெளிச்சத்தை நாடியதன் விளைவு ..நிறைய கலைஞர்கள் பிற தொழிலை தேர்ந்தெடுத்து சென்றுவிட்டார்கள்.. அரிதாரம் பூசி வந்த உரத்த குரலில் கம்பீரமாய் ..ஆனமேல வரான் பாரு..என்றாலே உள்ளம் துள்ளுமே.. கரைந்து/ மறைந்து போனது தமிழனின் மரபு வழி கலைகள் .. #கூத்து.. இன்னும் சில காலம் கழித்து இதுகூட.. இல்லாமல் போகும்.. .. #தெருகூத்து_தெருவில். .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment