Thursday, July 19, 2018
பாஜக நாட்டின் சாபகேடர
இந்தியாவில் 1 நிமிடத்திற்கு 4 பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள்... 4 ஆண்டுகளில் 1,10, 333 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய பாஜக அரசு அதிர்ச்சி தரும் வகையில் அறிவிப்பு !!
2014 ம் ஆண்டு 36,735
2015 ம் ஆண்டு 36,735
2016 ம் ஆண்டு 38,947
2017 ----- ம் ஆண்டு அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில்
மத்திய பாஜக அரசின் இந்த தகவலை மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் Kiren Rijiju கிரன் ரிஜிஜூ அறிவித்திருக்கிறார்..
இது இல்லாமல் 19 லட்சம் கடும் குற்றங்கள் நடந்திருப்பதாக கூறுகிறார் .. இது அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. எனில் பதிவு செய்யபடாத குற்றங்கள் கொலைகள் கற்பழிப்புகள் 50% விழுக்காடுகளுக்கு மேல் வரும்.. இது விடுதலை இந்தியாவில் எந்த ஐந்தாண்டு ஆட்சியிலும் இல்லாத அதிகம் குற்றங்கள் நடந்திருக்கிறது .. கொலை கொள்ளைகளை மதத்தின் பெயரில் செய்தால் தங்கள் சிந்தாந்தத்தை சொல்லி செய்தால் அமைச்சரே வரவேற்று பரிசுகள் தரும் நிலை..
..
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்ற எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன அதுவும் தலித் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்திருக்கிறது பெண்குழந்தைகள் பாலியல் தொல்லை தருவது முன்னெப்போதுமில்லாத அளவில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக்கபடுகிறது கடுமையான சட்டங்கள் இல்லை.. சிறுமிகளை வன்புணர்வு செய்யும் மிருகங்களுக்கும் கருணை காட்ட சொல்லும் முற்போக்குவாதிகளின் பிற்போக்கு ..
மீண்டும் மீண்டும் இதே தவறுகள் அதிகரிக்க ஒரு காரணமாகிறது.. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துடையவன் தான் ஆனால் இது போன்ற மகாபாவிகளை விட்டுவைப்பது கூட சமுகத்திற்கு கேடு.. அரசியல்ரீதியான சாதி மத மோதல்களில் ஏற்படும் சட்டென்ற உணர்ச்சியில் செய்துவிடும் குற்றங்களோடு இது போன்ற வன்கொடுமைகளை ஒப்பிட முடியாது..
..
ஆட்சியாளர்கள் மதவெறி சாதிவெறியை தூண்டுதல் ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திருப்பதும்.. மதத்தின் பெயரை சொல்லி அராஜகம் செய்ய தூண்டுவதும் ..அப்படி கலவரத்தில் ஈடுபடுவோரை .. கைது செய்தாலும் விடுவித்து மரியாதை செய்வதும்.. அதை மத்திய அமைச்சரே செய்வதும் இதுவரை நாடு கண்டிராதது .. குற்றவாளிகளுக்கு அமைச்சரே பாதுகாப்பளிப்பது அரசியல் சாசன விதிமீறல் மட்டுமல்ல வகிக்கிற பதவியை தவறாக பயன்படுத்தலும் ஆகும் .. ஆனால் இதை மத்திய அரசோ மோடியோ.. அவர்களின் தலைமையோ கண்டிப்பதில்லை மாறாக மறைமுகமாக ஆதரவை தருகிறார்கள் ..
அதனால் தான் இந்த நான்காண்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதுவும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. ஒருவேளை இதுவும் சாதனை என்று தமிழிசை வகையறாக்கள் சொல்லி திரியலாம்..
..
பாஜக நாட்டின் சாபகேடு
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment