Saturday, July 7, 2018

ஊடக அறம்

தமிழகத்தில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சொல்கிறார் ..ஹிந்து ராம்.. தாங்கள் பலவீனமான அரசு அல்ல என்பதை காண்பிக்கவே இது போன்ற அத்துமீறல்கள் கையாளப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கூட அவதூறு தண்டனை சட்டம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படும்...ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 153A , 505 போன்ற மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறி வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.. தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் மீதான தாக்குதல் கடுமையாக்கபட்டிருக்கிறது குறிப்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி 489 ம் இடத்திற்கு தள்ளப்பட்டது ‌ அதற்கான காரணம் சொல்லபடவே இல்லை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போது News 7 சிறிது காலத்திற்கு அரசு கேபிள்களில் இருந்து நீக்கபட்டிருந்தது சத்யம் மதிமுகம் தொலைகாட்சிகள் அரசை எதிர்த்து செய்திகள் வெளியிடுவதால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது ‌ தூத்துக்குடி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தை ஒலிபரப்பு செய்த NEWS 18 தொலைகாட்சி தொடர்ந்து 12 மணி நேரம் அரசு கேபிளிலிருந்து நீக்கபட்டது டாஸ்மாக்கிற்கு எதிராக ‌நடந்த போராட்டத்தை ஒளிபரப்பு செய்ததால் சன் நியூஸ் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. .. தினகரன் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டதால் காவேரி நியூஸ் நீக்கினார்கள் அது வழக்கு தொடர்ந்து இப்போது நீதி மன்றத்தில் ‌நடைபெற்று வருகிறது அரசுக்கு எதிராக ஊழல் வழக்கு செய்திகளை வெளியிட்டதற்காக தந்தி டிவி 8 நாட்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது. பொன் ராதாகிருஷ்ணன் , ஹெச் ராஜா போன்றவர்கள் தமிழ் நாட்டில் மலை பகுதிகளில் நக்ஸல்கள், மாவோயிஸ்டுகள் பயிற்சி பெற்று வருவதாக பொய் சொல்லி வருகிறார்கள்.‌. இதுபோன்ற செய்திகளை குறிப்பாக பாஜகவினர் சொல்லும் செய்திகள் அதிகளவில் மக்களை சென்றடைய அரசு கேபிள் பயன்படுகிறது.. MSO செயல்பாடு முழுவதும் எழில் என்பவர் கட்டுபாட்டில் உள்ளது. சில நேரங்களில் அமைச்சர்கள் இயக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட செய்திகளை தடை செய்ய நினைத்தால் பட்டனை over gain Mode. ல் மாற்றி விடுவார்கள். உடனே செய்திக் தெளிவாக தெரியாமல் போய்விடும்... .. இதுபோன்ற அத்துமீறல் நிறைய பார்த்தாயிற்று ஊடகங்களும் அறம் தவறி செயல்படுகின்ற என்பதை மறுக்க முடியாது .. ஊடகங்களில் பாஜகவிற்கு வேண்டியவர்கள் அல்லது விரும்புகிறவர்களை அடிக்கடி அழைத்து பேச விவாதிக்க அழுத்தம் தரபடுகிறது அதையும் வாய்மூடி ஏற்கிறது ஊடகங்கள் .. அதையும் மீறி செய்திகள் வந்தால் உடனே அரசு கேபிளிலிருந்து நீக்கம் அல்லது தடை செய்கிறது அரசு.. .. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் கூட இப்படி கருத்து சுதந்திரம் நசுக்கபடவில்லையே எடப்பாடியால் முடிகிறதே .. என நாம் நினைத்தால் அங்குதான் பாசிசத்தின் பிடி நமக்கு புரியும் அதன் பின்னில் பாஜக இருப்பது தெரியும் .. இந்த எடப்பாடி அரசு எங்களின் கண்ணசைவில் இயங்குகிறது கேனச் சிரிப்பை சிரிக்கும் எடப்பாடி எங்களின் தலையாட்டி .. மக்கள் எதிர்ப்பு வரும் போது பழியை இந்த கேனயன்கள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்வோம் .. ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து எழுப்படும் குற்றசாட்டுகளை வெகுமக்கள் கண்டுகளிக்கும் ஊடகம் மூலம் மட்டுமே சென்றடையுமென்று எண்ணுவது மடமை.. சமூகவலைதளங்கள் நாளேடுகள்.. என இந்த மத்திய மாநில அரசின் கேலலமான கேடுகெட்ட ஆட்சியை பார்த்து, விமர்சித்து கொண்டுதானிருக்கிறார்கள் .. .. ஊடகங்களை முழு சுதந்திரத்தோடு செயல்பட அனுமதிக்கவேண்டும் அதேவேளை ஊடகங்கள் அறத்தோடு செயல்படவேண்டும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment