Monday, July 9, 2018

சாரட்...

சாரட் வண்டியில் ஆசிரியர் பவனி வந்தது கண்டு சிலர் எரிச்சல் அடைகிறார்கள்.. பல்லக்கில் வருவதை சுயமரியாதை இழுக்கென்றீர்கள் இப்போது சாரட் பவனி சரிதானா என்கிறார்கள்.. .. எரிச்சல் அடையுங்கள்.. பாப்பான் பல்லக்கில் போகலாம் சத்ரியன் தேரேறலாம் என்றால் .. நாங்கள் பரிவட்டமும் கட்டுவோம்.. சாரட் வண்டியில் குடையில் கீழமர்ந்தும் வருவோம்.. 1948 லேயே பெரியாரை சாரட் வண்டியில் அழைத்துவந்த வரலாறு உண்டு.. இவர்கள் கோவம் அதுவல்ல.. குடந்தையில் நடந்த மாணவர் எழுச்சி பேரணியை கண்டு வயிறெரிகிறார்கள் .. அடுத்த தலைமுறைக்கு பெரியாரை கொண்டு சேர்த்திருக்கிறார் ஆசிரியர் என்ற கோபம் அவர்களின் பேச்சில் எழுத்தில் தெரிகிறது.. ஒரு இயக்கத்தின் வளர்ச்சி சரியான பாதையில் பயணிக்க வேண்டுமெனில் அது இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் குறிப்பாக மாணவர்களிடத்தில் கொள்கையை ..சித்தாந்தத்தை, பகை எது என்பதை பகைவர்களின் சூழ்ச்சிகளை .. எப்படி எங்கிருந்து எங்ஙனம் வருவார்கள் அவர்களை எதைகொண்டு வீழ்த்த வேண்டும்.. அறிவாயுதம் கொண்டு பரந்த சிந்தனையோடு ...தெளிவாக.. எதிர்ப்பை பகைவர் எழவே முடியாதவாறு செய்தல் எப்படியென பயிற்சியளிக்கவேண்டும்.. நாளைய சமூகம் விழிப்புணர்வோடு .. எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்த இதுபோன்ற பயிலரங்கங்கள் அடிக்கடி அமைத்திட வேண்டும்.. .. எதிரிகள் பதறுவதிலிருந்தே தமது கடமையை சரியாக செய்துவருகிறார் ஆசிரியரென தெரிகிறது.. சமீபகாலமாக ஆரியர்கள் மீடியாக்களில் அதிகளவில் பங்கெடுப்பதும் .. ஊடகங்கள் ஒரு பாப்பான் இல்லாமல் எந்த விவாத நிகழ்வையும் நடத்துவதில்லை என்ற எழுதபடாத விதி .. செயல்படுத்தபடுகிறது இந்நிலையில் திராவிடம்.2.0 திராவிட சிறகுகள் ..திராவிடம் அன்றும் இன்றும் என ..பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் கருத்தரங்கள் சொற்பொழிவுகள் நிறைய நிகழ்த்தபடுகிறது.. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள்.. நாளைய தலைமுறையின் நலன் காக்க.. இன்றைய இளைஞர்களிடம் திராவிடம் என்றால் என்ன..,அதனால் அடைந்த பயன், பலன், என்ன என்பதை விரிவாக சொல்லி புரியவைக்கவேண்டும்.. எப்படியெல்லாம் பார்பனர்கள் நமது உரிமைகளை பறிக்க நமக்கெதிராக நம்மவர்களையே பேசவைத்து.. மிக சாதூர்யமார காய் நகர்த்தும் வேளையில்.. நாம் சூறையாடபடுகிறோம் எமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகிறது என்றறியாமல் நாம் மௌனமாய் இருப்பதுதான் கொடுமை.. நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து மக்களிடையே பேசியும் கலந்துரையாடியும் நமது நிலம் நமதுரிமை இனம் மொழி கலாச்சாரம் எதையும் வந்தேறிகளுக்காக விட்டுகொடுக்க முடியாது என்று பிரச்சாரம் செய்வோம்.. .. சிலர் எரிச்சலைடவது இயலாமையில் வருவது .. என்னதான் ஆரியக்கூத்தாடினாலும் தமிழினம் காரியத்தில் கண்ணாயிருக்கிறதே என்ற எரிச்சல் .. இங்குள்ளவனுக்கு எவனுக்கு தகுதியில்லை என எண்ணி பெரிய பூச்சாண்டி காட்டி அழைத்துவந்தால் .. #Goback சொல்லி கதிகலங்க வைக்கிறானே என்ற எரிச்சல்.. சுயமரியாதையோடு மானத்தோடு வாழச் சொன்னால் .. நமது வழி நமது இனம் நமது சமூகம் மானத்தில் விளைந்ததென்று சொன்னால் சிலர் நக்கிதான் குடிப்பேன் என்கிறார் அதையும் நல்லதென்கிறார் என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஒப்ப நிற்கிறார்.. .. அறிவெனும்,ஆயுதம் கொண்டு அறம் சமைப்போம் வீணர்களை வீழ்த்துவோம் ..எத்தனை ஆண்டானாலும் என்னதான் முயன்றாலும்.. பெரியாரின் பெயரன்கள் .. வீறுகொண்டு எழுந்து நிற்கும் போது ஆரியம் வீழும்.. எழவே முடியாதவாறு வீழும்.. வீழ்த்துவோம் .. பகைவர்கள் கதி கலங்குகிறார்கள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment