Monday, July 23, 2018

தளபதி கையில் தமிழகம்

மோடியின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது... மோடி இந்துத்துவா தாலிபான் கொள்கைகளை பரப்பி வருகிறார். மோடியின் நடவடிக்கைகள் ஹிட்லர் மற்றும் மூசோலினை பின்பற்றி அமைந்துள்ளது. அவர் தம்மை மிகப் பெரிய சர்வாதிகாரியாக முன்னெடுத்து செல்ல முயன்று வருகிறார். எனவே பாஜக தனது பாரம்பரிய கூட்டாளியான சிவசேனா கட்சியை இழந்து விட்டது. 2019 ல் பாஜக 100 இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.. என்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. .. ஏற்கனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி செய்வது யார் என்ற போட்டி பாஜக , சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவசேனா சம்னா பத்ரிகை மூலம் மிகவும் கடுமையாக பாஜக வை விமர்சனம் செய்து வருகிறது. பாஜக தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் சிவசேனா தொடர்ந்து விமர்சனம் செய்த காரணத்தினால் 2019 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டமன்ற இடத்திலும் , 48 நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிடுவதென பாஜக முடிவு எடுத்திருக்கிறது .. தெலுங்கு தேசத்திலும் ஆந்திராவிலும் தங்கள் கூட்டாளிகளை இழந்து நிற்கிறது.. ஆந்திராவில் மிக கடுமையான எதிரியாக பாஜகவின் முன்னாள் நண்பர் சந்திரபாபு நாயுடு மாறிவிட்டார்.. பீகாரிலும் நிதிஷ் நிறம் மாறலாம் பாஜக தென்னகத்தில் காலூன்றவே முடியாத நிலை இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜகவை மக்கள் நேசிப்பதாக பொன்னர் சிரிக்காமல் சொல்லிவிட்டு போகிறார்.. .. அவர்களுக்கு இருக்கிற ஒரே ஆதரவு கேட்காமலே வளைந்து நிற்கும் அதிமுக தான் இந்த அடிமை கூட்டம் மக்கள் மனதிலிருந்து தூக்கியெறிபட்டு வெகுநாளாகிறது அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள் அது தேர்தல் வரைக்கும் தான் பிறகு இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்... 60 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் புதுபிக்கவில்லையென செய்திகள் வருகிறது நிறைய பேர் எம்ஜிஆருக்காக ஜெயாவிற்காக இருந்தவர்கள் இப்போது நடக்கும் அறிவுடை அமைச்சர்களின் ..? கூத்தால் வெட்கி வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் .. இந்த நிலையில் தான் சிலர் இடம் காலியாகிறதென்று எண்ணி ஏதாவது கிடைக்காதா என அரிதாரத்தோடு அலைகிறார்கள்.. .. பாஜக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை மக்கள் எழுத தொடங்கிவிட்டார்கள் ..நாடெங்கும் எதிர்ப்பு மெல்ல கிளர்ந்தெழுந்து பெரும் சுவாலையாய் தெரிகிறது .. பாஜகவிற்கு தமிழகத்தின் நண்பனாக அப்படி சொல்வது கூட தவறு அடிமைகளாக இருக்கும் அதிமுகவினர் ஒரு சில இடங்களில் வெல்வதுகூட பெரிய பலனை தருமென நம்புகிறார்கள்.. 39 அடிமைகளால் எந்தவொரு நல்லதும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை மாறாக தலையாட்டி தமிழகத்திற்கு தீங்கை மட்டுமே வரவழைத்திருக்கிறார்கள்.. .. 2019 ல் எந்த நிலையிலும் அதிமுகவோ அதற்கு துணை போகிறவர்கள்..பாஜகவிற்கு ஆதரவளிப்பவர்கள் வீழ்த்தபடவேண்டும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் மம்தா சொன்னதைப்போல தளபதி மிகப்பெரிய ஆளுமையாக வருவார்.. ஆம்.. தளபதி கைகளில் தமிழகம் வரவேண்டும் அப்போதுதான் தலை நிமிர முடியும்.. அதற்காக இப்போதிலிருந்து அருகில் இருப்போரிடம் கதையுங்கள் .. தெரிந்தவர்களிடம்.. நண்பர்களிடம்.. தெருமுனையில் .. சந்திப்போரிடம் பிரச்சாரத்தை தொடங்குங்கள்.. ஆம் மிகப்பெரிய வெற்றி.. தலைகனத்தோடு திரிபவர்களையும் முதல்வர் கனவோடு சினிமாவை விட்டவர்களையும் .. சாதிமதவெறி மடையர்களையும் கால் பிடறி ஓட ..வைப்போம் . திமுக ஒன்றுமட்டுமே தமிழக நலனுக்கானதென்று முழங்குவோம்.. .. நல்லதை விதைப்போம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment