Friday, July 27, 2018

தமிழர் செய்த தவம்

ஒரு தனிமனிதனின் சாதனைகள். உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி.. அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே .. எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்குகிறதே.. இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை.. அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோய் விழுந்து மண்ணாகிவிட்டார்கள்.. அரசியலின் அரிச்சுவடியை இவரிடம் கற்கிறார்கள் .. எப்படி சாத்தியமாயிற்று.. இதோ இப்போது உடல்நிலை பாதிப்பின் போதும் .. கட்சிகாரனை .. கதறவிடாமல் சாமிக்கு மண்சோறு தின்னச் சொல்லாமல்.. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு என்று ஒலிப்பெருக்கி கட்டி அலறவிடாமல்.. சொத்து வரி உயர்த்திய அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் போராட்டமென அரசை அலறவிடுகிறது திமுக இதுதான் கலைஞர் சொல்லி தந்த நடத்தி காட்டிய அரசியல்பாடம்.. யாருமே எதிர்பார்க்காத .. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி.. .. இன்றைக்கும் வசைபாடுவோர் அரைகுறைகளை கருத்தோடு இவர்மரணத்தை நேக்கி நிற்கிறார்கள் ..ஒன்று தெரியுமா மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே.. இவரை கண்டுபடிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. கலைஞரே தமிழகத்தின் வரலாறு .. .. அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே.. இந்தியாவின் வழிகாட்டி.. அரசியல் பல்கலைகழகம்.. வாழ்வியல் அற்புதம் தொண்டர்களின் மூச்சு.. .. கலைஞர் தமிழனின் வரம். தமிழ் செய்த தவம்.. இனத்தின் முத்து மானமுள்ள தமிழரின் சொத்து.. .. #எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment