Monday, July 30, 2018

கலைஞர்..

கலைஞர்.. இப்போது கலைஞரின் இருப்பை மக்கள் அறிய/ விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.. தனி ஒருவனாய் இந்த சமுதாய ஏற்றதாழ்வை களைந்து.. பள்ளத்தில் இருந்தவனை ஏற்றிவிட்டவர் என்ற சான்றுகள்.. வீதிகளில் இரவில் உறங்குவது கண்டு.. இந்த மனிதன் ஏதோ செய்திருக்கிறான் இல்லையெனில் .. கொட்டும் மழையிலும் நள்ளிரவில் வீதியில் காத்துநிற்க இளைஞர்கள்.. முதல்பட்டதாரிக்கு முன்னுரிமையில் படித்து வந்தவன்.. ஏக்கத்தோடு நிற்கிறான்.. இனத்தை காத்த காவல்தெய்வம் மரணத்தோடு போராடுவது கண்டு அடிவயிற்றில் ஏதோ கலங்குவது கண்டு திகைத்துநிற்கிறான்.. .. ஆம் பெரியாரின் சிந்தனையை செயலாக்க கலைஞரெனும் மாமனிதன் கிட்டாமல் போயிருந்தால் இன்று குலத்தொழிலோடு மல்லுக்கட்டிகொண்டிருப்பார்கள்.. தொலைநோக்கோடு கலைஞர் பெருமகன் தீட்டிய திட்டங்கள் இன்று கற்சிலையோடு பேசும் அதிகாரம் பெற்றான்.. வர்ணத்தை சொல்லி வாசலில் நிறுத்திய பார்பன சதியை .. சட்டம் கொண்டே முறியடித்து கருவறைக்குள்ளும் நுழைய காரணியாய் இருந்த பெருவுடையார் எம்மான் கலைஞர்.. இன்று மானமுள்ள தமிழர் நெஞ்சம் நேற்று எழுந்து வா என்ற குரலாய் ஒலித்ததே.. காவிரியின் கதவை துளைத்து கலைஞரின் காதுகளில் இசைத்ததே.. போராடி போராடி வென்ற வாழ்வில் இன்னமும் போராட்டம் .. .. கலைஞர்..எனும் சொல் தமிழகத்தின் வரலாறு.. தமிழகத்தின் வளர்ச்சி..தமிழகத்தின் முன்னேற்றம்.. கலைஞர் சிந்தனையில் உதித்தவையெல்லாம் தொலைநோக்கோடு.. தமிழகம் வளம் பெற மக்களின் நலன் பெற அமைத்தது.. #பெரியாரை நினைத்ததை .. #அண்ணா முயன்றதை செய்து காட்டியவர் எம் பெருவுடைபெருமகன் கலைஞர் .. காலம் தந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி.. பெரியாரை உள்வாங்கி ..சமநீதியை நிலைநாட்டி சமூகத்தின் நீதியை காத்து.. ஒடுக்கபட்டவர்களை உயரத்தில் ஏற்றி.. பிற்படுத்தபட்டவரின் உரிமைகளை சில உயர்வகுப்பினர் பறிப்பதை தடுத்து .. கல்வி வேலைவாய்ப்பில் அனைத்துதரப்பினரின் உரிமையை உறுதிசெய்து.. சமத்துவ சமுதாயம் சமைத்தவர்.. .. தமிழகத்தில் ஒவ்வொருவரும் கலைஞரால் பயன்பட்டிருக்கிறார்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ .. கலைஞரின் திட்டங்களால் பலனை அனுபவித்திருக்கிறார்கள்.. தத்தளித்த படகை கரைசேர்த்ததைப்போல கலைஞர் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிருக்கிறார்.. இன்னும் செய்திருக்கலாம் .. ஆம் அதற்கான வாய்ப்பை தமிழர்கள் தொடர்ந்து வழங்காமல் போனதால் .. தொடர்ந்து வந்தவர்களின் காழ்ப்புணர்ச்சியால் காலதாமதமாகியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் எந்த தலைவரும் செய்யமுடியாததை செய்திருக்கிறார்.. எட்டாவது படித்தால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார் காமராஜர் ஆனால் படித்து வருவதற்குள் பிறகு வந்த பெரியவர் பக்தவச்சலம் நடப்பிலாக்காமல் போனார் அதை கலைஞர் தான் நடைமுறைபடுத்தினார்.. உயர்கல்வி சலுகைகள் தந்ததால் தான் இன்று இல்லம்தோறும் பட்டதாரிகள்.. இந்திய வரலாற்றிலேயே கலைஞர் அளவிற்கு திட்டங்களை செயலாக்கியவர்கள் யாருமே இல்லை.. .. கடைசியாக.. இன்றைய தேதியில் மத்திய சர்க்கார் அதிகாரம் இல்லாத மாநில சர்கார் பணியாளர்களிலும் உயரதிகாரிகளிலும் 70% பிரமாணன் அல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கலைஞர் தான்.. இது பலநூறு ஆண்டுகள், ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நடக்காத விஷயம். பல நூறு ஆண்டுகளாக‌ அதிகாரம் அவர்கள் பிராமணர் கையில் இருந்தது அதை மீட்டெடுத்தது திமுக அரசு என்பதில் பெருமை அடைகின்றேன்.. கருணாநிதி அரசுக்கு வலுசேர்க்கும் அவசியமும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கின்றது" என்றார் பெரியார்../1972ல் .. தெம்பூட்டும் கலைதோட்ட தேம்பாவனி.. அவர் பெருவாழ்வே தமிழ்நாட்டின் வரலாறு இனி!! .. #கலைஞர்_நிகரில்லா_தலைவர்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment