Tuesday, July 3, 2018
தமிழிசை
மீம்ஸ்களை பொருத்தவரை என்னை பரட்டை என்று எழுதுவது , எனது நிறம் மற்றும் முடி குறித்து கேவலமான முறையில் விமர்சனம் செய்வது கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது இதெல்லாம் என்ன நாகரீகம். எனது குடும்பத்தினர் மற்றும் கணவர் , சுற்றத்தார் இது குறித்து மிகவும் வருத்தமாக பேசுவது உண்டு. சில நேரங்களில் என்னிடம் கூறுவார்கள். நான் எதையும் கேட்க மாட்டேன் என்று அவர்களுக்கு தெரியும். நான் தமிழிசை அல்ல...டூமிழிசையாக தற்போது மாறிவிட்டேன்...!
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ..பாஜக மாநிலத் தலைவர்..
..
நிச்சயமாக கண்டனத்திற்குரியது ..குறிப்பாக இதை திமுகவினர் பெருமளவில் செய்கிறார்கள் என்பது வெட்ககேடானது.. ஒருவரின் உடல்மொழி உடை, நாகரீகம் பற்றி பேசுவதென்பது தனிநபர் தாக்குதலே இதை என்ன காரணம் சொன்னாலும் ஏற்கமுடியாது
அவரின் கொள்கையோடு கருத்தியலோடு நாம் சண்டை கூட போடுவோம்.. அவரின் அரசியலை கேடுகெட்ட நிலை என்பதும் அவரை போன்ற மிகவும் பின்தங்கிய இன்னும் சொல்லபோனால் வர்ணாசிரம கோட்பாடுகளால் மிகவும் பாதிக்கபட்ட சமூக பின்னணியில் இருந்து வந்தும் இன்னமும் ஆரியர்களின் அடிவருடியாக இருக்கிறாரே என ஆதங்கம் படுவோம்.. அவர் ஏற்றுகொண்ட கொள்கை தமிழுக்கு தமிழனினத்திற்கு .. எதிரான போக்கை கொண்டதென்பதால் அவரை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்ப்போம்..அதில் மாற்றுகருத்தே இல்லை.. ஆனால் அவரின் உடல்மொழியை செய்கைகளை .. அவரின் தலைமுடியை கிண்டல் செய்வதை ஏற்கமுடியாது..
..
திராவிடம் பேசுகிற நாம் பெண்களை மதிக்க தெரிந்திருக்கவேண்டாமா.. அரசியலில் பெண்கள் வரவேண்டும் .. ஆண்களுக்கு நிகரான பதவிகளை அலங்கரிக்கவேண்டும் ஆண் பெறுகிற உரிமைகள் அனைத்தும் மகளிருக்கு வேண்டும்.. கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுங்கள் என்ற பெரியாரின் பின்பற்றுகிற நாம் .. பெண்களை கேலி செய்தும் அதை நியாயபடுத்துவதும் சகிக்கவில்லை.. தமிழசையின் அரசியலோடு கடும் விவாதங்களை விமர்சனங்களை வைப்போம்.. எல்லாதுறைகளிலும் பெண்களின் பங்கை உறுதி செய்கிற .. அதற்காக போராடுகிற இடத்தில் நாம் இருக்கிறோம்.. பெண்கள் மதம் சாதி குடும்பம் என பல்வேறு நிலைகளில் அடிமைபடுத்தபட்டு அல்லது ஒதுக்கிவைத்து இதெல்லாம் ஆண்களுக்கானதென்ற மனபான்மையோடு வாழ்கிற சமூகசூழலில் ஒரு சிலரே பொதுவாழ்விற்கு வருகிறார்கள்.. முன்பிருந்ததைவிட பெண்கள் பொதுவாழ்விற்கு வர தொடங்கியதற்கு நாம்தான் காரணம் எனினும் அவர்களை வரவிடாமல் செய்கிற செயலுக்கும் நாமே துணைபோகிறோம்.. திராவிட கருத்தியிலை ஏற்றுக்கொண்டவர்கள் ..நகைச்சுவைக்காக கூட கேலி கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும்..
தமிழிசையின் பேச்சுகள் அவரின் அரசியல் அறியாமையை முழுமைபெறாமையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.. தமிழக மக்கள் இப்போதே பாஜக ஆட்சிக்கு தயாராகிவிட்டார்கள் என்றதையெல்லாம் நகைச்சுவை எடுத்துகொண்டு போய்விடவேண்டும்..
..
பெண்களுக்கு 33% விழுக்காடு வேண்டுமென கேட்கிற காலகட்டத்தில் பெண்களின் அரசியல் பேசபட போற்றபட... கைதட்டி வரவேற்கபட வேண்டியது அவசியம்.. எதிர்கருத்தாளர்களை கருத்தை கொண்டு தெளிவை கொண்டு உறுதியாக எதிர்ப்போம் கொள்கையில் விட்டுவீழ்ச்சியில்லை.. பாசிசத்திற்கு துணைபோகும் யாராகினும் அவர் நம் இனத்தானாயினும் எதிர்ப்போம்..
..
தமிழிசை தன் குடும்பத்தார்கள் மிகவும் வருந்துவதாத சொல்கிறார்..
நாமும் வருந்துவோம்..
தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்போம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment