Saturday, July 28, 2018

கலைஞரெனும் பெருமகன்

கலைஞரை விமர்சிப்போர் .. சாக சொல்லி பேசுவோர் துரோகமிழைத்ததாக சொல்வோர் யாரென்று பாருங்கள்.. ஈழத்தழிழனுக்காக துரும்பை கூட கிள்ளாதவன்.. மாறாய் சொந்த மண்ணை சிங்களனிடம் விற்றுவிட்டு அகதிகளாய் ஐரோப்பா நாடுகளில் குடியேறி தப்பித்தோமென ஓடியவனிடம் காசை வாங்கி இங்கே குரைத்துக்கொண்டிருக்கிறான்.. பாவம் காசில்லாதவன் அகதியாய் மண்டபத்திலும் கோடியக்கரையிலும் வந்திறங்கிய போது சொந்த நிலத்தில் தங்கவைத்தும் சொந்த காசை சிலவு செய்தும் பிழைப்பிற்கு வழி செய்தவன் திமுககாரன் .. ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞரைப்போல கவலைபட்டவர் எவருமில்லை .. எம்ஜிஆர் பிரபாகரனை கைது செய்தபோதுகூட .. ஏன் கீழ்தஞ்சை ..மற்றும் கடலோர மாவட்டத்தில் செக்போஸ்ட் போட்டு சிரமம் தந்தபோது கூட திமுககாரன்தான் எல்லாவற்றையும் சுமந்தவன் .. ஜெயலலிதா ஆட்சியில் பிரபாவை பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்ற போதும் ராஜீவ் கொலையில் திமுகதான் காரணமென்ற போதும்.. இன்றைக்கு கலைஞரை விமர்சிப்போர் எங்கிருந்தார்கள்..ராஜீவ் கொலை வழக்கில் யாருமே வழக்காட முன்வராத போது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்தது திராவிட இயக்கங்கள் தான்.. .. இறுதிப்போரில் கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்போரே.. யார் அன்றைக்கு ஆட்சியிலிருந்தாலும் எதுவுமே,செய்திருக்கமுடியாது .. சார்க் மாநாட்டில் இலங்கை எங்கள் நாட்டில் பலஆண்டுகளாக நடைபெற்று வரும் தீவிரவாதத்தை வேரறுக்க சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டு ஒப்புதல் பெறப்பட்டபோதே. விவேகத்தோடு காய்நகர்த்தாமல் .. சொந்த நாட்டு மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி பல்லாயிரமானோர் சாக காரணமாக இருந்து கடைசியில் தானும் கொடூரமாக கொல்லபட்டதற்கு திமுக எப்படி பொறுப்பாகுமென சிந்திக்க வேண்டும் .. கலைஞரின் ஆலோசனைகளை புறந்தள்ளி விவேகமற்ற அறிவிலிகளை உணர்ச்சிமிகு பேச்சை நம்பியதால் வந்த வினை .. ப.சிதம்பரம் அன்றைக்கே போரை நிறுத்துங்கள் தேர்தல் முடிந்தபிறகு பேசி தீர்க்கலாமென்ற போதும்.. கேட்காமல் வாஜ்பாய் வந்துவிடுவாரென நம்பியதும்.. கடைசிவரை தோக்கு (துப்பாக்கி) கைகொடுக்காது விவேகமான பேச்சுவார்த்தைதான் சுதந்திரத்தை பெற்று தருமென்ற வரலாறை மறந்ததுதான் காரணமே தவிர கலைஞரல்ல.. .. சாவு எல்லோருக்கும் வரும் .. இன்றைக்கு வயதுமூப்பின் காரணமாய் போராடிக்கொண்டிருக்கிற மனிதனின் சேவைகள் .. அவர் தந்த உழைப்பு .. செய்த பணிகள் அதனால் பயன்பெற்றோர் எதிர் அரசியல் புரிந்தவன் கூட வாழவேண்டுமென ஆசைபடுகிறான் .. சில அரைகுறை அறிதலோடு எச்சைகளாய் திரிபோர் சாக வேண்டுமென்கிறார்கள்.. கலைஞருக்கு இறப்பில்லை அவரால் பயன்பட்டவன் .. அவரின் முயற்சியால் தொடர்ந்து பயன்பெற போகும் சமுதாயம் இருக்குவரை .. காலமாய் இருப்பார்.. நீங்கள் கத்தி கத்தி கடைசியில் செத்துபோவீர் யாருமற்ற ..கேட்க ஆளில்லாமல் போவீர்கள்.. .. மௌனமாய் இருத்கும் இந்த பெருமகனின் இருப்பே சிலருக்கு எரிகிறதென்றால் .. இந்த தமிழினத்தின் மீதான தாக்குதலை இந்த மனிதனை எப்படி தடுத்திருப்பார் இன எதிரிக்கு சிம்மசொப்பனமாய் இருந்திருப்பார்.. பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவை நடைமுறையாக்கி .. மிகவும் தாழ்ந்திருந்த தமிழனின் நிலை உயர காலமெல்லாம் பாடுபட்டவரை ..சிலரின் ஏச்சுகள் என்ன செய்யும்.. ஒரு நாத்திகருக்காக லட்சபோலட்ச மக்கள் பிராரத்தனை செய்கிறார்கள்.. இதைவிடவா சிறப்பு வேண்டும்.. .. #சூரியனுக்கு_ஏது_கறை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment