Thursday, July 5, 2018
பெருமாள்..பிரசாதம்
ரமண தீட்சதலு..
தலைமை அர்ச்சகர் திருப்பதி ஏழுமலையான் பேட்டியில் லட்டு பற்றியும் நீண்ட வரிசை பற்றியும் மிகப்பெரிய ஊழல்/ முறைகேடு நடக்கிறது என்று சொன்னவுடன் நம்ம ஆட்கள் பார்த்தாயா .. தீட்சகரே உண்மையை சொல்லிவிட்டாரென பரவசமடைகிறார்கள்.. முழு பேட்டியையும் பார்த்தேன் அவர் சொல்ல வருவது இதுதான் ..
அதாவது அறநிலையத்துறை முழுகட்டுபாட்டில் கோவில் போனவுடன் ஆகமவிதிகள் மீறபடுவதாகவும் நகைகள் கொள்ளை போனதாகவும், விஐபிகளுக்காக வெங்கடாஜலபதியே காத்திருக்கவேண்டியிருக்கிறதென்று சொல்கிறார்..
..
1996 க்கு பிறகு தெலுங்குதேசம் ஆட்சியில்தான்
கோவிலுக்கு வரும் பணம் நகைகள் சில குறிப்பிட்டவர்களின் ஆளுமையில் கொண்டு சேர்க்கபடுகிறது அதற்கான எந்த குறிப்போ ஆதாரமோ இல்லாமல் கணக்கில் வராமல் இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியது அதுவரை ஒரு சில குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பில் இருந்த நகை ஆபரணங்களை அரசே நிர்வகிக்க அதாவது தேவஸ்தானம் முழுகட்டுபாட்டிற்குள் என்ற முடிவு அரசு எடுத்தது.. அப்போதே அரசு கோவில் விடயத்தில் தலையிட்டால் சில ஆகமவிதிகளை சுட்டிகாட்டி காலகாமதாக நடத்தபட்டுவரும் ஆராதனைகள் .. தடைபடும் குறிப்பிட்ட பிரிவினரே அதை செய்யவேண்டுமென உயர்நீதிமன்றத்தை நாடினர் மிராசிகள்.. இடைகால தடைவிதிக்க மறுத்து பொருட்கள் சொத்துகள் நகைகளை கணக்கெடுப்பதிலோ நிர்வகிப்பதிலோ அரசு தலையிடுவதை தடுக்கமுடியாதென்றது ..அன்றிலிருந்தே இந்த பனிப்போர் தொடங்கியது.. இடையில் ஒன்றை சொல்லவேண்டும் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்தியதற்கு எதிரான வழக்கில் தீட்சதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகுதான் அதையே காரணம் காட்டி தொடர்ந்து மிராசிகளான நாங்கள் தான் கோவில் வரவு செலவுகளை பார்பதோடு திருப்பதி கோவில் நகைகள் எங்களிடமே இருக்கவேண்டும் எப்போது எந்த நகையை சிலைக்கு(பெருமாளுக்கு) சாத்தவேண்டுமென்ற ஆகமம் எங்களுக்கு தான் தெரியும் என்றார்கள் .. நாயுடு சர்க்கார் அவர்களுக்கு வழங்குவதாக இல்லை மீண்டும் இதை பாஜக தூண்டுதலில் துணையோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்..
..
லட்டுக்கான டிமாண்ட வரிசையில் நாள்கணக்கில் காத்திருப்பதெல்லாம் 96 க்கு முன்பும் இருந்தது .. அப்போதும் விஐபிக்களுக்கான தனிவரிசையும் தரிசனமும் நடந்தது அப்போதும் அதிகாரிகளும் ஆட்சியினரும் பணக்காரர்களுக்கு சிறப்பு வழிபாடு தரிசனம் லட்டு சலுகையென நடத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.. அப்போதெல்லாம் இதே அர்ச்சகர்களும் பணக்காரர்களுக்கு வால்பிடித்ததும் உயர் அதிகாரிகளை ஆட்சியாளர்களை திருப்திபடுத்தியதும் நடந்துகொண்டுதான் இருந்தது .. ஆனால் அரசு கட்டுபாட்டிற்கு வந்த பிறகுதான் வருவாய் இரட்டிபாக அல்ல ஒவ்வொரு வருடமும் பன்மடங்கு அதிகரித்ததாக சட்டமன்றத்திலேயே பேசியது பதிவாகியிருக்கிறது..
..
கோவில்களை இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்ற கோஷம் சமீபகாலமாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது அரசு அலுவலகராக சீனிவாச ராஜூலு நியமிக்கபட்ட பிறகு தான் உணவு குறைபாடை கண்டுபிடித்து எச்சரித்தார்
புதிய அதிகாரியாக சென்ற ஆண்டு வடஇந்தியாவை சேர்ந்த அனில்குமார் சிங்வால் பதவிக்கு வந்த பிறகு தான் ரமணா நிறைய பேச தொடங்கினார் ..
நேர்மையான அதிகாரியென பெயரெடுத்த அனில்குமார் சிங்வால் அங்கிருப்பதை தீட்சதகர்கள் விரும்பவில்லை.. அறநிலையத்துறையில் பிற மதத்தை சேர்ந்த அலுவலர்கள் சிலர் இருந்தார்கள் அவர்கள் கோவில் விடயத்தில் பங்குகொள்ளவதில்லை .. வரவு செலவினங்களை கணக்கிடும் பணியில் இருந்தார்கள் அதையும் இதே அர்ச்சகர்கள் தான் இந்துக்கள் மட்டுமே,பணிபுரியவேண்டுமென கூறி அழுத்தம் தந்தார்கள் 42 அலுவலர்கள் பணிமாற்றம் செய்யபட்டார்கள்.. ஆனால் குறிப்பாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை விடாமல் பிற சாதியினரும் அலுவல் பணிக்கு வந்ததை ஏற்க மறுத்த போராட்டம் தான் இன்று வேறு பரிணாமம் அடைந்திருக்கிறது.. அவாள்களிடத்தில் தரவேண்டுமென்ற கோரிக்கையை தான் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் ஆகமவிதிகளை காரணம் காட்டி ..அரசு செவிசாய்ப்பதாக இல்லை
அரசு நிர்வாகத்திலிருந்து அவாள்கள் நிர்வாரத்திற்கு வரவேண்டும் அதுதான் அவர்கள் விருப்பம்.. தெலுங்க தேசம் கட்சி இப்போது பாஜகவோடு நல்லுறவில் இ்ல்லையென்றவுடன் வெளிவந்து கதைக்க தொடங்கியிருக்கிறார்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment